பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்203

காண்டகுசடைமுடிக்காலகாலன்மெய்ப்
பூண்டனபணிகளும்புரண்டுவீழ்ந்தவே.

     (இ-ள்.) (பாண்டவ(ர்) சகாயன் - பாண்டவர்க்குத்துணைவனாகிய
ஸ்ரீக்ருஷ்ணன், ஊர் - ஏறிச்செல்லுகிற, பறவையின்குலத்து ஆண்டகை-
பறவைக்குலத்தையெல்லாம் அரசனாகியாளுந்தன்மை வாய்ந்த
ஆண்மைக்குணமுள்ள கருடனுடைய, இரு சிறகு - இரண்டு இறக்கைகளும்,
அசையும் - அசைகின்ற, ஓதையால் - ஓசையினால்,- காண்தகு - காணத்தக்க
[அழகிதாகத்தோன்றுகிற], சடைமுடி - சடைமுடியையுடைய, காலகாலன் -
யமனுக்கும் யமனான சிவபெருமானுடைய, மெய் - திருமேனியிலே, பூண்டன -
ஆபரணமாக அணிந்தனவான, பணிகள்உம்- பாம்புகளும், புரண்டு வீழ்ந்த -
(அச்சத்தால்) கீழ் வீழ்ந்துபுரளலாயின;    (எ-று.)

     காலகாலனென்றவிவரம் :- ஊழ்வினையாற் பதினாறுபிராயம் பெற்ற
மிருகண்டுபுத்திரனாகிய மார்க்கண்டேயனென்னும்முனிவன், கூற்றுவன்வந்து
காலபாசத்தாற் கட்டியிழுங்குங்காலத்துப் பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான்
யமனைக் காலாலுதைத்துத்தள்ளி முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு
கொடுத்தருளினனென்பதாம். இச்சரித்திரத்தால், அனுபவித்தே தீரவேண்டும்
பெருவலிதாகிய ஊழ்வினையையும் தன் அடியார்க்குக்கடக்கச்செய்கிற கடவுளது
பேராற்றல் புலப்படும். காலன் - பிராணிகளின் ஆயுட்காலத்தை
வரையறுப்பவன்.                                            (340)

203.- கருடனைக் கண்ட அரமாதர் ஐயுறுதல்.

வரிந்தபைங்கனைகழல்வயினதேயனை
விரிந்தவெண்கிரியரமாதர்மீதுகண்
டெரிந்திடுவச்சிரனிந்தமால்வரைக்
கரிந்திலன்சிறகெனவையமெய்தினார்.

     (இ-ள்.) வரிந்த - (காலிற்) கட்டிய, பை - பசுமையான [பசும்பொன்னாலாகிய],
கனை - ஒலிக்கின்ற, கழல் - வீரக்கழலையுடைய, வயினதேயனை- கருடனை,
விரிந்த வெள் கிரி அரமாதர் -(ஒளி) விளங்குகிற வெள்ளிமயமான
கைலாசமலையில்வாழ்கிற தேவமாதர்கள், மீது கண்டு மேலே [ஆகாயத்திலே]
பார்த்து, 'எரிந்திடு வச்சிரன் - விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய தேவேந்திரன்,
இந்த மால் வரைக்கு - இந்தப் பெரிய மலைக்கு, சிறகு அரிந்திலன்- இறகுகளை
அறுத்தானில்லைபோலும்', என - என்று, ஐயம் எய்தினார் - சங்கைகொண்டார்கள்;
(எ-று.)

     'இந்த மால்வரை' என்றது, கருடனது பெருவடிவத்தை. கருடனைச்சிற
கறுபடாதமலையோ வென்று ஐயமுற்றதனால், ஐயவணி. அரமாதர் - அமரமாதர்
அல்லதுஅரம்பைமாதர் என்பதன் விகாரம்.

204.- கைலாயவருணனை.

நிறைமதிநிகரெனநிறத்தவெள்ளியம்
பொறைமலைதிசைதொறும்பொழியும்வாணிலா