பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்245

அந்தணன் - பிராமணனான துரோணன், அணிந்த - அணிவகுத்த, விரகினை -
தந்திரத்தை, (கண்டு),- விமானத்து அமரர்உம்- (வானத்தில்) விமானத்தின்மீது
இருந்துகொண்டு போர்காண்கிற தேவர்களும், 'சந்து அணி - சந்தனக்குழம்பைப்
பூசியவையும், கடகம் - கடகமென்னும் வளையை யணிந்தவையும், நீள் சிகரம் -
உயர்ந்த மலையுச்சி போன்றவையுமான, வாகு - தோள்களையுடைய, சயத்திரதனை-,
கொந்து அழல் உரோடம் தனஞ்சயன் - பற்றியெரிகிற தீத்திரள் போன்ற
பெருங்கோபத்தையுடைய அருச்சுனன், பொருது - போர்  செய்து, ஒரு பகலில் -
இன்றை ஒருபகற்பொழுதினுள், கோறல்ஓ- கொல்லுதலோ, அரிது - அருமையானது',
என குறித்து - என்று எண்ணி, - அதிசயித்து உரைத்தார் - (துரோணண்
படைவகுத்த திறத்தைப்பற்றி) ஆச்சரியப்பட்டுக் கொண்டாடிப் பேசினார்கள்;

     மந்தணம் = மந்த்ரம்: ஆலோசனையைக் குறிக்கிற இச்சொல் -
இலக்கணையால், அதுசெய்தற்கு உரிய இடத்துக்கு வந்தது. பகைவர்
படைக்கலங்களால் ஊறடையாத திண்மையும் பருமையும் உயர்வும் பற்றி,
'வாகுநீள்சிகரம்' எனப்பட்டது. கோறலோ, ஓகாரம்- தெரிநிலை.          (405)

9.- அருச்சுனன் போர்தொடங்குதல்.

செய்த்தலைக்கயலும்வாளையும்பிணங்குஞ்செழும்புனற்சிந்து
                                    நாட்டரசைக்,
கைத்தலத்தடங்கும்பொருளெனக்காத்துக்காவலர்நின்ற
                                     பேரணிகண்,
டுத்தமோசாவுமுதாமனுமுதலோரோரிருபுறத்தினுஞ்சூழ,
வித்தகவலவன்முன்செலத்தடந்தேர்விசயனவ்வினைஞர்
                                    மேனடந்தான்.

     (இ -ள்.) செய்த்தலை- கழனிகளிலே, கயல் உம் - கயல்மீன்களும்,
வாளைஉம்- வாளைமீன்களும், பிணங்கும்- (ஒன்றோடொன்று) மாறு பட்டுப்
பொருகிற, செழும்புனல் - மிக்க நீர்வளப்பத்தையுடைய, சிந்து நாடு -
சிந்துதேசத்தின், அரசை -இராசனான சயத்திரதனை, கைத்தலத்து அடங்கும்
பொருள் என - கையிலடங்கியபொருளைப் (பாதுகாத்தல்) போல, காவலர் -
காக்குந்திறமமைந்தவர்களானஅரசர்கள், காத்து நின்ற - பாதுகாத்து நின்ற, பேர்
அணி - பெரிய(எதிர்ப்பக்கத்துப்) படைவகுப்பை, கண்டு - பார்த்து,- தட தேர்
விசயன் -பெரியதேரையுடைய அருச்சுனன், உத்தமோசா உம்உதா மன்உம்
முதலோர்-உத்தமௌஜஸ் என்பவனும் யுதாமந்யு என்பவனும் முதலான வீரர்கள்,
ஒர் இருபுறத்தின்உம் சூழ - (தனது) இரண்டுபக்கங்களிலும் அடுத்துவரவும்,-
வித்தகம்வலவன் - திறமையுள்ள சாரதியான கண்ணபிரான், முன் செல - (தனது
தேரின்)முன்னிடத்திற் பொருந்தவும், அ வினைஞர்மேல் நடந்தான் -
எதிர்ப்பக்கத்துப்போர்வீரர் மேற் (போருக்குச்) சென்றான் ; ( எ-று.)

     சிறிய கயல்மீன்கள் தங்குதற்கு உரிய கழனிகளிலும் சர்ப்
பெருக்குமிகுதியாற்பெரியவாளைமீன்கள் வந்துபாய்கின்றனவென்ற தன்மையும்,
சிறுமீன்களைப் பெருமீன்கள் உணவாகக்கொள்ளுதல் இயல்பாயினும்
அந்நாட்டுக்கழனியில் நீர்வளத்தாற்கொழுத்துள்ள சிறியகயல்மீன்கள்
வெளியிலிருந்துவருகிற பெரியவாளைமீன்களை