பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்207

உம் - இந்தத் திருமால்க்ருஷ்ணனாகத்திருவவதரித்ததும், இளைத்த -
(பலதுஷ்டவரசரையும் அசுரரையும் சுமப்பதனால்) இளைப்படைந்த, பார்மகள் -
பூமிதேவியின், தீங்கு-தீமை [சுமை], அற - நீங்குமாறு, புரிதரு - செய்துவருகின்ற,
செயல்உம் - செய்கையும் ஆகிய, யாஉம் - எல்லாச் செய்கையையும், பாங்கினால்-
பாங்காக [ஆர்வமோடு], வினாவினான் - கேட்டான்; (எ-று.)            (347)

210.-ஸ்ரீக்ருஷ்ணன் தான் செய்ததையெல்லாம் சொல்லியபின், சிவ
பெருமான் அருச்சுனனை வரவேற்க, அக்கடவுளை அருச்சுனன்
பணிதல்.

கேசவன்புரிவெலாங்கிரீசனென்னுமத்
தேசவன்தெளிவுறச்செப்பிவிட்டபின்
வாசவன்புதல்வனைவருகவென்றலும்
பாசவன்புடனவன்பணிந்துபோற்றினான்.

     (இ-ள்.) கேசவன் - கேசியென்னும் அசுரனைக் கொன்றவனாகிய க்ருஷ்ணன்,
புரிவு எலாம் - (தான்) செய்த செயல்களையெல்லாம், கிரீசன் என்னும் அ
தேசவன்-கிரீசனென்று திருநாமம்பூண்ட ஒளியுள்ள அந்தக்கடவுள், தெளிவுஉற-
நன்குதெளியும்படி, (செவ்வனே), செப்பிவிட்ட பின்-சொல்லி முடித்தபின்பு,-
(அச்சிவபெருமான்),-வாசவன்புதல்வனை - இந்திரனுக்குப் புதல்வனான
அருச்சுனனைப்பார்த்து, வருக என்றலும் - 'வருவாயாக' என்று வரவேற்றலும்,-
அவன்-அந்த அருச்சுனன், பாசம்- மனத்தைப் பிணித்தலையுடைய, அன்புடன்-
அன்போடு [பக்தியோடு], பணிந்து (அந்தச் சிவபெருமானை) வணங்கி,
போற்றினான்- வாழ்த்தினான்; (எ-று.)

     கிரீசன் என்ற வடசொல் - மலையிலிருக்குந் தலைவனென்று
காரணப்பொருள்படும். அன்பு பற்றுதலை யுண்டாக்குதலால், 'பாசவன்பு' என்றார்.

      (2) புரநகையாலெரிபுராரிதன்முன
         நரனொடுநாரணனணுகியன்பினாற்
         சரணபங்கயமுறத்தாழ்ந்துபன்முறை
         கரனுறமுகிழ்த்திகழறன்மேயினார்.

     (இ-ள்.) திரிபுரத்தை சிரிப்பினால் எரித்திட்ட சிவபிரானது முன்னிலையில்
[சந்நிதாநத்தில்] அருச்சுனனும் கிருஷ்ணனும் சேர்ந்து, அன்பினால் (அப்பிரானது)
திருவடித் தாமரைகளில் நன்றாக நமஸ்கரித்து, கைகளைச் செவ்வையாகக்
கூப்பிக்கொண்டு, அநேகமுறை இவ்வார்த்தையைச் சொல்லத்தொடங்கினார்கள்;
(எ-று.) - அதனை மேற்காண்க. இதன்பின் "பொங்கரா" (212) என்றும்
"விண்ணிடைத்திரிபுரம்" (213) என்றும் தொடங்குகிற பாடல்கள் முன்பு
அச்சிட்டுள்ளபிரதிகளில் உள்ளன. அவற்றை, (3) (4) பாடல்களாகக்கொள்க. (348)

211.-தான்முன்பு கண்ணன்மேல் அணிந்த மலர்களைச் சிவபிரான்மீது
காணலும் அருச்சுனன் இருவர்க்கும் பேதமில்லையென்று
உடற்புளகமுண்டாகப்பெறுதல
்.

கண்ணன்மேலணிமலரனைத்துங்காய்கனல்
வண்ணன்மேற்காண்டலுமனங்களிப்புறா