அழகையுடையாய்; நின்ற சேனை அரசரில்-(இங்கு) நின்ற சேனையிலுள்ள அரசர்களுள், நிறன் உடையை--மேன்மையையுடையாய்: திங்கள் சூடி-சந்திரனைத் தரித்து, வியன் நதி நிறை புனல் பரந்து உலாவும்-ஆகாச(கங்கா) நதியினது நிறைந்தநீர் பரவித் தளும்பப்பெற்ற, மவுலியர் - திருமுடியையுடைய பரமசிவனது, திறன்உடைய-மகிமையையுடைய, மன்றல் நாறும் மலர் அடி - பரிமளம் வீசுகிற தாமரைமலர்போன்ற திருவடிகளை, ஞானம் தெளிவோடு பணிந்த- தத்துவஞானத்துக்கு உரிய தெளிவோடு வணங்கிய, முடியினை-சிரத்தையுடையாய்; (எ - று.) அரசியல்- சேனை, குடிகள் செல்வம், மந்திரி, நண்பர், அரண் என்னும் ஆறுஇராசாங்கமுமாம். இனி, அரசியலறன்-அரசியல் ஆறில் அறநிலையறம் அறநிலைப்பொருள், அறநிலையின்பம் என்னும் மூன்றுமாம்: மற்றவை - மறநிலையறம், மறநிலைப்பொருள்,மறநிலையின்பம் என்பன. அவையாவன:-நான்கு சாதியாரும் தம்தம் வருணவொழுக்கத்திற் பிறழாது நிலைபெறப் பாதுகாத்தல்- அறநிலையறம்; நல்நெறியில் நின்று தம்தம் நிலையினால் முயற்சி செய்து பெறும் பொருள்-அறநிலைப்பொருள்; குலமும் ஒழுக்கமும் குணமும் பருவமும் ஒத்த கன்னிகையை அக்கினிசாட்சியாக விவாகஞ்செய்து அவளோடு கூடிவாழ்தல் - அறநிலையின்பம்; நிரைமீட்டுப் பகைவென்று செஞ்சோற்றுக் கடன்கழியாதாரைத் தண்டித்துக் குறைவறச் செய்தல் - மறநிலையறம்; பகைவர் பொருளும் திறைப்பொருளும் குற்றஞ்செய்தோரைத் தண்டித்தலால் வரும் பொருளும் சூதில் வெல்பொருளும் - மறநிலைப்பொருள்; ஏறு தழுவியும், வில்லில்தொடுத்த அம்பினாற்குறியெய்தும், பொருள்கொடுத்தும், வலிந்தும் மகளிரைக்கொண்டு மணஞ்செய்தல் -மறநிலையின்பம். திருவடிக்குத் திறன்-தன்னைச்சரண மடைந்தார்க்கு வேண்டியவேண்டியாங்கு எய்துவிக்கும் வல்லமை. தெளிவு - ஐயந்திரி பில்லாமை. (184) 47. | வயவிசயனின்றதேர்கடவிவரும்வலவன்மருகன்றனோடு வரைபுரை, புயமுடையதண்டவீமனுறிலிருபொருநரையுமின்று பூசல்பொரவரி, தயலிவரகன்றுபோகிலமர்பொரவறவுமெளிதுண்டு பாயநுதலெரி, நயனனருள் கொன்றை மாலைதனை யிவர்நடுவிடி. லிரண்டுபாலுமகல்வரே. |
(இ-ள்.) 'வயம்-வெற்றியையுடைய, விசயன்-அருச்சுனன், நின்ற-பொருந்திய, தேர் - தேரை, கடவிவரும் - செலுத்திவருகிற, வலவன் - சாரதியான கண்ணனுக்கு,மருகன்தனொடு-மருமகனான அபிமனுடனே, வரை புரை புயம் உடைய-மலையையொத்த தோளையுடைய, தண்டம்-கதையில்வல்ல, வீமன்-, உறில்-கூடிவிட்டால், இரு பொருநரைஉம்-(இந்த) இரண்டு போர்வீரரையும் இன்று பூசல்பொர அரிது - இப்பொழுது (எதிர்த்துப்) போர்செய்ய முடியாது; இவர் - இவ்விரண்டுபேரும், அயல் -வெவ்வேறு இடத்தில், அகன்று போகில் -(தனித்தனி) விலகிச்சென்றால், அமர் பொரஅறஉம் எளிது - (இவர்களோடு) போர்செய்ய மிகவும் எளியதாம்; உபாயம் உண்டு - (அவ்வாறு இவர்களைக் கூடாமற் செய் |