பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்197

அரங்களை யுடைய தென்பது தோன்ற 'அயிலாழி' என்றும், 'பகவானுக்குச் சக்கரம்
முதலியன பகைவர்பார்வைக்கு அச்சஞ்செய்து ஆயுதகோடியிலும்,
அன்பர்கண்ணுக்கு அழகியனவாய்த் தோன்றி ஆபரணகோடியிலும், அமையும்'
என்ற சாஸ்திரார்த்தம் விளங்க, ' அணியாழி' என்றும் கூறப்பட்டது.   (328)

191.-வழியிடையில் அருச்சுனனுக்குநேர்ந்த அயர்ச்சியை
ஸ்ரீக்ருஷ்ணன் ஆற்றுதல்.

ஏகியநெறியிடையிளைத்துவாசவற்
காசியகுமரன்மெய்யயர்ந்துவீழ்தலும்
போகியினறிதுயில்புரியுநான்மறை
யோகியங்கையினணைத்துயக்கமாற்றியே.

இதுமுதல் நான்குகவிகள் - குளகம்.

     (இ-ள்.) ஏகிய நெறியிடை - (கிருஷ்ணஅருச்சுனர்) சென்ற வழி நடுவிலே,
வாசவற்கு ஆகிய குமரன் - இந்திரனுக்குப் பிறந்த குமாரனான அருச்சுனன்,
இளைத்து - மெலிந்து மெய் அயர்ந்து- உடம்பு சோர்ந்து, வீழ்தலும்-(கீழே)
விழுந்தவளவிலே, -போகியின் அறிதுயில் புரியும் நால்மறை யோகி -
ஆதிசேஷனிடத்து யோகநித்திரைசெய்கிற நான்குவேதங்களாலும் புகழப்படுகிற
யோகம்வல்ல கடவுளான கண்ணன், அம் கையின் அணைத்து - (தனது) அழகிய
திருக்கைகளால் (அருச்சனனைத்) தழுவி, உயக்கம் ஆற்றி-(அவனது) தளர்ச்சியைத்
தணியச்செய்து,- (எ-று.)-'ஆற்றி' என்பது, மேல் 194 ஆம் பாட்டிலுள்ள
'உரைத்தலும்' என்பதனோடு தொடரும்.

     போகம் என்றால், பாம்பினுடல்; அதனையுடையது போகீ: இது -பாம்புக்கு
வடமொழியிற் காரணப்பெயர். அறிதுயில்-எல்லாவற்றையும் அறியாநின்று செய்யுந்
தூக்கம்; விழிதுயில், துயிலாத் துயில், பொய்த்துயில் எனவும் படும். யோகம்-இமயம்
நியமம் முதலிய எட்டு அங்கங்களோடு செய்யும் ஒருவகைத்தவவொழுக்கம்:
அதனையுடையவன், யோகீ: இது-திருமாலின் ஆயிரத்தொட்டுத் திரு நாமங்களுள்
ஒன்றாம். கடவுள் சிலசமயங்களில் தான் யோகு செய்து நின்றதனாலும், பிறர்க்கு
யோகநிலையை உபதேசித்திருத்தலாலும், முனிவர் முதலியோரது யோகத்துக்கு
விஷய மாகுதலாலும், யோகி யென்று பெயர்: பகவத்கீதையில் "யத்ர
யோககேச்வரக்ருஷ்ண," என்றவிடத்தில், கண்ணபிரானை யோகங்களுக்குத் தலைவ
னென்றதுங் காண்க. கோயம் - லோகரக்ஷணசிந்தையுமாம். உயக்கம் -
தொழிற்பெயர். மாற்றி என்றும் பதம் பிரிக்கலாம்                   (329)

192.- இதுவும், மேற்கவியும் - கண்ணன் அருச்சுனனைப்
பசியும் விடாயும் நீங்க அருந்துமாறு கூறுதல்.

உண்டிலையடிசிலுமுண்ணுந்தீம்புனல்
கொண்டிலைபசிக்கனல்கொளுந்திவீழ்ந்தனை
மண்டிலைவேலினாய்மகவினன்பினாற்
கண்டிலையுலகியல்காட்டக்காட்டவே.