(இ-ள்.) ஆளை- (ஒரு) மனிதனை, ஆள் - (மற்றொரு) மனிதன், நிலை அறிவது அல்லது - (எதிரில்நின்று காணப்படும்) வடிவத்தை மாத்திரம் அறிவதல்லாமல், மற்று- மற்றை வலிமை திறமைமுதலிய குணாதிசயங்களை, அறிபவர் - அறியவல்லவர், யார் - எவர்? (ஆதலால்), அணிந்த போரில் - அணி வகுத்துச்செய்யும் யுத்தத்தில், நாளை - நாளைக்கு, யார் வெல்வர் - எவர் சயிப்பர்? என - என்று, தெரியும்ஓ - (இன்றைக்குத்) தெரியுமோ? என - என்று, நவின்று- சொல்லி, நகைத்தான் - (பரிகாசமாகச்) சிரித்தான்; (யாவனெனில்?) - பாளை வாய் -பாளை யமைந்த, நெடுங்கமுகின் - நீண்ட பாக்கு மரத்தின், மிடறு - கழுத்து[மேலிடம்], ஒடிய - ஒடிபடவும், குலை தெங்கின் பழங்கள் - குலையாகவுள்ளதென்னைமரத்தின் முதிர்ந்த காய்கள், வீழ - கீழ்விழவும், வாளை பாய் -வாளைமீன்கள் தாவிப் பாயப்பெற்ற, குரு நாடுஉம்- குருநாட்டையும், எ நாடுஉம்-மற்றை யெல்லாநாடுகளையும், முழுது ஆளும் - முழுவதும் அரசாளுகிற, மன்னர்கோமான் - ராஜராஜனான துரியோதனன்; ( எ-று.) 'நாளை யார்வெல்வ ரெனத் தெரியுமோ' என்ற துரியோதனனது உட்கோள், அருச்சுனனைச் சயத்திரதன் வெல்வானென்பது. மீனின்கொழுமையைக் கூறி, அதனால், நாட்டுவளத்துக்குப் பிரதானகாரணமான நீர்வளச்சிறப்பைத் தெரிவித்தவாறு;இங்ஙனம் வருணித்தல் கவிகளுக்கு இயல்பு. தெங்கின் முற்றின நெற்று பழமெனப்படுவதை "காய்மாண்ட தெங்கின் பழம் வீழ" எனச் சிந்தா மணியிலுங்காண்க. மன், ஓ - ஈற்றசை. (374) 237.- இதுவும், மேற்கவியும் - கர்ணன் கூறுதல். தாரரசன்மகன் றுச்சாதனன் மகன் சல்லியன்மகன் வேற் சகுனியென்னும், பேரரசன்மகன் முதலாவெத்தனைபேர் பட்டாலும் பெரியதன்றே, பாரரசாளுதற்கிருந்த பார்த்தன்மா மகனொருவன் பட்டானாகி, லாரரசுக்கின்யுரியா ரந்தோவென்றுரைத்தான்மற் றங்கர்கோமான். |
(இ-ள்.) தார் அரசன் மகன்-வெற்றிமாலையையுடைய துரியோதனது குமாரனான இலக்கணனும், துச்சாதனன் மகன் - துச்சாசனனது புத்திரனான துச்சனியும், சல்லியன் மகன் - சல்லியனது புதல்வனும், வேல் சகுனி என்னும் பேர்அரசன் மகன் -வேலில்வல்ல சகுனியென்னும் பெரிய அரசனது மைந்தனும், முதல்ஆ-முதலாக, எத்தனை பேர் பட்டால்உம் - எத்தனையோபேர் இறந்தாலும், பெரியதுஅன்றே - (அதுவெல்லாம்) பெரியதன்றாம்; அரசு ஆளுதற்கு இருந்த - பூமிமுழுவதையும் (இனி) அரசாட்சிசெய்ய இருந்த-பார்த்தன் மா மகன் ஒருவன் - அருச்சுனனது சிறந்த பிள்ளையான அபிமனொருத்தன், பட்டான் ஆகில்- இறந்தானானால், இனி அரசுக்கு ஆர் உரியார்-இனி அரசாட்சிக்கு எவர் உரியர்? அந்தோ - ஐயோ! என்று -, மற்று - பின்பு, அங்கர் கோமான் - அங்கநாட்டார்க்குத்தலைவனான கர்ணன், உரைத்தான் - (பரிகாசமாகக்) கூறினான்; இராச்சியத்துக்கு உரியவரான துரியோதனன் முதலியோரது மக்கள் இறந்ததை அவர்கள் பெரிதும் பாராட்டாமலிருக்க, அர |