பக்கம் எண் :

304பாரதம்துரோண பருவம்

வைத்திருந்தன ளென்பதுபற்றி யென்க. இனி, தேவகிமைந்தன் கண்ணன்
எனவேகொண்டு, சாத்தகிஎன எழுவாய் வருவிப்பினுமாம்.            (497)

101.-சாத்தகி கிருதவன்மனைத் தோற்பித்தல்.

விருதொடுமுந்தவிளங்கியகொற்றக்
கிருதனையாதிக்கேழலொடாப்பான்
ஒருதனுவுங்கொண்டூர்பரிமாவு
மிரதமும்வில்லுமிமைப்பிலழித்தான்.

     (இ-ள்.) ஆதி கேழலொடு ஒப்பான் - ஆதிவராகமூர்த்தியோடு ஒப்பவனான
சாத்தகி,-விருதொடு-பிருதாவளிகளுடனே, முந்த விளங்கிய-முற்பட [எதிரிலே]
சிறப்பாகக்காணப்பட்ட, கொற்றம்-வெற்றியையுடைய கிருதனை-கிருதவன்மாவை,-
ஒருதனுஉம் கொண்டு-தனது ஒருவில்மாத்திரத்தைக் கொண்டு,-ஊர் பரிமாஉம்
இரதம்உம் வில்லுஉம் இமைப்பில் அழித்தான்-தேரை நடத்திக்கொண்டு
விரைந்துசெல்லுகிற குதிரைகளும் தேரும் வில்லும் கண்ணிமைப்பொழுதிலே
அழியச்செய்தான்;

     'ஆதிக்கேழல்'-விஷ்ணுவின் அம்சமான வராகமூர்த்தி: அப்பெருமான்
சிறிதும்சிரமமில்லாமற் பெரியஉலகமுழுவதையும் எளிதில் தாங்கும்
வல்லமையுடையனா யிருப்பதுபோல எப்படிப்பட்ட பெரும்போரையும்
அலட்சியமாகத் தாங்கும் ஆற்றலுடையவன் என்பார், 'ஆதிக்கேழலொடொப்பான்'
என்றார்.                                                    (498)

102.-பலரையும் அழித்துவந்த சாத்தகியைச் சலசந்தன் எதிர்த்தல்.

பன்மகநூறாயிரவர்பரித்தே
ரன்மிகநூறாயிரவரழிந்தார்
மன்மதவெங்கைமலைமிசைவீரன்
றன்முன்மலைந்தான்றார்ச்சலசந்தன்.

     (இ-ள்.)  பரிதேரன்-குதிரைகள்பூண்ட தேரையுடைய சாத்தகி, மிக-
மேலிட்டுவருதலால்,-நூறு-பகையழிக்குந்தன்மையுள்ள, மக பல் ஆயிரவர்-பல
ஆயிரக்கணக்கான கண்ணன்மக்களும், நூறாயிரவர்-லக்ஷக்கணக்கான
மற்றைவீரர்களும், அழிந்தார்-சிதைந்தார்கள்; (இங்ஙனம் சிதைகையில்), தார்
சலசந்தன்-போர்மாலையையுடைய சலசந்தனென்னும் அரசன், மன் மதம் வெம்
கைமலைமிசை-மிகுதியானமதத்தையும் கொடியதுதிக்கையையு முடைய
மலைபோன்றயானையின்மேலே (வந்து), வீரன்தன் முன்மலைந்தான் - வீரனான
அச்சாத்தகி முன்னே பொருதான்; (எ - று.)

   கண்ணன்மக்களையே சாத்தகியின் மக்கள்போலக் கூறியது, தமையன்
பிள்ளைகளிடம் அவனுக்கு உள்ள உரிமையினா லென்க. மன்மதவெங்கைமலை -
பிறகுறிப்பு. பி-ம்: பன்முக நூறாயிரவர்.

103.-சலசந்தன் சாத்தகியின்முன் ஒடுங்குதல்.

தார்ச்சல சந்தன் சாத்தகி யென்னுங்
கார்ச்செல வாய கணைமழை யாலே