பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்167

என்று-என்று (பலவாறு) எண்ணி, ஈர் இரண்டு பெயர் ஒழிய மற்று உள்ளார்-
நாலுபேர்தவிர மற்றுள்ளவர் எல்லோரும், அழுது இரங்கி-புலம்பிச் சோகித்து, என்
பட்டார் - என்னபாடு பட்டார்கள்? [மிகத் துன்பமுற்றார்கள் என்றபடி] எ - று.)-
ஏ-இரக்கம்.

     ஈரிரண்டுபேர் - துரியோதனன், சயத்திரதன், சகுனி, கர்ணன் என இவர்;
கர்ணனைநீக்கித் துச்சாதனனைச் சேர்த்தலும் ஒன்று. தனதுதேர் கர்ணனம்பால்
அழிந்தகாலத்தில் மறுபடி ஏறிக்கொள்ளுதற்கு உதவியாக மற்றொருதேர்
கிடைத்திருந்தால் அபிமனைக் கொல்ல எவராலும் ஆகாதென்பது, மூன்றாம்
அடியால் விளங்கும்.

137.- அபிமனிறந்தமையைத் தருமன்  கேட்டல்.

தாள் விசயம்பெறமுனைந்துசக்கரயூகம்பிளந்துதானேநின்று,
வாள்விசயன்றிருமதலைவானோரும்வியந்துரைக்கமாய்ந்
                                      தானென்று,
வேள்வியினா லுண்மையினாற் றிண்மையினாற் றண்ணளியால்
                                 விறலாற்பன்னூற்,
கேள்வியினான்மிகுந்தெவர்க்குங்கேளானவுதிட்டிரனுங்
                                  கேட்டானன்றே.

     (இ-ள்.) வேள்வியினால்-யாகங்களினாலும், உண்மையினால்- சத்தியத்தினாலும்,
திண்மையினால் -வலிமையினாலும், தண் அளியால் - குளிர்ந்த கருணையினாலும்,
விறலால் - வெற்றியினாலும், பல்நூல் கேள்வியினால் - பல சாஸ்திரார்த்தங்களைக்
கேட்டலாலும்,  மிகுந்து-, எவர்க்குஉம் கேள் ஆன - எல்லோர்க்கும் சினேகிதனான,
உதிட்டிரன்உம் - தருமபுத்திரனும்,-'வாள் விசயன் திருமதலை-ஆயுதம்வல்ல
அருச்சுனனுக்குச் சிறந்த குமாரனான அபிமன், தாள்-(தனது) முயற்சியால், விசயம்
பெற - வெற்றியை யடையும்படி, முனைந்து - போர்செய்து, சக்கரயூகம் பிளந்து -
சக்கரவியூகத்தைப் பேதித்து, தான் ஏ நின்று-தான்மாத்திரமே தனியாகநின்று,
வானோர்உம் வியந்து உரைக்க - தேவர்களும் அதிசயித்துப் புகழ, மாய்ந்தான்-
இறந்தான்,' என்று கேட்டான் - என்று கேள்விப்பட்டான்; (எ - று.)-அன்றே-
ஈற்றசை.

     தருமன் சக்கரவியூகத்துக்கு வெளியேநின்றவனாதலால், 'கேட்டான்' என்றார்.
எவர்க்குங் கேளான உதிட்டிரன் - அஜாதசத்ருவென்று தருமனுக்கு ஒருபெயர்;
அதற்குப் பகையில்லாதவனென்று பொருள்                           (275)

138.- நான்குகவிகள் - அபிமனிறந்ததற்குத் தருமன் புலம்பலைக் கூறும்.

பிறந்ததினமுதலாகப்பெற்றெடுத்தவிடலையினும்பீடுந்தேசுஞ்,
சிறந்தனையென்றுனைக்கொண் டேதெவ்வரை வென்றுல
                              காளச்சிந்தித்தேனே,
மறந்தனையோவெங்களையு மாலையினால்வளைப்புண்டு
                                 மருவார்போரி,
லிறந்தனையோவென்கண்ணேயென்றுயிரேயபிமா
                            வின்றென்செய்தாயே. 

     (இ-ள்.) என் கண்ணே - எனது கண்போன்றவனே! என் உயிரே-எனது
உயிர்போன்றவனே! அபிமா-அபிமந்யுவே! பிறந்த தினம் முதல் ஆக-(நீ)
பிறந்தநாள்முதற்கொண்டு, பெற்று எடுத்த விடலையின்உம்-(உன்னைப்)
பெற்றெடுத்த வீரனானஅருச்சுனனைக்