சல்யம - அம்புமுனை. இவன், மத்திரதேசத்து அரசன்; பாண்டு மகாராசனது இரண்டாம் மனைவியாகிய மாத்திரிக்கு உடன் பிறந்தவனாதலால், நகுலசகதேவர்க்கு மாமனாவன். எய்பவனது பராக்கிரமத்தை அம்பின்மே லேற்றி, 'வீரசாயகம்' என்றது. வாயுஸு தன், சல்யன், வீரஸாயகம்- வடசொற்கள். சொல்லிய - (சிறந்தவனென்று) சொல்லப்பட்ட எனினுமாம். தருமபுத்திரன் துரியோதனனை யெதிர்த்துத் தாக்கி நாகபாசத்தாற்கட்டிவைக்க, துரோணன் வந்து கருடாஸ்திரத்தால் அந்நாகபாசத்தை விடுவித்துத் துரியோதனனை மீட்டுக்கொண்டு சென்றதாகப் பெருந்தேவனார் கூறியுள்ளார். (13) 14.- சல்லியனைக் குறுக்கிட்டு நகுலன் எதிர்த்தல். தம்முனோடுடன்றுவந்தசல்லியகுமாரன்றன்னை எம்முடனெதிர்ப்பைாயகிலிமைப்பொழுதிகல்செய்கென்னா வெம்முனைகடந்தபொற்றேர்வெஞ்சிலைநகுலன்றோன்றி அம்முனைகவந்தமாடவவனெடும்போர்செய்தானே. |
(இ -ள்.) தம் முனோடு - தனது தமையனான வீமனுடன், உடன்று வந்த - எதிர்த்துவந்த, சல்லிய(ன்) குமாரன்தன்னை - சல்லியனாகிய ஆண்மகனை (நோக்கி), 'எம்முடன் எதிர்ப்பை ஆகில்-எம்மோடு எதிர்க்கவல்லையானால், இமை பொழுது இகல் செய்க - ஒரு மாத்திரைப்பொழுது போர்செய்வாக,' என்னா- என்ற சொல்லிக்கொண்டு,- வெம் முனை கடந்த - கொடிய (பல) போரை வென்ற, பொன் தேர் - அழகிய தேரையும், வெம்சிலை - கொடிய வில்லையுமுடைய, நகுலன்-, தோன்றி - எதிர்ப்பட்டு, அ முனை கவந்தம் ஆட - அப்போர்க்களத்தில் தலையற்றஉடற்குறைகள் கூத்தாடும்படி, அவனொடுஉம் போர் செய்தான் - அச்சல்லியனோடும் போரைச்செய்தான்; ( எ-று.) சல்லியன் வீமனை யெதிர்க்கச் செல்லுகையில், நகுலன் வீரவாதங் கூறிக்கொண்டு இடையில் வந்து அவனையெதிர்த்துப் பொருதன னென்பதாம். தம்பியாகிய என்னை வென்றபின்பன்றோ தமையனான வீமனை நீ எதிர்க்கத் தகுதியுடையாய் என்றுகருதி வந்ததுதோன்ற, 'தம்முனோடுடன்று வந்த சல்லியனை' என்றார். சல்லியகுமாரன் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பி - ம் : அவனுடனடுபோர்செய்தான். (14) 15.- நகுலனுக்குச் சல்லியன் புறந்தந்துபோதல். மோகரித்தொன்றிரண்டுமூன்றுநாலைந்தம்பேவிப் பாகனைச்சிலையைப்பொற்றேர்ப்பதாகையைப்பரியைவீழ்த்தி ஆகமுற்றுருவவெய்தானருச்சுனனிளவன்மாறாப் போகமத்திரத்தார்கோவும்புறந்தந்துபோகலுற்றான். |
(இ -ள்.) அருச்சுனன் இளவல் - அருச்சுனது தம்பியான நகுலன்,- மோகரித்து - வீராவேசங் கொண்டு, ஒன்று இரண்டு மூன்று நால் ஐந்து அம்பு ஏவி - ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து அம்புகளைத் (தனித்தனி) தொடுத்து, (அவற்றால் முறையே), |