காட்டிலும், பீடுஉம் தேசுஉம் சிறந்தனை -(நீ) பெருமையும் ஒளியும் மிக்குள்ளாய், என்று - என்ற காரணத்தால், உனை கொண்டு ஏ தெவ்வரை வென்று உலகு ஆனசிந்தித்தேன் ஏ - உன்னைக்கொண்டே பகைவர்களைவென்று (யான்) உலகத்தைஅரசாள எண்ணியிருந்தேனே! எங்களைஉம்-(உனது அன்புள்ள தந்தையரான)எங்களையும், மறந்தனைஓ-மறந்துவிட்டாயோ? (மறந்திடாமல்), மாலையினால்வளைப்புண்டு - கொன்றைமாலையாற் சூழப்பட்டு, மருவார் போரில்-பகைவர்கள்செய்தபோரில், இறந்தனை ஓ-? இன்று என்செய்தாய்ஏ-இன்றைக்குஎன்னசெய்துவிட்டாயே! தந்தைக்கு 'பெற்றெடுத்த' என்ற அடைமொழிகொடுத்தல், உபசாரம். இனி, 'பெற்றெடுத்தவிடலையினும்' என்பதற்கு-யான்பெற்றுவளர்த்த (விந்தனென்னும் எனது)குமாரனினும் என்று உரைத்தல் சிறப்பன்று, என்கண், என் உயிர் - சிறப்பினால்உயர்திணையில் அஃறிணைவந்த வழுவமைதி; [நன்-பொது-28.] பி-ம்: சிந்தித்தேன்யான். (276) 139. | தேனிருக்குநறுமலர்த்தார்ச்சிலைவிசயனிருக்கவரைத்திண் டோள்வீமன், றானிருக்கமாநகுலசாதேவர்தாமிருக்கத்தமராய்வந்து, வானிருக்கின்முடிவான மரகதமாமலையிருக்க வாழ்வானெண்ணி, யானிருக்கவினையறியாவிளஞ்சிங்கமிறப்பதேயென்னே யென்னே. |
(இ-ள்.) தேன் இருக்கும் -தேன்பொருந்தின, நறு-வாசனை வீசுகிற, மலர்- பூக்களாலாகிய, தார் - வெற்றிமாலையையுடைய, சிலை-(காண்டீவமென்னும்) வில்லையுடைய, விசயன் - அருச்சுனன், இருக்க - வாழ்ந்திருக்க,- வரை திண் தோள் - மலைகள்போலும் வலியதோள்களையுடைய, வீமன்-, தான் இருக்க-, மா-சிறந்த, நகுல சகாதேவர்-, தாம் இருக்க-, வான் இருக்கின் முடிவு ஆன- சிறந்தவேதங்களின் அந்தத்துப்பொருளான, மரகதம் மா மலை-சிறந்த மரகதரத்தினமயமான மலை போன்ற கண்ணபிரான், தமர் ஆய் வந்து- உறவினனாய்ப் பொருந்தி, இருக்க-, யான்-, வாழ்வான் என்ணி - (பகைவென்று அரசாண்டு) வாழக் கருதி, இருக்க-, வினை அறியா - செய்தொழிலை முற்ற அறியாத, இளசிங்கம் சிங்கக்குட்டிபோன்ற நீ, இறப்பது தகுதியோ? என்னே என்னே-(இது) என்ன அநீதி! என்ன அநீதி!! (எ - று.)-பி-ம்; விளைவறியா. அபிமன்சக்கரவியூகத்தின் உட்செல்லுதல்மாத்திரம் உணர்ந்து மீண்டுவரவிதறியாதவ னென்பது தோன்ற, 'வினையறியா இளஞ்சிங்கம்' என்றார்; இதனை முதனூலால் அறிக. 'தமராய்வந்து' என்பது, எல்லோருக்குங் கூட்டத்தக்கது: ஆனதுபற்றியே, 'தமர்' எனப் பண்மையாற் கூறியது. மாநகுலன் என எடுத்து, குதிரைத் தொழிலில்வல்ல நகுலனென்றுமாம். நகுலசகதேவர் இரட்டைப் பிள்ளையராதலால், ஒருதொடராகக் கூறப்பட்டனர். இருக்கு- நான்குவேதங்களுள் முதலாவதன் பெயராவதே யன்றி, எல்லா வேதங்களுக்கும் பொதுப்பெயராகவும் வழங்கும். 'இருக்கின்முடிவு' என்றது-வேதத்தின்பிரிவான கர்மகாண்டம் பிரகாண்டம் என்ற இரண்டனுள் சிறந்ததும், பிந்தினதுமான உபநிஷத்துக்களின் சித் |