பக்கம் எண் :

254பாரதம்துரோண பருவம்

     சிறப்புடையரான தேவரும் துதித்தன ரென்றதனால், பிறர் துதித்தமைதானே
புலப்படும். மிகப்பரந்த கடலினிடையிலே தடையற ஊடறுத்துக்கொண்டு விரைந்து
செல்கிற மரக்கலம், மிகப்பரந்த சேனையினிடையிலே தடையறப் பகைதொலைத்துக்
கொண்டு பெருமிதத்தோடு விரைந்துசெல்கிற அருச்சுனனுக்கு உவமை.
உபமானமாகிய மரக்கலத்துக்கு ' உலம்பவோடு' என்ற அடைமொழி கொடுத்துக்
கூறினதானால், அருச்சுனன் தனதுவெற்றி தோன்றச் சிங்கநாதஞ்செய்துகொண்டு
வந்தனனென விளங்கும், விட்டுஎனப் பதம்பிரித்தும் பொருள் கொள்ளலாம்.
பி - ம்:
துலக்க முற்று.                                   (420)

24.- நான்குகவிகள்- கர்ணனும் அருச்சுனனும் பொருதலைக் கூறும்.

துதியினாலுயர்ந்தவண்மையுடையபானுசூனுவுங்
கதியினாலுயர்ந்தமாவொடொத்ததேர்கடாவினான்
மதியினாலுயர்ந்தகொற்றவலவனுந்துதேருடன்
விதியினாலுயர்ந்தசாபவெஞ்சமந்தொடங்கினார்.

     (இ -ள்.) (அவ்வாறு அருச்சுனன் வருதலைக் கண்டு),- துதியினால் உயர்ந்த -
புகழினாற் சிறந்த, வண்மை உடைய - ஈகைக் குணத்தையுடைய, பானு சூனுஉம் -
சூரியகுமாரனான கர்ணனும்,- கதியினால் உயர்ந்த - பலவகைநடைகளாற் சிறந்த,
மாவொடு - குதிரைகளோடு, ஒத்த - கூடின, தேர் - (தனது) தேரை, மதியினால்
உயர்ந்த கொற்றம் வலவன் உந்து தேருடன் -ஞானத்தினாற் சிறந்த
வெற்றியையுடைய சாரதியான கண்ணபிரான் செலுத்துகிற (அருச்சுனனது)
தேருடன்,கடாவினான் - நெருங்கச்செலுத்தினான்; (பின்பு இருவரும்), விதியினால்
உயர்ந்த -(தநுர்வேதத்திற்கூறிய) விதிகளின்படி சிறந்துள்ள, சாபம் -
வில்லைக்கொண்டுசெய்கிற, வெம்சமம் - கொடிய போரை, தொடங்கினார்-;
(எ -று.)

     வண்மை - பண்புப்பெயர்: யாசகர்க்குத் தடையில்லாமலும்,
வரையறையில்லாமலுங் கொடுத்தல்; புகழின் காரணம் பலவற்றுள்ளும் ஈதலே
சிறந்ததென்பது தோன்ற, 'துதியினாலுயர்ந்த வண்மை' என்றார். பி -ம்:
கடாவிமுன்.தொடங்கினான்.                                    (421)

25.தொடங்குபோரில்வலியினாலுமதனினுந்துலங்குமெய்
விடங்கினாலும்வின்மையாலுமுவமைதம்மில்வேறிலார்
விடங்கொள்வாளிமின்பரப்பிவெய்யநாணிடிக்கவே
மடங்கல்போலிரண்டுவில்லுமண்டலம்படுத்தினார்.

     (இ-ள்.) வலியினால்உம்- பலத்தினாலும், மதனின்உம் துலங்கு மெய்
விடங்கினால்உம்- மன்மதனைக்காட்டிலும் மிகுதியாக விளங்குகிற உடம்பின்
அழகினாலும், வின்மையால்உம்- விற்போர்த்திறத்தினாலும், தம்மில் உவமைவேறு
இலார்- (தமக்குத் தாமேயன்றி) வேறு ஒப்புப்பெறாதவரான அருச்சுனனும் கர்ணனும்,
- தொடங்கு போரில் - செய்யத்தொடங்கிய யுத்தத்திலே,- விடம் கொள் வாளி -
(கொடுமையில்) விஷத்தையொத்த அம்புகளாகிய, மின் - மின்னல்களை, பரப்பி -
பரவச்செய்து,- வெய்ய நாண் - கொடிய வில் நாணி,