167.-அருச்சுனன் சயத்திரதனைக் கொல்லுதல். வரத்தினின்முன்பெறுசாபம்வாங்கியருச்சுனன்சிந்துமகீபன்மௌலிச், சிரத்தினிலெய்தலுந்துணிந்ததொருசரத்தாற்றுணிதலுமச்சிரம்வீழாமற், சரத்தினைமேன்மேலேவித்தடத்திருந்துதருப்பித்ததாதைதன்பொற். கரத்திடையேவீழ்வித்தானவனதனைநிலத்திட்டக்கணத்தின் மாய்ந்தான். |
(இ-ள்.) (உடனே), அருச்சுனன்-, வரத்தினில் முன்பெறுசாபம் வாங்கி - வரமாக முந்தினநாளிற் (சிவபிரானிடம்) பெற்ற வில்லை யெடுத்து வளைத்து, சிந்து மகீபன் மௌலி சிரத்தினில் - சிந்துநாட்டரசனது கிரீடமணிந்த தலையின்மேல், எய்தலும்-(ஓரம்பை) எய்தமாத்திரத்திலே, ஒரு சரத்தால் - அந்த அம் பொன்றினால், துணிந்தது-(அந்தத்தலை) அறுபட்டது; துணிதலும் - (அங்ஙனம்) அறுபட்டவுடனே, அ சிரம் வீழாமல்-அத்தலை கீழ் விழுந்திடாதபடி, சரத்தினை மேல் மேல்ஏவி- அம்புகளை இடைவிடாமல் மேன்மேல்தொடுத்து, தடத்து இருந்து தருப்பித்த தாதைதன் பொன் கரத்திடையே வீழ்வித்தான்-ஸ்யமந்தபஞ்சக தடாகத்திலே பொருந்தி அருக்கிய ஜலமெடுத்து விடுகிற இவன் தந்தையான விருத்தக்ஷத்திரனது அழகிய கையிலே (அத்தலை) விழும்படி செய்தான்; (செய்யவே), அவன் அதனை நிலத்து இட்டு அ கணத்தில் மாய்ந்தான் - அத்தந்தை அத்தலையைக்கீழே போகட்டு(அதனால்) அந்தக்ஷணத்திலே இறந்தான்; (எ - று.) சயத்திரனது தலையை நேரில் நிலத்திலே தள்ளியவன் அருச்சுனனாகாமல் அவன் தந்தையே யானதனால், அவன் தலைவெடித்து இறந்தன னென்க. முன் - பதிமூன்றாம்போர்நா ளிரவில் என்றபடி. (564) 168.-சயத்திரதன் இறந்ததற்குத் துரியோதனன் மிக இரங்குதல். முன்பட்டானருக்கனெனவெளிப்பட்டான்வெளிப்பட்டுமுடிவிற்சிந்து, மன்பட்டான்மாமாயன்மாயமிதென் றறியாமன்மகன்போய்ப்பட்ட, பின்பட்டானவன்றத்தையினிப்பட்டா ரெவருமெனப்பிழைப் பட்டான்போ, லென்பட்டானரவுயர்த்தோனெரிப்பட்டான்விசயனெனவெண்ணி நின்றான். |
(இ-ள்.) முன் அருக்கன் பட்டான் என-எதிரிற் சூரியன் அஸ்தமித்தானென்ற காரணத்தால், சிந்து மன் - சிந்துதேசத்தரசனான சயத்திரதன், வெளிப்பட்டான் - (நிலவறையினின்று) வெளிவந்தான்; வெளிப்பட்டு-(அங்ஙனம்) வெளிவந்து, முடிவில் -இறுதியிலே, பட்டான் - (அருச்சுனனால்) இறந்திட்டான்; மா மாயன் மாயம் இதுஎன்று அறியாமல்-மிக்கமாயையை யுடையவனான கண்ணபிரானது தந்திரமிதுவென்று உணராமல்,- மகன் போய் பட்ட பின் அவன் தந்தை பட்டான்-(தன்)மகனான சயத்திரதன் இறந்துபோனபின்பு அவனது தந்தையான விருத்தக்ஷத்திரனும்இறந்தான்; இனி - இவர்கள் இறந்தபின், எவர்உம் பட்டார் - (நம்பக்கத்தவர்)யாவரும் இறந்தவரேயாவர், என - |