பக்கம் எண் :

326பாரதம்துரோண பருவம்

மின்னி ருங்கணை விகருணன் முதலியோர் வீமன்மே
                                 லோரைவர்
பின்ன ருஞ்செல நால்வரைப் பிறைமுகக் கணையினாற்
                              பிளந்திட்டான்.

     (இ-ள்.) (அதுகண்டு), மன்னர் மன்னவன்-ராஜராஜனான துரியோதனன்,
(மீண்டும்), தம்பியர் இருவரை-(தனது) தம்பிமார் இரண்டுபேரை, மாருதிமிசை
ஏவ -வாயுபுத்திரனான வீமன்மேற் செலுத்த,-முன்னர் வந்தவர் இருவர்உம்-
(ஒருவர்முன்ஒருவராக விரைவாக) எதிர்த்துவந்த அவ்விரண்டுபேரும், பட பட-உடனுக்குடனேஇறக்க,-முனைந்து-கோபங்கொண்டு, போர் மதியாமல்-(வீமனோடு)
பொருதலை(அரிதென்று)கருதாமல், மின் இருங்கணை விகருணன் முதலியோர் ஓர்
ஐவர்-மின்னல்போல விளங்குகின்ற பெரிய அம்புகளையுடைய விகர்ணன் முதலிய
(துரியோதனன் தம்பிமார்)ஐந்துபேர்,பின்னர்உம்-பின்பும், வீமன்மேல் செல-
(துரியோதனனாலேவப்பட்டு) வீமன்மேல் எதிர்த்துச்செல்ல, (வீமன் உடனே),
நால்வரை-(அவர்களில் விகர்ணனொழிந்த) நான்குபேரை, பிறை முகம்
கணையினால்பிளந்திட்டான் - அர்த்தசந்திரபாணங்களினாற் பிளந்தழித்தான்;
(எ - று.)                                                  (539)

வேறு.

143.-வீமன் விகர்ணனைநோக்கி'உன்னுடன்போர்செய்யேன்' எனல்.

பகரு நால்வரும் பட்டபின் பைங்கழல்
விகரு ணன்பொர வெஞ்சிலை வாங்கலும்
புகலும் வஞ்சினம் பொய்க்கினு தின்னுட
னிகல்செய் யேனெம்பி யேகுகென் றானரோ.

     (இ-ள்.) பகரும் - (கீழ்ச்) சொல்லப்பட்ட, நால்வர்உம்-(துரியோதனன்
தம்பிமார்)நான்குபேரும், பட்டபின்-இறந்தபின்பு, பைங்கழல் விகருணன்-
பசுமையான(பசும்பொன்மயமான) வீரக்கழலையுடைய விகர்ணனென்பவன், பொர-
போர்செய்தற்பொருட்டு, வெம்சிலை-கொடிய வில்லை,வாங்கலும்-வளைத்த
வளவிலே,-(வீமன்அவனை நோக்கி), 'எம்பி - எனது தம்பியே! புகலும் வஞ்சினம்
பொய்க்கின்உம்-(நான்) சொன்ன சபதம் தவறுவதானாலும், நின்னுடன் இகல்
செய்யேன் - உன்னோடு போர்செய்யமாட்டேன்; ஏகுக-(நீ) செல்வாயாக,'
என்றான் -என்று சொன்னான்; (எ - று.)

     வஞ்சினம் பொய்க்கினும்-"பாஞ்சாலிக்குஅரசவையிற்
பழுதுரைத்தோனுடல்***,***துணைவரொடுகுலமாளப்பொருவேன்யானே"
என்று திரௌபதியைத் துகிலுரிந்தகாலத்திற்கூறின பிரதிஜ்ஞை தவறுவதானாலும்
என்றபடி, துரியோதனன் தம்பியை வீமன் தன் தம்பியாக 'எம்பி' எனவிளித்தது,
யோக்கியனான அவனிடத்தில் தனக்குஉள்ள அன்புமிகுதி பற்றியஉபசாரவழக்காம்;
அன்றியும், துரியோதனன் வீமன்பிறந்ததினத்துக்கு முந்தின தினத்தின் இரவிலும்,
மற்றைத்தொண்ணூற்றொன்பதின்மரும் அதற்கு அடுத்த தினம் முதலாக
ஒவ்வொருதினத்திலும் பிறந்தன ரென்பது சரித்திரமாதலால், வீமன் தனதுபெரிய
தந்தையின் மக்களுள் இளையவனான விகர்ணனை எம்பியென்னத் தட்டில்லை.
அரோ - ஈற்றசை.