பக்கம் எண் :

156பாரதம்துரோண பருவம்

சல்- வல்கிதம், குதித்துக்குதித்துப்போதல்-புலுதம்என்றும் கூறு வாருமுளர். இனி
மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி, விருஷபகதி என்பனவுமாம். இவை-
பஞ்சகதி யெனவும், பஞ்சதாரையெனவும்படும். இவற்றோடு பஞ்சளி, முரளி, சுடால
வலநம் என்னும் நான்குங் கூட்டி நவகதி கூறுதலும் உண்டு. கரகம் - வடசொல்.
பரிசுத்திக்காகச் சலபாத்திரத்தை எப்பொழுதும் கையில் வைத்திருத்தல், வைதிக
ரியல்பு. கங்கைப் புனலுக்கு வண்மை -தன்னில் ஒருகால்மூழ்கியவர்க்கும்
அருவினையொழித்து உயர்பத மருளுவது.                            (257)

120. - அபிமனும் திகிரியையொழித்துக் கதாயுதத்தைக்கொண்டு
கர்ச்சித்தல்.

மறலிதண்டேனக்கொலைபுரிதொழின்மிகவலியதண்டுகைக்
                           கொளுமளவினிலிவன்,
விறல்புனைந்தகைத்திகிரியையொழியமுன்வினையழிந்துபற்
                                றலர்முதுகிடவிழு,
திறல்விளங்குபொற்கதைகொடுவிரைவொடு திருகிநின்கதைக்
                              கிதுகதையெனவுரை,
யுறவிளம்பியப்பொருகளமுழுவதுமுருமெறிந்ததொத்
                             துவகையொடதிரவே..

இதுவும், மேற்கவியும் -குளகம்.

     (இ-ள்.) மறலி தண்டு என - யமனது தண்டாயுதம்போல, கொலைபுரி தொழில்
மிகவலிய-கொலைசெய்யுந்தொழிலிலே மிகவும்வலிமையையுடைய, தண்டு-
கதாயுதத்தை,கை கொளும் அளவினில்-(அந்தச்சயத்திரதன்)
கையிலெடுத்துக்கொண்டவளவிலே,-இவன்-அபிமன், விறல் புனைந்த கை
திகிரியை ஒழிய-வெற்றியைக்கொண்டதன்கையிலுள்ள சக்கராயுதத்தை நீங்க(வீட்டு),-
முன் - முன்னே[பலபோர்களில்],பற்றலரர் - பகைவர்கள், வினை அழிந்து-
போர்த்தொழிலை யொழிந்து, முதுகுஇட -புறங்கொடுக்கும்படி, விழு -
(அவர்கள்மேல்) விழுந்தன்மையதான, திறல் விளங்கு -வலிமைமிக்க, பொன் கதை
கொடு - அழகியதொரு கதாயுதத்தை யெடுத்துக்கொண்டு, விரைவோடு திருகி -
வேகமாகச் சுழற்றி, நின் கதைக்கு இது கதைஎன-'உனது கதாயுதத்துக்கு (ஏற்ற)
கதாயுதம் இது' என்று, உரைஉற விளம்பி -விரவாதத்தை மிகுதியாகச் சொல்லி,
அ பொரு களம் முழுவதுஉம்-அந்தப்போர்க்களம் முழுவதிலும், உரும் எறிந்தது
ஒத்து - இடியிடித்தாற்போன்று,உவகையொடு அதிர-உற்சாகத்தோடு கர்ச்சிக்க,-
(எ - று.)- "இருவரும் உடற்றினர்"என மேற்கவியில் முடியும்.

     மறல் - கொலைத்தொழில்; அதனையுடையவன், மறலி, மறலிதண்டு-
காலதண்டம்.                                                (258)

121.- அபிமன் சயத்திரதன் இருவரும் பொருதல்.

சினவுசிங்கமொத்திருவருமுறைமுறைதிருகிவெஞ்செருப்புரி
                               தலினெழுமொலி,
கனல்வளைந்துகட்டனிலமுமெறிதருகடலதிர்ந்
                        தெனக்கனமதிர்வனவென,
மினல்பரந்தெழத்திசைகளின்முடிவுறவெடிகொடண்டபித்தியு
                                 முடைதரவெழ,
மனமழன்றுபொற்கிரிநிகர்தமபுயவலிமைகொண்டுடற்றினர்
                                  வயமலியவே.