காண்டகுசடைமுடிக்காலகாலன்மெய்ப் பூண்டனபணிகளும்புரண்டுவீழ்ந்தவே. |
(இ-ள்.) (பாண்டவ(ர்) சகாயன் - பாண்டவர்க்குத்துணைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ஊர் - ஏறிச்செல்லுகிற, பறவையின்குலத்து ஆண்டகை- பறவைக்குலத்தையெல்லாம் அரசனாகியாளுந்தன்மை வாய்ந்த ஆண்மைக்குணமுள்ள கருடனுடைய, இரு சிறகு - இரண்டு இறக்கைகளும், அசையும் - அசைகின்ற, ஓதையால் - ஓசையினால்,- காண்தகு - காணத்தக்க [அழகிதாகத்தோன்றுகிற], சடைமுடி - சடைமுடியையுடைய, காலகாலன் - யமனுக்கும் யமனான சிவபெருமானுடைய, மெய் - திருமேனியிலே, பூண்டன - ஆபரணமாக அணிந்தனவான, பணிகள்உம்- பாம்புகளும், புரண்டு வீழ்ந்த - (அச்சத்தால்) கீழ் வீழ்ந்துபுரளலாயின; (எ-று.) காலகாலனென்றவிவரம் :- ஊழ்வினையாற் பதினாறுபிராயம் பெற்ற மிருகண்டுபுத்திரனாகிய மார்க்கண்டேயனென்னும்முனிவன், கூற்றுவன்வந்து காலபாசத்தாற் கட்டியிழுங்குங்காலத்துப் பரமசிவனைச் சரணமடைய, அப்பெருமான் யமனைக் காலாலுதைத்துத்தள்ளி முனிகுமாரனுக்கு என்றும் பதினாறாகத் தீர்க்காயுசு கொடுத்தருளினனென்பதாம். இச்சரித்திரத்தால், அனுபவித்தே தீரவேண்டும் பெருவலிதாகிய ஊழ்வினையையும் தன் அடியார்க்குக்கடக்கச்செய்கிற கடவுளது பேராற்றல் புலப்படும். காலன் - பிராணிகளின் ஆயுட்காலத்தை வரையறுப்பவன். (340) 203.- கருடனைக் கண்ட அரமாதர் ஐயுறுதல். வரிந்தபைங்கனைகழல்வயினதேயனை விரிந்தவெண்கிரியரமாதர்மீதுகண் டெரிந்திடுவச்சிரனிந்தமால்வரைக் கரிந்திலன்சிறகெனவையமெய்தினார். |
(இ-ள்.) வரிந்த - (காலிற்) கட்டிய, பை - பசுமையான [பசும்பொன்னாலாகிய], கனை - ஒலிக்கின்ற, கழல் - வீரக்கழலையுடைய, வயினதேயனை- கருடனை, விரிந்த வெள் கிரி அரமாதர் -(ஒளி) விளங்குகிற வெள்ளிமயமான கைலாசமலையில்வாழ்கிற தேவமாதர்கள், மீது கண்டு மேலே [ஆகாயத்திலே] பார்த்து, 'எரிந்திடு வச்சிரன் - விளங்குகிற வச்சிராயுதத்தையுடைய தேவேந்திரன், இந்த மால் வரைக்கு - இந்தப் பெரிய மலைக்கு, சிறகு அரிந்திலன்- இறகுகளை அறுத்தானில்லைபோலும்', என - என்று, ஐயம் எய்தினார் - சங்கைகொண்டார்கள்; (எ-று.) 'இந்த மால்வரை' என்றது, கருடனது பெருவடிவத்தை. கருடனைச்சிற கறுபடாதமலையோ வென்று ஐயமுற்றதனால், ஐயவணி. அரமாதர் - அமரமாதர் அல்லதுஅரம்பைமாதர் என்பதன் விகாரம். 204.- கைலாயவருணனை. நிறைமதிநிகரெனநிறத்தவெள்ளியம் பொறைமலைதிசைதொறும்பொழியும்வாணிலா |
|