(இ -ள்.) இருவர் - இரண்டுபேர், எதிர் எதிர் - எதிர்க்கு எதிராக (நின்று), தம்மில் - தமக்குள் [ஒருவரோடொருவர்], இகல் பொருதல் - போர்செய்தல், உலகுஇயற்கை -; (அப்படியிருக்க), யார் உம் - (நீங்கள்) எல்லோரும், கூடி - ஒன்றுசேர்ந்து, (வந்துஎதிர்த்து) பருவம் உறா- தக்கபிராயம் நிரம்பாத, தனி - ஒப்பற்ற,குதலை - மழழைச் சொற்களையுடைய, பாலகனுக்கு - இளங்குமரனான அபிமனுக்கு.ஆற்றாமல் - முன்நிற்கமாட்டாமல், பறந்து போனீர் - (முதலில்) விரைந்தோடிப்போனீர்கள் ; (அப்படிப்பட்ட உங்களில்), (பின்பு) ஒருவன் - [கர்ணன்],நெடு தேர் அழிக்க - பெரியதேரைச்சிதைக்க, ஒருவன் -[துரோணன்], மலர் கைதுணிக்க - தாமரைமலர்போன்ற ஒருகையைத் துண்டிக்க, ஒருவன்- [சயத்திரதன்],பின்னை - அதன் பின், பொருவன் என - (நான் உன்னோடு) போர்செய்வேனென்று சொல்லி, அறை கூவி- வலியப் போருக்கு அழைத்து, பொன்றுவித்தான் -(அபிமனை) அழியச்செய்தான்; இது கொண்டுஓ - இந்தப் பராக்கிரமத்தாலோ,புகல்கின்றீர் - (நீங்கள் செருக்கிப்) பேசுகின்றீர்கள்; ( எ-று.)- என்று கடோற்கசன்கூறினான். ஈற்றேகாரம்- இகழ்ச்சி. மழலையும் குதலையும் ஒருபொருளன வென்பது ஒருசாரார் துணிபு; பரிமேலழகர்கருத்தும் இதுவே. மற்றொருசாரார், குதலை- எழுத்துவடிவுபெறாததென்றும். மழலை- எழுத்துவடிவுபெற்றுச் சொல்வடிவுபெறாததென்றும் வேறுபாடுகூறுவர். இருவரெதிரெதிர் தம்மில் இகல்பொருதல்-'த்வந்த்வயுத்தம்'. (379) 242.-அதுகேட்டுத் துரியோதனன் கூறுதல். வரைக்குவமை பெறுந்தடந்தோள் வீமன்மகனிப்படியே மதி யானாகி, யுரைக்குமொழி கேட்டிருந்த வுரகமணி கொடிவேந்த னுருத்துநோக்கி, யிருக்குமெழி லவைக்கேற்ப லியம்பாமற் றன்மதத்தா வியம்புகின்ற, வரக்கிமக னுடனென்றுங் கழறாதீரென்றுரைத் தானரசர்யார்க்கும். |
(இ -ள்.) வரைக்கு - மலைக்கு, உவமை பெறும்- ஒப்பாகத்தக்க, தடதோள் -பெரிய தோள்களையுடைய, வீமன் மகன் - கடோற்கசன், மதியான் ஆகி- (தம்மை)லட்சியஞ்செய்யாதவனாய், இ படி ஏ உரைக்கும் - இவ்வாறேமேல்மேல் கூறுகிற,மொழி- வார்த்தையை, கேட்டு இருந்த-, உரகம் அணிகொடி வேந்தன் -பாம்பின்வடிவைத் தரித்த துவசத்தையுடைய துரியோதனன் ,உருத்து நோக்கி -கோபித்துப்பார்த்து, அரசர் யார்க்குஉம் - (அங்கிருந்த) அரசரெல்லோருக்கும்,'இருக்கும் - (நாம்) வீற்றிருக்கிற, எழில் - அழகிய, அவைக்கு - இச்சபைக்கு, ஏற்ப -தக்கபடி, இயம்பாமல் - பேசாமல், தன் மதத்தால் தனது கொழுப்பினால்,இயம்புகின்ற - பேசுகிற, அரக்கிமகனுடன்- இராக்கதியின் புத்திரனானகடோற்கசனோடு, ஒன்றுஉம் கழறாதீர்- யாதொருவார்த்தையையும் சொல்லாதீர்',என்று உரைத்தான் - என்று கூறினான்; (எ -று.) 'வரைக்கு உவமைபெருந் தோள்' என்றதற்கு - மலையினுஞ் சிறந்த தோள் என்று கருத்து. இதில் 'அரக்கிமகன்' என இகழ்ந்தவாறு. இரவில் வலிமை மிகுதியுடைய இராக்கதனான கடோற் |