தம்பியை, கடிதின் ஏவலும்-விரைவாக (வீமன்மேற்) செலுத்திய வளவிலே, (அவன்), கங்குல் வண்டு செம் சுடர் வளைய வந்து இறந்து என - இராக்காலத்திற் பறப்பதொரு பூச்சி (வீட்டில்) சிவந்தவிளக்கொளியைச் சூழவந்து அதிற்பட்டு இறந்தாற்போல, வலிய வார் சிலை வாங்கி கொண்டு-வலிமையுள்ள நீண்ட வில்லை வளைத்தெடுத்துக்கொண்டு (வந்து), மலைமிசை கொண்டல் பெய்வதுபோல - மலையின்மேற் காளமேகம் மழைபொழிவதுபோல, திண் திறல் வாளியால் மண்டு போர் புரிந்து-மிகவலிய அம்புகளினால் (வீமன்மேல்) மிக்கபோரைச்செய்து, அண்ணல் கை பகழியால்-சிறந்தவீரனான அவ்வீமனது கையாலெய்யப்பட்ட அம்புகளினால், இமைப்பினில்-கண்ணிமைப்பொழுதிலே, வான் உற்றான்-(இறந்து) வீரசுவர்க்கஞ்சேர்ந்தான்; (எ - று.) துர்முகன் வீமனைவெற்றிகொள்ளவந்து அவனம்புக்கு இலக்காகித் தான் எளிதில் அழிந்தன னென்க. மலரில் வண்டுமொய்த்தல்போல, தீயில் விட்டில் மொய்த்தலால், அது 'வண்டு' எனப்பட்டது. (537) 141.-கர்ணன்எறிந்த தோமரம் வீமனால் துணிக்கப்படுதல். தாளினோடியகன்னன்மன்னவன்விடுதம்பிவீழ்தலும்வீமன் றோளினோடிமண்மிசைபுதைதரவொருதோமரந்தனையேவ வேளினோடிசைவீமன்மேலதுசெலும்வேலையின்விடவெவ்வாய்க் கோளினோடியகுரிசில்கைக்கணையினாற்கோளழிந்ததுதுமன்னோ. |
(இ-ள்.) தாளின் ஓடிய கன்னன் - (முன்பு) கால்களினால் விரைந்து ஓடிய கர்ணன், மன்னவன் விடு தம்பி வீழ்தலும் - துரியோதனனேவின அவன் தம்பியான துர்முகன் இறந்துவிழுந்தவளவிலே, (மீண்டும்வந்து), வீமன் தோளின் ஓடி மண்மிசை புதைதர-வீமனது தோளில் விரைந்து பாய்ந்து (பின்பு) தரையிற் புதைந்திடும்படி, ஒரு தோமரந்தனை ஏவ-ஒரு தோமராயுதத்தைப் பிரயோகிக்க,-அது-,வேளினோடு இசை வீமன்மேல் - முருகக் கடவுளோடு (உவமை) சொல்லப்படுகிற வீமசேனன்மேல், செலும் வேலையின்-செல்லும் பொழுது, விடம் வெம் வாய் கோளின் ஓடிய குரிசில் கை கணையினால் - விஷமுள்ள கொடிய வாயையுடைய (இராகுவென்னுங்) கிரகம்போல (ப் பயங்கரமாய்) விரைந்துவந்த வீமன்கையம்பினால், கோள் அழிந்தது-வலிமை சிதைந்திட்டது; (எ - று.)-மன் ஓ-ஈற்றசை. தோமரமென்று இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும் நூல்களிற் பெயர் வழங்குகின்றது - பல பராக்கிரமங்கட்கு முருகக்கடவுளை உவமைகூறினார். (538) 142.-துரியோதனன்தம்பியர் அறுவரை வீமன் தொலைத்தல். மன்னர் மன்னவன் றம்பிய ரிருவரை மாருதி மிசையேவ முன்னர் வந்தவ ரிருவரும் படப்பட, முனைந்துபோர் மதியாமன் |
|