இடிக்க - இடியோசயைச்செய்ய,- மடங்கல் போல் - யுகாந்த காலத்து மேகங்கள்போல, இரண்டுவில்உம்- (தமது) விற்களிரண்டையும், மண்டலம்படுத்தினார் - நன்றாகவளைத்தார்கள்; (எ -று.) மேகம் மின்னல்பரப்பி இடமுழக்கி வானவில்வளையப் பெறுதல்போல, இவர்அம்பு பரப்புதலுற்று நாணொலிமுழக்கி வில் வளைவு செய்தன ரென்க. நான்காமடியில் வந்த உவமையணிக்கு, மூன்றாமடியில் வந்த உருவகவணி அங்கமாதல் காண்க 'மடங்கல்' என்று கற்பாந்தகாலத்துக்குப் பெயருள்ளதனால், அது-காலவாகு பெயராய், அக்காலத்து அளவிலாமழைபொழிந்து உலகையழிக்கலுறும் மேகத்தைக் குறித்தது. மடங்கல் - இடிஎன்பாருமுளர். வலிமை அழகு வில்திறம் என்பவற்றில் அருச்சுனனுக்குக் கர்ணனும், கர்ணனுக்கு அருச்சுனனும் ஒருகால் ஒப்பாகக்கூடுமேயன்றிப் பிறர் இவர்க்கு ஒப்பாகாரென்பது 'உவமைத்தம்மில்வேறிலார்' என்றதன் கருத்து. விடங்கொள்வாளி - பகைவருயிரைக்கவரதக்க மிக்ககொடுமைவாய்ந்த அம்புஎன்றபடி; நுனியில் நஞ்சுதீற்றிய அம்புமாம். (422) 26. | மண்டலம்படுத்தவில்லின்வலிகொள்கூரவாளியால் விண்டலம்புதைந்துதங்கண்மெய்படாமல்விலகினார் குண்டலங்கள்வெயிலுமூரல்குளிர்நிலாவும்வீசவே மண்டலம்புகாமனேர்வயங்குவாண்முகத்தினார். |
(இ-ள்.) குண்டலங்கள் - (தம்தமது) குண்டலமென்னுங் காதணிகள், வெயில்உம்- சூரியகாந்திபோன்ற ஒளியையும், மூரல் - புன்சிரிப்பு, குளிர் நிலாஉம் குளிர்ந்தசந்திதரகாந்திபோன்ற ஒளியையும், வீச - மிகுதியாக வெளிப்படுத்த, - மண்டல் அம்பு காமன் நேர் வயங்கு - பெரும்போர்செய்கிற (புஷ்ப) பாணங்களையுடைய மன்மதனுக்கு ஒப்பாய் விளங்குகிற, வாள் முகத்தினார் - பிரகாசமுள்ள முகத்தையுடையவர்களான அருச்சுனனும் கர்ணனும்,- மண்டலம் படுத்த வில்லின் - (தாம்தாம்) நன்றாகவளைத்துப்பிடித்த விற்களினாலெய்த, வலிகொள் கூர வாளியால் - வலிமையைக்கொண்ட கூர்மையையுடைய அம்புகளினால், விண் தலம் புதைந்து - ஆகாயத்தின் இடம் மறைய, தங்கள் மெய்படாமல் - தங்களுடம்பு ஊறுபடாத படி, விலகினார் - எதிர் தடுத்தார்கள் ; (எ- று.) இது, தம்மேல் விரைந்துவரும் அம்புகளைக் குறிதவறாமல் எதிரம்புகோத்து மறுத்திடுங் திறங் கூறியது. இருவரும் அம்புக்கு இலக்காகாதபடி நின்றன ரென்பதாம்.மண் தலம் புகாமல் நேர் வயங்கு வாள் முகத்தினார் என்று பிரித்து - தரையைநோக்காமல் [தலை குனியாமல்] எதிராகநிமிர்ந்து விளங்குகிற ஒள்ளிய முகத்தையுடைவ ரென்று உரைத்தலும் ஒன்று. மூன்றாமடியில், வெயில் நிலா என்று மாறுபட்ட சொற்கள்வந்தது, முரண்தொடை. புதைந்து - எச்சத்திரிபு. பி - ம்: வண்டலம்புகமலநேர், (423) 27. | முகத்தினின்றகன்னனோடு முடிமகீபரோடுநின் றிகற்செய்கின்றகடிகையோரிரண்டுசென்றதென்றுள |
|