வாறு) மாற்றிவிட்டாய்; (எ -று.)-பி-ம்: துயரமுமறுத்து, மெய்ம்மையான். மும்முறைப்பிறப்பில் அருச்சுனன் திருமாலோடுகூடவந்ததனை "நரனும் நாரணனுமானோம்," "பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப் பேர்பெற்றோம், இந்நெடும்பிறப்பில்நீயும் யானுமாயீண்டு நின்றோம்" என்று முதற்போர்ச்சருக்கத்து வந்ததனாலு முணர்க. கொள்ளுமே, ஏகாரம் - வினாவகையால், எதிர்மறைகுறித்தது. உன்னுடைய அமிசம் இவனுக்கு அமைந்திருத்தலினால், இனி இவனுக்குப்பிறப்பில்லையென்றானென்க. (354) 217.-'வேண்டுவது யாது?' என்று சிவபெருமான் கேட்க. அருச்சுனன் பகையறுக்கும்படையை வேண்டுதல். * வேண்டுவதென்கொல்மற்றென்னவீரனும் பூண்டதோர்பறையறைந்தன்றிப்போகலேன் ஆண்டருள்படைகளாலவுணர்க்காய்ந்தனன் ஈண்டுநல்குதிவிறலெய்தும்வண்ணமே. |
(இ-ள்.) மற்று - இனி, வேண்டுவது-விரும்புவது, என்கொல்- யாது? என்ன- என்று வினாவ,-வீரன்உம் - வீரனாகிய அருச்சுனனும், பூண்டது - (யான்) மேற்கொண்ட போர்த்தொழிலை, பறை அறைந்து அன்றி - (வென்று) வெற்றிப்பறையை எறிந்தல்லாமல், போகலேன்- இதனினின்று நீங்கேன்: ஆண்டு - (நான் தவம்புரிந்த) அக்காலத்து, அருள் - ( ) கருணையோடுதந்த, படைகளால் - ஆயுதங்களினால், அவுணர் - (நிவாதகவசர்முதலிய) அசுரர்களை, காய்ந்தனன்- கொன்றேன்; ஈண்டு-இப்போது, விறல் எய்தும் வண்ணம் - (நான்) வெற்றியையடையும் வகையை, நல்கு - அருள்புரிவாய் ; (எ - று.)-என்று தான் வேண்டுவதை அருச்சுனன் சிவபெருமானிடம் கூறினான் என்க. வீரனும் என்பதற்கு - ஸ்ரீக்ருஷ்ணனும் என்பாரு முளர். பி - ம்: பூண்டதோர்பகையறுத்தன்றி. விறலெண்ணும். (355) 218.-ஸ்ரீக்ருஷ்ணன் சிவபெருமானை நோக்கிக் கூறுதல். * தானவர்ப் பொரும்படை கொண்டு தாரணி மானவர்ப் பொருவது வழக்கு மல்லவால் கூனல்விற் கணைகளுங் குறைவுறாததோர் தூநிழற் பொய்கையுங் கொடுத்தி தோன்றலே. |
நான்குகவிகள் - ஒருதொடர். (இ - ள்.) 'தோன்றலே - விளங்குபவனே! தானவர் பொரும் படைகொண்டு- அசுரரைக்கொல்லுதற்கு உரியபடையைக்கொண்டு, தாரணி- பூமியிலேயுள்ள, மாணவர்-மனிதரை, பொருவது - போர் செய்வது, வழக்குஉம் அல்ல - முறைமையுமன்று: ஆல் - ஆதலால், கூனல் வில் - வளைவுபொருந்திய வில்லிற்பூட்டுதற்குஉரிய, கணைகள்உம்-அம்புகளும், குறைவு உறாதது ஓர் தூநிழல்பொய்கை
* இச்செய்யுள்கள் சிறிது பாடபேதத்துடன் (10, 11)-ஆம் பாடல்களாக 211- ஆம் பக்கத்துக் காட்டப்பட்டுள்ளன. |