பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்119

     இங்கே, 'மதி’ என்றது. அஷ்டமீ திதியிலுள்ள பாதிச்சந்திரனை; அதுவே
நெற்றிக்குவடிவத்திலும் ஒளியிலும் உவமையாம். பி - ம்: நிலவுடன்.      (180)

43.மணிமுடிசிரங்களோடுதறிபடவலயமொடணிந்ததோள்க
                                   டறிபட,
வணிகழலொடுந்துதாள்கடறிபடவயிலொடுகரங்களான
                                   தறிபட,
நணியவிரதங்கள் சாயவிவுளிக ணடுவறவளைந்த
                                சாபமுதலிய,
துணிபடவழிந்துமீளநடவினர்துவசபுயகன்பதாதிநிருபரே.

     (இ-ள்.) (வீமனம்புகளால்), சிரங்கள் - தலைகள், மணி முடியோடு-
இரத்தினகிரீடத்தோடு, தறிபட - துணிபடவும், அணிந்த தோள்கள்-அழகிய
புயங்கள்,வலயமொடு-வளைகளுடனே, தறிபட- துணிபடவும், உந்து தாள்கள்-
உயர்ந்தகால்கள், அணி கழலொடு -  அழகிய வீரக்கழலுடனே, தறிபட -
துணிபடவும்,கரங்கள் ஆன- கைகளானவை, அயிலொடு-(ஏந்திய) வேலுடனே,
தறிபட-துணிபடவும், நணிய - அருகில் வந்த, இரதங்கள்-தேர்கள், சாய-அழியவும்,
இவுளிகள்-குதிரைகள், நடுஅற - (உடம்பின்) நடுவிலே  அறுபடவும், வளைந்த
சாபம் முதலிய-வளைந்த வில் முதலிய ஆயுதங்கள், துணிபட-துண்டுபடவும்,
அழிந்து-, துவசபுயகன் பதாதி நிருபர் - கொடியிற் பாம்பையுடைய
துரியோதனனுடையசேனையரசர், மீள நடவினர் - பிற்படச் சென்றார்கள்;(எ - று.)

     உந்து தாள் - (அவரவரைச்) செலுத்துங்கால் எனினுமாம். ஆன, முதலிய-
பெயர்கள், கரங்களான என்பதில், 'ஆன' என்பது- முதல்வேற்றுமைச் சொல்லுருபு.
பதாதி-இங்கே, சேனைப்பொது.

44.- தன்னுடன் எதிர்த்தாரை அபிமன் அழித்தல்.

விசயன்மகனுந் தன்மீதுவரும்வரும் விருதருடலங்கள் யாவு
                                     நிரைநிரை,
தசைகுருதி யென்பு மூளையிவை யிவைதரணிமிசைசிந்தி
                                   வேறுபடவிழ,
வசையவிரதங்கடாவிவளைதருமணிசிலையுமம்புமாகி
                                   முனைமுனை,
திசைதொறுநடந்து சீறரவியெதிர்திமிர படலங்களான
                                    வடையவே.

     (இ-ள்.) விசயன் மகன்உம் - அபிமந்யுவும்,-தன்மீது வரும் வரும்-தன்மேல்
மிகுதியாக வருகிற, விருதர்-வீரர்களது, உடலங்கள் யாஉம்-உடம்புகளெல்லாம்,
நிரைநிரை-வரிசை வரிசையாய், தசை குருதி என்பு மூளை இவை இவை தரணிமிசை
சிந்தி-சதை இரத்தம் எலும்பு மூளை என்னும் இவற்றையெல்லாம் தரையிற் சொரிந்து,
வேறு பட-(உயிர்) வேறாகி நீங்க, விழ-இறந்துகீழ் விழும்படி, அசைய இரதம் கடாவி-
அசைந்துசெல்லும்படி தேரைச்செலுத்தி,-வளைதரும் அணி சிலைஉம் அம்புஉம்
ஆகி - வளைந்த அழகிய வில்லும் அம்பும் (கைகளில்) உடையனாய்,-முனைமுனை
திசைதொறுஉம் நடந்து - போர்க்களத்தில் (அவரவர்) எதிர்க்கிற இடந்தோறும்
சென்று, சீற-கோபித்துப் போர்செய்ய,-அடைய (அவ்வெதிரிகள்கூட்டம்) எல்லாம்,
ரவி எதிர் திமிர(ம்) படலங்கள் ஆன-சூரியன்முன் இருட்கூட்டம்போல ஆயின;
(எ- று.)

     மாற்றர்கூட்டங்கள் இருந்துவிடமுந் தெரியாதபடி மிகவிரைவில் மிகஎளிதில்
அழிந்தன என்க. எழுவகைத்தாதுக்களுள் இங்