பக்கம் எண் :

274பாரதம்துரோண பருவம்

களும், பைங் கயல் - பசுநிறமான கயல்மீன்களும், கெண்டை -
கெண்டைமீன்களும்,- கரை அருகு எங்கண்உம் - கரைப்பக்கங்களி லெல்லாம்,
வளர் கின்னர மிதுனம் - நன்றாகவளர்ந்த கின்னர மிதுனங்களும், வாழும் -
(இனிமையாகத்) தங்கும்; ( எ-று.)- பி -ம் :  வீழுங்கரை.

     இதனால், தெய்விகமாகவுண்டான அத்தடாகத்தின் ஆழம் அகலம்
நீர்வளச்சிறப்பு என்பவை விளங்கும். கின்னரமிதுனம்- கின்னரமென்னும்
நீர்வாழ்ப்பறவையின் ஆணும் பெண்ணுமான இரட்டை, எப்பொழுதும்
ஆணும்பெண்ணுமாய் இரட்டைப்பட்டு நின்று கிந்நரமென்னும்
வாத்தியங்கைக்கொண்டு பாடித் திரிவதொரு தேவசாதிக்கும் இப்பெயருண்டு ;
இவை,குதிரைமுகமும் மனிதவுடம்பும் உடையவை. முதலடி - உயர்வுநவிற்சியணி
வகையால் அக்குளத்தின் ஆழமிகுதியையும் அகலமிகுதியையும் விளக்கியது.

53.ஒருபால்வளர்போதாநிரைகருநாரைகளொருபா
லொருபாலுளமகிழ்நேமிகளன்றிற்குலமொருபா
லொருபான்மடவன்னம்புனலரமங்கையரொருபா
லொருபாலிருபாலுந்தவழொளிநந்துறைபுளினம்.

     (இ-ள்.) (மற்றும் அக்குளக்கரையில்), ஒரு பால் - பக்கத்தில், வளர் போதா
நிரை - நன்றாகவளர்ந்தபெருநாரைகளின் கூட்டமும், ஒரு பால்-, கரு நாரைகள் -
கறுப்புநாரைகளும், ஒரு பால்-, உளம் மகிழ் நேமிகள் - (தம்மிற்கூடி) மனம்
மகிழ்கிறசக்கரவாகப்பறவைகளும், ஒருபால்-, அன்றில் குலம் - கிரௌஞ்சமென்னும்
பறவைகளின் கூட்டமும், ஒருபால்-, மட அன்னம்- இளமையான
அன்னப்பறவைகளும், ஒருபால்-, புனல் அர மங்கையர் - நீரில்வாழும்
தேவமகளிரும், ஒருபால்-, இருபால்உம் தவழ் ஒளி - இரண்டுபக்கங்களிலும்
பரவிச்செல்கிற ஒளியையுடைய, நந்து- சங்குகள், உறை - தங்கப்பெற்ற, புளினம் -
மணல்மேடுகளும், (உண்டு); ( எ -று.)

     வினைமுற்று, வருவிக்கப்பட்டது. சக்கரவாகப்பறவைகள் பகலில் ஆணும்
பெண்ணுங் கூடிக் குலாவுந் தன்மையனவாதலால், 'உளம்மகிழ் நேமிகள்'
எனப்பட்டன. நேமி - வடசொல். புனல் அர மங்கையர் - நீரரமகளிர்
எனப்படுவர் .சொற்பொருட்பின்வருநிலையணி.

54.- இரண்டுகவிகள் - குளகம் : கண்ணன் தேர்க்குதிரைகளை
நீர்பருவித்தலைக் கூறும்.

தலமாமகளுந்தித்தடநிகரானதடங்கண்
டுலமாறுகொளிருதோள்வலியுடைவள்ளலுரைப்பக்
குலமாமணியனையான்விரைதேர்நின்றெதிர்குதியா
வலமானதுரங்கங்களைவள்வார்விசிநெகிழா

     (இ-ள்.) தலம் ஆம் மகள் - பூமியாகிய பெண்ணினது, உந்தி தடம்நிகர்
ஆன -நாபியினிடத்துக்குஒப்பான , தடம் - அக்குளத்தை,