பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்151

தரம் மூன்றாம்தரம் (மீண்டுமீண்டு) வர, எ காலும் அழித்து-எல்லா முறையிலும்
(அத்துரோணனைத்) தோற்கடித்து, பெருக்கு ஆறு  அணை செய்து ஒத்து-
யாற்றுநீர்ப் பெருக்குக்கு அணை செய்தாற் போன்று, (அவனைத் தடுத்து),-அவிர்
விளங்குகிற, பிள்ளை பிறை அனையான் - இளஞ்சந்திரனையொத்த அபிமன்,-
செருக்கால்-வீரக்களிப்பினால், வரி சிலை ஆசிரியனை - கட்டமைந்த வில்லில்
வல்லதுரோணணை (நோக்கி), நகை செய்தான்- (இகழ்ச்சிதோன்றச்) சிரித்தான்:
(எ - று.)

     "மூன்றாறுருபெண்" என்ற சூத்திர விதிப்படி ஒருகால், இருகால் என
இயல்பாகவரவேண்டியவை, இங்கு, சந்தவின்பத்திற்காக வலிமிக்குநின்றன.     (249)

112. -துரோணன் அபிமனது வலக்கையை வாளோடும் வீழ்த்துதல்.

முன்னுஞ்சுருதியினாலுயர்முனிவீரனைமுனியாப்
பின்னும்பனிவரைபோலொருபெருந்தேர்மிசைகொள்ளா
மன்னுஞ்சிலைகுனியாமுனைவடிவாளொடுகையு
மின்னும்பிறைமுகவாளியின்விழும்படிவிட்டான்.

     (இ-ள்.) முன்னும்- (யாவராலும் சிறந்ததாகக்) கருதப்படுகிற, கருதியினால் -
வேதங்களில் வல்லவனாதலால், உயர் - சிறந்த, முனி - துரோணன், வீரனை
முனியா- (தன்னைப் பரிகசித்த) அபிமனைக் கோபித்து, பின்உம் - மீண்டும், பனி
வரை போல் - பனிமயமான இமயமலைபோன்ற, ஒரு பெரு தேர்மிசை-ஒரு பெரிய
தேரின் மேல், கொள்ளா - ஏறிக்கொண்டு, மன்னும் சிலை குனியா - பெரிய (தன்)
வில்லை வளைத்து, முனை வடி வாளொடு கைஉம்-(அபிமனது) கூரிய வடிக்கப்பட்ட
வாளுடன் வலக்கையும், மின்னும் பிறை முகம் வாளியின் - விளங்குகின்ற
அர்த்தசந்திரபாணத்தால், வீழும்படி -   துணிந்து கீழ்விழும்படி, விட்டான் -
(அதனைப்) பிரயோகித்தான்;  (எ-று.)- மலையரசனாதலின், இமயத்தை
எடுத்துக்கூறினார்                                            (250)

113.-வாள் வீழ அபிமன் நின்றமை.

பேணாருயிர்பருகும்பசிபெட்பப்பகுவாய்வெங்
கோணாகமுலாவந்தெதிர்கொடுநாவெறிவதுபோற்
பூணார்கடகக்கையொடுபுகர்வாளமுமண்மே
னீணாகர்வியக்கும்படிவிழமீளியுநின்றான்.

     (இ-ள்.) பேணார் உயிர் பருகும் - பகைவர்களது உயிரைக் குடிக்க
வேண்டுமென்ற, பசி-, பெட்ப-மிக, பகுவாய் வெம் கோள் நாகம் - திறந்த
வாயையும்கொடிய வலிமையையுமுடைய சர்ப்பம், உலா வந்து - உலாவிவந்து,
எதிர் கொடு -எதிரிற் பெருந்தி, நா எறிவது போல்-நாக்கை வெளிநீட்டுவதுபோல,-
கடகம் பூண்ஆர்கையொடு - கடகமென்னும் ஆபரணம் பொருந்தின கையுடனே,
புகர்வாளம்உம் - பளபளப்பையுடைய வாளாயுதமும், மண்மேல் - தரையிலே, நீள்
நாகர்வியக்கும்படி விழ - உயர்ந்த தேவலோகத்தவர்கள் ஆச்சரியப்படும்படி
(துணிந்து)வழ, மீளிஉம் - அபிமனும், நின்றான் - (சலியாது) நின்றான்; (எ - று.)