யுடன்-, அழிந்து-மூர்ச்சித்து, மணி தேரின்மிசை- அழகியதேரில், வீழ்ந்தான்-;(எ-று.) 142.- இதுமுதல் மூன்றுகவிகள் - வீமன்புலம்புதல். சங்கலாரிடைவளைத்த சக்கரத்தை யுடைப்பதற்குத் தமியேனெய்தி, யங்குலாவருமிரதத்தரசரையுந்தொலைத்துன்னையடுப்பான் வந்தேன், பங்கெலாமரகதமாம் பவளநிறப்பொருப்புதவுபைம்பொற் கொன்றைத், தொங்கலாற் கோறுவித்த சூழ்ச்சியை யின்றறிந்திலனே தோன்றலேநான். |
(இ-ள்.) தோன்றலே - குமாரனே! சங்கலார் - பகைவர்கள்,இடை வளைத்த-(நீ)நடுவிலிருக்க (உன்னைச்) சூழ்ந்துகொண்ட, சக்கரத்தை-சக்கர வியூகத்தை,உடைப்பதற்கு-, தமியேன்-தனியனான யான், எய்தி - மனம்பொருத்தி, அங்கு உலாவரும் - அந்தச் சக்கரவியூகத்தில் உல்லாசமாகப்பொருந்திய, இரதத்து அரசரை உம்-தேர்வீரர்களையும், தொலைத்து-அழித்து, உன்னை அடுப்பான் வந்தேன்-உன்னைச்சமீபித்தற்கு வந்தேன்; பங்கு எலாம் மரகதம் ஆம்- (பார்வதீரூபமான) இடபக்கம் முழுவதும் பச்சை ரத்தின நிறமான, பவளம் நிறம் பொருப்பு -பவழநிறத்தையுடையமலை போன்ற சிவபிரான், உதவு-கொடுத்தருளிய, பை பொன்கொன்றை தொங்கலால்-பசிய பொன்னின்நிறமான கொன்றைப் பூமாலையைக்கொண்டு, கோறுவித்த-(உன்னைக்) கொல்வித்த, சூழ்ச்சியை- வஞ்சனையை, இன்று நான் அறிந்திலன்ஏ - இன்று நான் அறிந்திட்டேனில்லையோ!(எ - று.) சங்கு - ஸங்க மென்னும் வடமொழி விகாரப்பட்டது; கூடுதலென்று பொருள், அதனையுடையவரல்லாதவர் - சங்கலார்; எனவே, பகைவராவர். தமியேன்-ஒப்பற்ற யான், ஒன்றியானயான், அர்த்தநாரீசுவரனாதலால், இவ்வாறு கூறினார். பொருப்பு- இங்கே, உவமவாகுபெயர். 'கோறுவித்த' என்பதில், றுவி என்னும் இரண்டு பிறவினைவிகுதிகள் விகுதிமேல்விகுதியாய் அடுக்கி வந்தன வெனக் கொள்ளல் வேண்டும்; கொல் என்னும் பகுதி, முதல் நீண்டு இறுதிகெட்டது. சந்திவிகாரங்கள். பி-ம்: உனை வளைத்தசூழ்ச்சியை, கோறல்புரிசூழ்ச்சியை. (280) 143. | மின்னாமலிடித்ததெனவீழ்த்தபொலந்தொடையாலும் விடையோனீந்த, பொன்னார்வெங்கதையாலுமல்லதபிமனையமரிற் பொரவல்லார்யார், தன்னாண்மைநிலைநிறுத்திச்சங்கமுழக்கியவீர சிங்கசாப, வென்னானையிறந்துபடவின்னமுநானிவ்வுயிர் கொண்டிருக்கின்றேனே. |
(இ-ள்.) மின்னாமல் இடித்தது என - மின்னலில்லாமலே இடியிடித்தது போல,வீழ்ந்த - (எதிர்பாராதிருக்கக்) கொணர்ந்து போகட்ட, பொலம்தொடையால்உம்-பொன்னிறமான கொன்றைப்பூமாலையினாலும், விடையோன் ஈந்த-இடபத்தை(வாகனமுங்கொடியுமாக) உடைய சிவபிரான் கொடுத்த, பொன் ஆர் வெம்கதையால்உம்-பொன்மயமாய்நிறைந்த கொடிய கதாயுதத்தினாலும், அல்லது-(இவ்விரண்டினாலும்) அன்றி, அபிமனை-, அமரில்-யுத்தத்தில் |