குக் கூறப்படாத தோல், மச்சை, சுவேதநீர் என்பன 'இவையிவை' என்பதனாற் குறிக்கப்பட்டன. ஆன-முற்று; உவமவுருபு. (182) 45.-இருவரெதிரிலும் தன்படைபின்னிட, கண்ட துரியேதனன் சினந்து சைந்தவனிடம் சொல்லலுறுதல். இருவரெதிரும்பொறாமன்முடுகியவிருபடையுநொந்துமீளவவ னிபன், வெருவொடுதளர்ந்துபோனநிருபரைமிகவசைமொழிந்து போதநகைசெய்து, கருகிமுகநெஞ்சுகோபவனல்கொடுகதுவிநயனங்கள்சேயநிறமுற, வருகுவருசிந்துராசதிலகனொடபரி மிதமின்சொலாகவுரை செய்தான். |
(இ-ள்.) முடுகிய - வேகமாக எதிர்த்துச்சென்ற, இருபடை உம்-தன் சேனையின் பகுப்பு இரண்டும், இருவர் எதிர்உம்-(வீமன் அபிமன் என்னும்) இரண்டுபேரின் எதிரிலும், பொறாமல்-(அவரவரம்பின் கொடுமையைப்) பொறுக்கமாட்டாமல், நொந்து - வருந்தி, மீள-பின்னிட,-(அதுகண்டு). அவனிபன் - துரியோதனராசன்,-வெருவொடு தளர்ந்து போன நிருபரை-அச்சத்தோடு சோர்ந்து ஓடிய அரசர்களை, மிக வசை மொழிந்து-மிகவும் நிந்தையாகப் பேசி, போத நகை செய்து -மிகவும் (இகழ்ச்சியாகச்) சிரித்து,-நெஞ்சு கோபம் அனல்கொடு கதுவி-மனம் கோபாக்கினியாற் பற்றப்பட்டு, முகம் கருகி-(அதனால்) முகங் கறுத்து, நயனங்கள் சேய நிறம் உற-கண்கள் சிவந்தநிற மடைய,-அருகு வரு சிந்துராசதிலகனொடு-(தன்) பக்கத்தில் வருகிற சிந்துதேசத்து அரசனும் திலகம் போலச் சிறந்தவனுமான சயத்திரதனுடன், இன் சொல் ஆக- இனிய உபசாரமொழியாக, அபரிமிதம்- அளவில்லாத பல வார்த்தைகளை, உரைசெய்தான் - சொல்லினான்; (எ - று.)- துரியோதனன் இன்சொலாக வுரைசெய்ததை மேல் மூன்று கவிகளிற் காண்க. நயனம், ஸிந்துராஜதிலகன், அபரிமிதம் - வடசொற்கள், சேய- குறிப்புப்பெயரெச்சம். பி-ம்: உரைசெய்தே. (183) 46.-மூன்றுகவிகள்-சைத்தவனைநோக்கித் துரியோதனன்புகழ்ந்து அபிமனை உயிர்கவர்வதற்குச் செய்யவேண்டுவது இன்னதெனத் தெரிவித்தலைக் கூறும். மறனுடையைசெம்பொன்மேருறிரிகிகர்வலியுடையைவென்றி கூருமரசிய. லறனுடையைபஞ்சபாணனெனவடிவழகுடையை நின்றசேனையரசரி. னிறனுடையைதிங்கள்சூடிவியனதிநிறைபுனல் பரந்துலாவுமவுலியர். திறனுடையமன்றனாறுமலரடிதெளிவொடு பணிந்தஞானமுடியினை. |
ஏழுகவிகள் -ஒருதொடர். (இ - ள்.) '(நீ), மறன் உடையை - பராக்கிரமமுடையாய்; செம்பொன் மேரு கிரி நிகர் - சிவந்த பொன்மயமான மகாமேரு மலையையொத்த, வலிஉடையை- வலிமையை உடையாய்: வென்றி கூரும்-வெற்றி மிக்க, அரசு இயல் அரசாட்சியையும், அறன் - தருமத்தையும், உடைய-;பஞ்சபாணன் என - ஐந்து அம்புகளையுடைய மன்மதன்போல, வடிவு அழகு உடையை -உடம்பின் |