பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்281

மின்னார்வடி வேலாயிவை விதியின் செயலன்றோ
வென்னாவொரு கவசந்தனை யிவன்மெய்யினி லிட்டான்.

     (இ-ள்.) (ஆயினும்), மன் ஆகவம் மதியா - பெரிய போரை ஒரு
பொருளாகக்கருதாத, விறல் - பாராக்கிரமத்தையுடைய, வயவன்தனை - வீரனான
சயத்திரதனை,விசயன்தன்னால் - அருச்சுனனால், ஒரு பகல்ஏ - இந்த ஒரு
பகற்பொழுதினுள்ளே,உயிர் தபுவித்திடல் - உயிரழித்திடுதல், ஆம்ஓ - முடியுமோ?
மின் ஆர் வடிவேலாய் - மின்னல்போன்ற ஒளிபொருந்தின கூர்மையான
வேலாயுதத்தையுடையவனே! இவை விதியின் செயல் அன்றோ- (அருச்சுனனாற்
சயத்திரதன் இன்றைப்பகலே கொல்லப்படுதலும் படாமையு மாகிய) இவை
ஊழ்வினைப்பயனல்லவோ? என்னா - என்று சொல்லி, (துரோணன்), ஒரு
கவசந்தனை - ஒருகவசத்தை, இவன் மெய்யினில் இட்டான் -
இத்துரியோதனனுடம்பிலே பூட்டினான்;

     'சயத்திரதனை அருச்சுனன் கொல்லலாகாதபடி பாதுகாக்க
உறுதிகொண்டுள்ளோம்: ஆயினும், தெய்வச்செயல் வேறாயிருப்பின் யாம் 
என்னசெய்யலாம்?' என்பார், 'இவைவிதியின்செயலன்றோ' என்றானென்க.
இக்கருத்துப்படவே முந்தினநாளிரவிலும் கூறியமை காண்க. பி - ம் :
தவிர்வித்திடலாமோ. இனி விதியின்செயலன்றோ. இவன்மேனியிலிட்டான்.  (462)

வேறு.

66.- துரோணன் துரியோதனனுக்கு அக்கவசத்தின் சிறப்பைக் கூறுதல்.

பங்க யாசனன் வாசவற் களித்தது வாசவன் பயில்போரி
லங்க ராவினுக் குதவிய தங்கரா வெனக்கரு ளியதிந்தத்
தொங்கன் மாமணிக் கவசமெவ் வீரருந் தொழத்தகு
                                  கழற்காலாய்
புங்கவாளியிற் படைகளி லொன்றினும் பொன்றிடா
                                திதுவென்றான்.

     (இ -ள்.) 'எ வீரர்உம்- எல்லாவீரர்களும், தொழ தகு - வணங்கத்தக்க,
கழல்காலாய் - வீரக்கழலையணிந்த பாதத்தையுடையவனே! தொங்கல் - (வெற்றி)
மாலைதரித்தற்குஉரியதும், மா மணி - சிறந்த இரத்தினங்கள் பதித்ததுமான, இந்த
கவசம்-, பங்கய ஆசனன் - (திருமாலின் நாபித்) தாமரைமலரை
இருப்பிடமாகவுடையவனான பிரமன், வாசவற்கு - தேவேந்திரனுக்கு, அளித்தது -
முன்பு கொடுத்தருளியது: (பின்பு), வாசவன் - அவ்விந்திரன், பயில் போரில் -
இடைவிடாதுசெய்யும் போரின் முடிவில், அங்கராவினுக்கு உதவியது -
அங்கிரசுக்குக்கொடுத்தது: (அதன்பின்பு), அங்கரா - அந்த அங்கிரசு, எனக்கு
அருளியது -எனக்குக் கொடுத்தது:  இது - இக்கவசம், புங்கம் வாளியில் - கூரிய
அம்புகளிலும்,படைகளில் - மற்றை ஆயுதங்களிலும், ஒன்றின்உம் - ஒன்றினாலும்,
பொன்றிடாது -அழிந்திடாது,' என்றான் என்று (அக்கவசத்தின் வரன்முறையையும்
அழியாவலிமைச்சிறப்பையும் துரோணன் துரியோதனனுக்குக்) கூறினான்; ( எ -று.)

     முன்பு இந்திரன் முதலிய தேவர்கட்கும் விருத்திராசுனுக்கும் நடந்த
பெரும்போரில் அசுரனாற் சிதைவு அடைந்ததேவர்கள்