அந்தச்சமயத்தில், ஆரணம் அளித்த முனி-வேதங்களை அருளிய வியாசமாமுனிவன், வந்தான் - (அங்கு) எழுந்தருளினான்; (எ -று.) சென்னி கரம் வைத்தல் - சோகக்குறிப்பு, வரம்பின்றியிருந்த வேதங்களைத் துவாபரயுகமுடிவில் இருக்கு, யசுர், சாமம் அதர்வணம் என நான்காகப்பகுத்து ஒழுங்குபடுத்தி அக்காரணத்தால் வ்யாஸனென்று பெயர் பெற்றவ னென்பார், 'ஆரணமளித்தமுனி' என்றார். இதுமுதல் பதினெட்டுக்கவிகள் -பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள் (306) 169.- வந்தமுனி கண்ணீர்போக்கி பலஉபதேசமொழிகூறத்தொடங்கல். வந்தமுனிமற்றுமுடன்வருமுனிவரோடு மந்தநரபாலர்கண்ணரும்புனறுடைத்துக் கந்தனிகர்மைந்தனொடுகையறநினைக்கும் பந்தனையறுக்குமொழிபற்பலபகர்ந்தான். |
(இ-ள்.) வந்த முனி-எழுந்தருளின வேதவியாசபகவான்,- மற்றும் உடன் வரும்முனிவரோடுஉம்-இன்னுங்கூடவந்த முனிவர்களுடனே,- அந்த நரபாலர் கண் அரும்(பு) புனல் துடைத்து-(தருமன் முதலிய) அந்த அரசர்களது கணகளில்தோன்றுகிற நீரைப் போக்கி,-கந்தன் நிகர் மைந்தனொடு - முருகக்கடவுளை யொத்த குமாரனான அபிமனுடனே, கை அற-(தாமும்) செயலற்றிருக்க, நினைக்கும்- (அப்பாண்டவர்கள்) எண்ணுகிற, பந்தனை - (அவர்களது) பாசபந்தத்தை [அன்பின்தொடக்கை], அறுக்கும்-ஒழிக்கும்படியான, பல்பல மொழி - அனேக உபதேசவார்த்தைகளை, பகர்ந்தான் - கூறுபவனானான்; (எ -று.)-அதனை, அடுத்த மூன்று கவிகளிற் காண்க. கையாறு-உயிர்ப்புமின்றி வினையொழிந்து அயர்தல். அரும்பு புனலென்பது, அரும்புனலென விகாரப்பட்டது: இனி, அரும்புனல் எனப் பண்புத்தொகையாக எடுத்து - அரிய [இதுவரையில் இல்லாத] நீர் எனினுமாம். (307) 170.- நான்குகவிகள் ஒரு தொடர்: - வியாசமுனிவனுபதேசித்துப் போதலைத் தெரிவிக்கும், தாயரொடுதந்தையர்கடாரமொடுதனயோர் தூயதுணைவோர்களொடுசுற்றமெனநின்றோர் மாயையெனும்வல்லபமயக்குறுமயக்கா லாயவுறவல்லதவரார்முடிவில்யாமார். |
(இ-ள்.) தாயரொடு-தாய்மார்களும், தந்தையர்கள்- தகப்பன்மார்களும், தாரமொடு-மனைவியரும், தனயோர்-புதல்வரும், தூய-(மனத்தில்) சுத்தியையுடைய, துணைவோர்களொடு - உடன் பிறந்தவர்களும், சுற்றம் - (மற்றும்) பந்துவர்க்கமும், என- என்று நின்றோர்-நின்றவர்களெல்லோரும், மாயை எனும் வல்லபம்-மாயை யென்கிற (பகவானுடைய) சக்தி, மயக்குறும்-(மனத்தை) மயங்கச் |