(இ-ள்.) (ஆதலால்), ஆற்றி- (சோகத்தைப்) பொறுத்து, நுமது ஆண்மை அழியாமல் -(அதனால்) உங்கள் பராக்கிரமம் சிதையாமல், இரும் - (மனவுறுதிநிலையோடு)இருங்கள், என்று என்று-என்று (இங்ஙனம்) பலவிதமாக, அடைவுஏ ஏற்றி -முறையாய் (அவர்கள் மனத்தில்) ஏற்கச்செய்து, சுருதி யாவைஉம் எடுத்து உரைசெய்து - வேதவாக்கியங்கள் பலவற்றையும் எடுத்துச் சொல்லி, தேற்றி -(அவர்களைச்) சமாதானப்படுத்தி, தன் சேவடி இறைஞ்சி போற்றிய மகீபரை -தன்னுடைய சிவந்த பாதங்களை நமஸ்கரித்துத் துதித்த அப்பாண்டவராசர்களை,நிறுத்தி-(ஒருவாறு சோகம்நீஙகிய நிலையில்) நிற்கச்செய்து, முனி -(எழுந்தருளின)அந்த வியாசமுனிவன், போனான் (அப்பால்) சென்றான்; ( எ- று.) அடைவேஏற்றுதல் - ஒவ்வொரு விஷயத்தை ஒவ்வொருவர்க்கும் உபதேசித்தல். தேற்றுதல் -தேறப்பண்ணுதல். பி-ம்: தமசேவடி இருத்தி. அவர்போனார். (311) 174.-அப்போதும் தேறாது அருச்சுனன் அக்கினிப்பிரவேசஞ்செய்யத் தீமூட்டச் சொல்லுதல். தேற்றினுமகப்பரிவுதேறலரிதன்றே யாற்றவரிதாதலினருச்சுனனரற்றா மாற்றரியபேரழல்வளர்த்தியெனவல்லே யேற்றதுணராதுதனதிளவலொடுரைத்தான். |
(இ-ள்.) ஆற்ற அரிது ஆதலின் - (அத்துன்பம்) பொறுக்க முடியாதாதலால், அருச்சுனன்-, அரற்றா - வாய்விட்டுப் புலம்பி, தனது இளவலொடு தனது அடுத்தம்பியானநகுலனுடனே, 'மாற்று அரிய - அவிக்க முடியாத, பேர் அழல் - பெருந்தீயை, வளர்த்தி - (எனது அக்கினிப்பிரவேசத்துக்காக) வளரச்செய்வாய், 'என - என்று, ஏற்றது உணராது - (செய்யத்) தக்கதை (இன்னதென்று) அறியாமல், வல்லே உரைத்தான் - விரைவிற் கூறினான்; தேற்றின்உம் - (எவ்வளவு) தேறுதல் செய்தாலும், மக பரிவு-புத்திரசோகம், தேறல் அரிது - சமாதானப்படுதற்கு முடியாதது. அன்றே - அல்லவோ? (எ -று.) 'தேற்றினாலும் புத்திரசோகம் தேறவொண்ணாததன்றோ' என்ற பொதுப்பொருள், மற்றைமூன்றடிகளாற் கூறப்படுஞ் சிறப்புப்பொருளைச் சமர்த்தித்துநின்றது-வேற்றுப்பொருள்வைப்பணியாம். பி - ம், அரிதென்றே. (312) 175.- அருச்சுனன் யார்தடுக்கவும் கேளாது அக்கினியிற்புகச் சித்தனாதல். மத்திரைமகன்கனல்வளர்க்கவதனூடே மித்திரரும்யாவரும்விலக்கவும்விலங்கான் சித்திரவில்லூடுயிர்செகுப்பனெனநின்றான் புத்திரரிலாவிடர்பொறுத்திடலுமாமோ. |
(இ-ள்,) மத்திரை மகன் - மாத்திரியின் குமாரனான நகுலன் கனல் வளர்க்க- (தமையன்கட்டளையைக் கடக்கவொண்ணாமையால் அங்ஙனமே) தீயை மூட்டிவளரச்செய்ய, - (அருச்சுனன்), |