பக்கம் எண் :

பதின்மூன்றாம் போர்ச்சருக்கம்233

வணங்காமுடிமன்னனான இவன் இங்ஙனம் வீழ்ந்து வேண்டினான். காளையர்
அனைவரும் காமின் - இடவழுவமைதி. உபகாரஞ்செய்தவர்க்கும்
அபகாரஞ்செய்பவ னென்பது தோன்ற, ஆளையும் அடு களிற்றுமன்னவனென்றார்.
ஆளையும் என்ற உயர்வுசிறப்பும்மையால், அதனை அவன் ஓம்புந்தன்மைவிளங்கும்.
வேலைபுக்கவரினும் - (மரக்கலமுடைந்து) கடலில் வீழ்ந்தவரினும் மிகுதியாக
என்றும்உரைக்கலாம்.                                           (386)

249. - இதுமுதல் மூன்று கவிகள் - ஒரு தொடர்:
துரோணன் தைரியங் கூறுதலைத் தெரிவிக்கும்.

மணிமதிலரணெனமன்னுசேனையை
யணிபடநிறுத்தியாமளவுங்காப்பன்யான்
பணிவுறுபுண்ணியபாவமுற்றுவ
துணிவுறத்தெரியுமோதும்பைமாலையாய். 

     (இ-ள்.) தும்பை மாலையாய் - (போருக்குரிய) தும்பைப்பூ
மாலையையுடையவனே! யான்-, மன்னு சேனையை - நிலைபெற்ற (நமது)
சேனையை, மணி மதில் அரண் என - அழகிய மதிலாகிய அரண்போல,
அணிபடநிறுத்தி - இடைவிடாது பொருந்த நிற்கச் செய்து, ஆம் அளவுஉம் -
(என்னால்)இயலுமளவும், காப்பன் - (சயத்திரனைப்) பாதுகாப்பேன்; பணிவு உறு-
(தம்மைச்செய்த வரை) நியமித்தல் பொருந்திய, புண்ணியம் பாவம்- (அவரவர்
செய்த)நல்வினை தீவினைகள், முற்றுவ - நிறைவேறும் வகைகள், துணிவுஉற
தெரியும்ஓ -நிச்சயமாக முந்தி அறியப்படுமோ? [படா என்றபடி]; ( எ - று.)

     என்னாலியன்றமட்டில் யான் பாதுகாப்பேன்; யார் விதி எப்படி பலிக்குமோ?
தெரியாது என்பதாம். 'பணியுறு' என்ற பாடத்துக்கு - முந்திச் செய்து பொருந்திய
என்க; பணி = பண்ணி.                                          (387)

250.முப்பதுகடிகையின்மொழிந்தவஞ்சினந்
தப்பதுபடாதெனிற்றனஞ்சயன்சிலைக்
கொப்பதொன்றில்லைமற்றுரைத்தவாசெய
லப்பதுமாசனன்றனக்குமாகுமோ.

     (இ-ள்.) மொழிந்த வஞ்சினம்- (அருச்சுனன்) சொன்ன சபதம், முப்பது
கடிகையின் - (நாளைப்பகல்) முப்பதுநாழிகைக்குள்ளே, தப்பு அது படாது
எனின் -தவறாமல் நிறைவேறிவிடுவதானால், தனஞ்சயன் சிலைக்கு ஒப்பது ஒன்று
இல்லை -அருச்சுனனது வில்லுக்குச் சமமாவது யாதொன்றுமில்லை; (ஏனெனில்),-
உரைத்த ஆ(று) செயல்- சொன்னபடி செய்தல், அ பதுமஆசனன் தனக்கும்
ஆகும்ஓ-திருமாலின் திருவுந்தித்தாமரைமலரை இருப்பிடமாகவுடைய
அந்தப்பிரமதேவனுக்குத்தான் முடியுமோ? ( எ -று.)

     "சொல்லுதல் யார்க்குமெளிய வரியவாஞ், சொல்லியவண்ணஞ் செயல்"
என்றபடி சொன்னவாறுசெய்தல் படைக்குங் கடவுளான