பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்329

148.-வீமன் போர்தொடங்குதல்.

மிகநகைத்தும்வெறுத்துந்திரிபுர
தகனனொத்தசமீரணன்மாமகன்
முகனுறச்சென்றுமூரிவில்வாங்கிமே
லிகனிறக்கணையேவினனென்பவே.

     (இ-ள்.) திரிபுரதகனன் ஒத்த- திரிபுரமெரித்தவனான
உருத்திரமூர்த்தியைப்போன்ற (பலபராக்கிரமங்களிற்சிறந்த), சமீரணன் மா மகன் -
வாயுவின் சிறந்த புத்திரனாகிய வீமன், (அதுகேட்டு), மிக நகைத்துஉம் -
மிகுதியாகச்சிரித்தும், வெறுத்துஉம் - வெறுப்புக்கொண்டும், முகன் உறசென்று-
அவனெதிராகப்போய்,  மூரி வில் வாங்கி - வலியவில்லை வளைத்து, மேல் -
அவன்மேல், இகல் நிறம் கணை - வலிமையையும் ஒளியையுமுடைய அம்புகளை,
ஏவினன் - எய்தான்; (எ - று.)-நச்சினார்க்கினியர் 'என்ப' என்ற அசையைப்
புறனடையாற் கொண்டுள்ளார்.                                   (545)

149.- இருவரும் பொருதல்.

ஏவினாலில்வரும்வெஞ்சம
மேவினார்மெய்ப்படாமல்விலக்கினார்
கூவினாறைகூவிப்பொருதிளைத்
தோவினார்தமையேநிகரொத்துளார்.

     (இ-ள்.) தமைஏ நிகர் ஓத்து உளார்- (வேறுஉவமையில்லாமல்) தங்களையே
தாங்கள் உவமையாகப் பொருந்தியுள்ளவரான, இ இருவர்உம்-(வீமன் விகர்ணன்
என்ற) இந்த இரண்டு பேரும்-ஏவினால்- அம்புகளைக்கொண்டு, வெம் சமம்
மேவினார் - கொடிய போர்செய்தற்குப் பொருந்தினார்கள்; மெய் படாமல்
விலக்கினார்-(தங்களுள் எதிரி எய்யும் அம்புகளைத்) தம்மேற்படாதபடி
(எதிரம்புகளால்) தடுத்தார்கள்; கூவினார் - (வீராவேசத்தால்) ஆரவாரஞ்
செய்தார்கள்;அறை கூவி-வீரவாதங்கூறி, பொருது-போர்செய்து, இளைத்து -
இளைப்படைந்து,ஓவினார் - (சிறிது பொழுது) போரொழிந்துநின்றார்கள்;
(எ - று.)                                                 (546)

150.-விகர்ணன் வீமனைக் கவசமுதலியன அழித்தல்.

விகனன்விட்டகணைகளின்வீமன்மெய்
இகன்மணிக்கவசம்பிளந்தேறுதேர்
அகலரிக்கொடியற்றுக்கொடிஞ்சியுஞ்
சகலமுற்றுத்தனுவுமுரிந்ததே.

     (இ-ள்.) விகனன் விட்ட கணைகளின் - விகர்ணன் எய்த அம்புகளினால்,
வீமன் மெய்  - வீமனது உடம்பில் தரித்த, இகல் மணி கவசம் - வலியதும்
இரத்தினம்பதித்ததுமான கவசம், பிளந்து-பிளந்திட,-ஏறு தேர் அகல் அரி கொடி
அற்று-(அவ்வீமன்)ஏறியுள்ள தேரிற்கட்டிய பரந்த சிங்கவடிவமெழுதிய கொடியுந்
துணிபட,- கொடிஞ்சிஉம்  சகலம் உற்று-