பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்293

அநேகபாணங்களை, நிலைஒன்றில் - ஒரேசமயத்திலே, முனை சேர -
எதிர்சென்றுசேரும்படி, விட்டனன் - செலுத்தினான்; விடும்பொழுதின் -
அங்ஙனஞ்செலுத்தியபொழுதில், அவை - அவ்வம்புகள், அந்த விறல் மாமணி
கவசம் எங்கும் உடன் ஒன்றி - வலிமையுள்ளதும் சிறந்ததும்இரத்தினம்பதித்ததுமான
(அந்தத்துரியோதனனது) கவசம்முழுவதிலும் ஒருசேரச் சென்று தாக்கி, ஒரு
மால்வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு ஆம் என - ஒரு பெரிய
மலையின்மேல் மேகத்தின் சிறிய நீர்த்துளிகள் விழுந்தவிதம்போல, தலைமழுங்கி -
நுனி கூரழிந்து, ஒன்றுஉம் அவன் ஆகம் உற்றில - ஒன்றேனும் அவனுடம்பிற்
படவில்லை; (ஆகவே), அசஞ்சலன் - (எதற்குஞ்) சலியாத இயல்புடையவனான
துரியோதனன், அசைந்திலன் - சிறிதுஞ் சலித்தானில்லை; (எ-று.)

     மலை காளமேகத்தின் சோனைமாரிக்குச்சிறிதுஞ்சலியாதவாறு போலவே,
துரியோதனன் அருச்சுனனது பாணவர்ஷத்துக்குச் சிறிதுஞ்சலித்திலனென்க. விலங்கி
= விலக்கி: சந்தம்நோக்கிய விகாரம். தன்வினை பிறவினையில் வந்ததுமாம்: இதனை,
அந்தர் பாவிதணிச்' என்ப.                                        (481)

85.- பின்பு அருச்சுனனெறிந்தவேற்படையை அசுவத்தாமன் துணித்தல்.

வீரன்விட்டனசரங்களவனொண்கவசமேலுறப்படுதலின்றி
                               விழுகின்றநிலை,
யோரிமைப்பினிலறிந்துகுமரன்கையயிலோடுரைக்கவுவமம்
                            பெறுவிடங்கொளயி,
றேரினிற்பொலியநின்றிருகைகொண்டுநனிசீறிமெய்ப்பட
                        வெறிந்தனனெறிந்தளவில்,
வார்சிலைக்குருவின்மைந்தனதுகண்டதனைவாளியிற்றுணிபடும்
                              படிமலைந்தனனே.

     (இ-ள்.) வீரன் - சிறந்தவீரனான அருச்சுனன்,- விட்டன சரங்கள்- (தான்)
தொடுத்தவையான அம்புகள், அவன் ஒள்கவசம் மேல் உற படுதல் இன்றி -
அத்துரியோதனனது ஒளியுள்ள கவசத்தின்மேல் உட்செல்லும்படி படுதலில்லலாமல்,
விழுகின்ற- தாக்கிக்கீழ்விழுந்திடுகின்ற, நிலை - தன்மையை, ஓர் இமைப்பினில் -
ஒருநொடிப்பொழுதிலே, அறிந்து-,- குமரன் கை அயிலோடு உவமம் உரைக்க பெறு
- முருகக்கடவுளின் கையிலுள்ள வேலாயுதத்தோடு (உன்னை) உவமைசொல்லும்படி
(சிறப்புப்) பெற்ற, விடம்கொள் அயில் - விஷத்தையொதத [கொடிய] வேலாயுதத்தை,
தேரினில் பொலிய நின்று - (தனது) தேலிலே விளங்க நின்றுகொண்டு,
இருகைகொண்டு - இரண்டுகைகளாலும்எடுத்து நனி சீறி - (துரியோதனன்மேல்)
மிகக்கோபித்து, மெய்பட - அவனுடம்பிலே படும்படி, எறிந்தனன் - வீசினான்;
எறிந்த அளவில் - (அங்ஙனம்) வீசியவளவிலே,- வார் சிலை குருவின் மைந்தன் -
நீண்டவில்லுக்கு ஆசிரியனான துரோணனது புத்திரனாகிய அசுவத்தாமன், அது
கண்டு - அங்ஙனம் எறிந்ததைப் பார்த்து, அதனை - அவ்வேலை, வாளியின் -
(தனது) அம்புகளினால், துணி படும்படி - துண்டாகும்படி, மலைந்தனன் -
எதிர்த்துப்போர்செய்தான்; (எ -று.)