153.- வீமன் முன்சென்ற சாத்தகியோடு சேர்தல். அன்றுசாதத்தலகைகளாடவே சென்றுசாத்தகிதன்னுடன்சேர்ந்தனன் துன்றுசாத்திரத்தின்படிசூழ்முனை வென்றுசாத்தியவாகைகொள்வேலினான். |
(இ-ள்.) துன்று சாத்திரத்தின் படி-பொருந்திய நூல்முறைமைப்படி, சூழ் முனைவென்று-(பகைவர்) சூழ்ந்துசெய்த போரை(ப்பொருது) வென்று, சாத்திய- சூட்டிய,வாகை-(வெற்றிக்குஅறிகுறியான) வாகைப்பூமாலையை, கொள் - கொண்ட, வேலினான் - வேலாயுதத்தையுடையவனான வீமன்,-அன்று-அப்பொழுது, சாதத்து அலகைகள் ஆட-கூட்டமான பேய்கள் கூத்தாட, சென்று-மேற்சென்று, சாத்தகிதன்னுடன் சேர்ந்தனன்-சாத்தகியோடு சேர்ந்தான்;(எ - று.)-ஜாதம்- வடசொல்;இதற்குப்பூதமென்று பொருள்கொள்வாருமுளர். (550) 154.- சாத்தகியும் வீமனும் அருச்சுனனை யடுத்தல். அங்கி தன்னொ டனிலமுஞ் சேர்ந்தெனச் சங்க ணிபாதன் றம்பியும் வீமனும் செங்க லங்கலஞ் சேற்றிடை மூழ்கிய வெங்க ளத்து விசயனைக் கூடினார். |
(இ-ள்.) அங்கிதன்னொடு அணிலம்உம் சேர்ந்து என-நெருப்பும் காற்றும் சேர்ந்தாற் போல, சங்கபாணிதன் தம்பிஉம் வீமன்உம்-சங்கத்தைத் திருக்கையிலுடையவனான கண்ணபிரானது தம்பியாகிய சாத்தகியும் வீமனும், செம் கலங்கல் சேற்றிடை மூழ்கிய வெம் களத்து-சிவந்ததும்கலங்கலாக வுள்ளதுமான(இரத்தச்) சேற்றில் முழுகிய கொடிய போர்க்களத்தினிடையில் நின்ற, விசயனை - அருச்சுனனை, கூடினார்-; (எ-று.) அம்-அசை. (551) வேறு. 155.-பகைவர்பலரும் மீண்டு மூவரையும் எதிர்த்தல். தேவரும் பரவு பாகன் செலுத்துதேர் விடலை யோடு மூவருஞ் சுடர்கண் மூன்று மூண்டெனத் திரண்ட காலை மேவருஞ் சமரின் முன்னம் வென்கொடுத் துடைந்த வேந்தர் யாவருந் திருகி வந்தாங் கெதிரெதி ராகிச் சூழ்ந்தார். |
(இ-ள்.) (சாத்தகியும் வீமனும்), தேவர்உம் பரவு பாகன் செலுத்துதேர் விடலையோடு-தேவர்களுந் துதிக்கப்பெற்ற (கண்ணனாகிய) சாரதி செலுத்துகின்ற தேரையுடைய சிறந்தவீரனான அருச்சுனனோடு (சேர்ந்து), மூவர்உம் - இந்தமூன்றுபேரும், சுடர்கள் மூன்றுஉம் மூண்டு என-(சூரியன் சந்திரன் அக்கினி என்னும்) முச்சுடர்களும் கூடியெழுந்தாற்போல, திரண்ட காலை - ஒருங்கு கூடியபொழுது,-மேவு அருஞ் சமரில் முன்னம் வென் கொடுத்து உடைந்த வேந்தர் யாவர்உம்-கிட்டுதற்கருமையான போரில் முன் |