(இ-ள்.) மண்டு - (வலிமை) மிக்க, இலை வேலினாய்-அரசிலைவடிவமான வேலாயுதத்தை யுடையவனே! அடிசில்உம்- சோற்றையும், உண்டிலை-புசித்தாயில்லை; உண்ணும்-குடிக்கதக்க, தீம்புனல் - இனிய நீரை, கொண்டிலை- உட்கொண்டாயுமில்லை; பசி கனல் கொளுந்தி - பசியாகிய தீப்பற்றி, வீழ்ந்தனை - (கீழ்) விழுந்தாய்; உலகு இயல்-(யாக்கைநிலையாமையாகிய) உலகத்தின் இயல்பை, காட்ட காட்ட-(முனிவர்கள்) நன்றாக எடுத்துக் காண்பிக்கவும், மகவின் அன்பினால்- புத்திரவாற்சல்லியத்தால், கண்டிலை-(அதனைநீ) அறிந்தாயில்லை; (எ - று.) 'சோற்றாலெடுத்தசுவர்' என்னும்படி உடம்பிற்குஉறுதிதருகிற உணவை முற்கூறினான். 'உண்ணும் புனல்' என்ற இடத்து 'உண்ணல்' என்பது-பொதுவினை. பசி என்பது ஜாடராக்நியெனப்படுகிற வயிற்றினுள் உள்ளதொரு தீயின் செயலே யாதலாலும், நெருப்புப் போலப் பசி சேர்ந்துவிடத்தை மிக வருத்தலாலும், 'பசிக்கனல்'எனப்பட்டது. காணுதல்-அறிதல், காட்டுதல்-அறிவித்தல். (330) 193. | மாங்கனிவாழையின்கனிவருக்கையின் றீங்கனிகன்னலிற்செய்யநீருள வேங்கனற்பசியுநின்விடாயுமாறவே யீங்கினிதருந்துதியேந்தலென்னவே. |
(இ - ள்.) மா கனி-மாம்பழங்களும், வாழையின் கனி - வாழைப்பழங்களும், தீம் வருக்கையின் கனி-இனிய பலாப்பழங்களும், கன்னலின் செய்ய நீர்- கருப்பஞ்சாற்றினும் செம்மையான (மிகஇனிய) நீரும், உள-(இங்கு) உள்ளன; (அவற்றை), ஏந்தல்-பெருமையிற் சிறந்தவனே! நின்-உனது, வேம் கனல் பசிஉம்- எரிகிற நெருப்புப்போன்ற பசியும், விடாய்உம்-இளைப்பும், ஆற- தணிய, ஈங்கு- இப்பொழுது (இவ்விடத்தில்), இனிது அருந்துதி- இனிமையாக உண்பாய், என்ன- என்ற,- (எ- று.)-"இவையுரைத்தலும்" என அடுத்த கவியோடு தொடரும். மா+கனி=மாங்கனி: மரப்பெயர் முன்னர்இனமெல்லெழுத்து வரப்பெற்றது; (நன்- உயிர்-16.) மா, வாழை. வருக்கை என்பன-முக்கனியெனச் சிறப்பித்துக் கூறப்படும். கன்னலென்னுங் கரும்பின் பெயர்-அதன் இரசத்துக்கு ஆகுபெயராம். ஏந்தல்- உயர்ந்தவன்; ஆண்பாற்சிறப்புப்பெயர்; அல்- கருத்தாப்பொருள்விகுதி; இங்கே, அண்மைவிளி; ஆதலின், இயல்பு. பி-ம்: கன்னலிற் செழும்புனலுள, கன்னலிற்செய்தமாவுள. நீர்விடாயும். (331) 194.- அருச்சுனன் இன்னுஞ் சிவபூசை செய்யவில்லையே யெனல். சரிந்தவர்சரிவறத்தாங்குநாயகன் பரிந்திவையுரைத்தலும்பாவைபங்கன்மேற் புரிந்திலனின்னமும்பூசையென்றனன் வரிந்தவெஞ்சிலைக்குமண்மதித்தவீரனே. |
(இ-ள்.) சரிந்தவர் - தளர்ச்சியடைந்தவர்களது, சரிவு-தளர்ச்சி, அற- நீங்க, தாங்கும்-(அவர்களைப்) பாதுகாத்தருளுகிற, |