பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்159

குதிரைகளையும், துணித்து - துண்டாக்கி, எதிர் முனை - எதிரில் தொழில்செய்கிற,
வலவனை-சாரதியையும், முரணுடன் புடைத்து-வலிமையோடு தாக்கி, அணி
துவசம்உம்- அழகிய கொடியையும், விழ-ஒடிந்து விழ (ச்செய்து), முதுகு கண்ட
பின்-புறங்கொடுக்குமாறு வெல்லத் தொடங்கியவுடனே,-அவன்உம் -சயத்திரதனும்,
சரபம், அது எனும் வகை-(சிங்கத்தைக்கொல்லவல்ல) சரபம்போல, அரன் வழங்கு
பொன் கதையுடன்-சிவபிரான் அளித்த பொன்மயமான கதையுடனே, அவனியில்
முன் குதித்து - பூமியிலே வேகமாகக்குதித்து, அடலுடன் முனைய -வலிமையோடு
போர்செய்ய,-(எ - று.)-"சிதறின" என அடுத்த கவியில் முடியும் களிறு-
ஒருகையோடுஇருத்தற்கும் உவமை. பி-ம்: அடலுடைவலவனை,       (262)

125.- இருவரும் தரையிற் கைகலந்து பொருதல்.

பதயுகங்களொத் தியவலிபலகணபணபுயங்கர்பற் பலமுடிசிதறின,
வெதிர்கொடண்டமொத்தியவொலிதிசைகளிலிபமுநின்று
                              மெய்ப்பிடியொடுசிதறின,
கதியில்வந்தசித்திரமெனமுறைமுறைகதுவிமண்டலித்தொருபகன்
                                          முழுவது,
மதிசயப்படப்பொருதனரெதிரெதிரபிமனுஞ்சயத்திரதனுமமரிலே.

     (இ-ள்.) அபிமன்உம் சயத்திரதன்உம் - அவ்விரண்டுபேரும். பதயுகங்கள்
ஒத்திய - (தம்தம்) இரண்டுகால்களையும் உறுதியோடு வைத்த, வலி-வலிமையினால்,
பணம்- படத்தையுடைய, கணம் - கூட்டமான, பல புயங்கர் (கீழிருந்து
பூமியைத்தாங்குகிற) அநேக நாகர்களது, பல் பல முடி - பலபலதலைகள், சிதறின -
நெருங்கின; எதிர் கொள் - எதிரெதிரிற் கொண்ட, தண்டம் - கதாயுதம், மொத்திய-
(ஒன்றோடொன்று) தாக்குவதனாலுண்டான, ஒலி -  ஒளியினால், திசைகளில் நின்று-
(எட்டுத்) திக்குக்களினின்று, இபம்உம்-திக்குயானைகளும், மெய்- உண்மையாக
பிடியொடு-(தம்தம்பெண்யானையுடனே, சிதறின-நிலைகுலைந்து ஓடின;
(இவ்வாறுஅபிமனும் சயத்திரதனும்), அமரில்-போர்க்களத்தில், கதியில் வந்த
சித்திரம்என- வேகமாகவந்த புலிகள்போல, முறைமுறை கதுவி-மாறிமாறி
(ஒருவரையொருவர்) பற்றி, மண்டலித்து சுழன்றுவந்து, ஒரு பகல் முழுவது
உம்-(அந்த) ஒருபகற்பொழுது முடியுமளவும். எதிர் எதிர் -எதிரிலே எதிரிலே,
அதிசயம் பட - (காண்பவர்க்கு) வியப்புண்டாக, பொருதனர் - போர் செய்தார்கள்;
(எ - று.)

     ஐந்தலை, இருதலை முதலாக ஒவ்வொருநாகத்துக்கே பலதலைகள் உண்மை
பற்றி, 'பற்பலமுடி' எனப்பட்டது. மெய்ப்பிடியொடு - தேகபலத்தோடு எனினுமாம்.
வீமசேனனை வீமனென்றும், சத்தியபாமையைச் சத்தியை யென்றும்,
கிருதவர்மாவைக் கிருதனென்றுங் கூறுதல்போல, சித்திரகாயத்தைச்
சித்திரமென்றார்;
சித்திரகாயம் என்று புலிக்குப்பெயர்; (கோடுகளால்) பலவகை
நிறமுள்ள உடம் புடையதென்று காரணப்பொருள். இனி, இவ்விருவருள் ஒருவன்
செய்த தொழிலை மற்றொருவன் அவ்வாறே செய்தலால், 'சித்திரமென' என்பதற்கு -
ஒன்றில் உள்ளபடி யெழுதப்படுகிற சித்திர வடிவம்போல என்றும் உரைக்கலாம்.
முறைமுறை கதுவி மண்ட