பக்கம் எண் :

பதினான்காம் போர்ச்சருக்கம்343

தான் - சேனையுடனே போய் (ப் பாண்டவரை)ச் சூழ்ந்துகொண்டான்; கொற்றவனது
உரை கேட்டு - துரியோதனராசனது அந்த வார்த்தையைக் கேட்டு, கொடி
நெடுந்தேர் நரபாலர் - கொடிகட்டிய உயர்ந்த தேரையுடைய அவன்
சேனையரசர்களும், சபதம் கூறி - (தாம் தாம்) சபதவார்த்தை சொல்லிக் கொண்டு,
ஒருகணத்தில்-ஒரு கணப்பொழுதிலே, வம்மின் என-'(போர்க்கு) வாருங்கள்'
என்றுசொல்லி அறைகூவிக் கொண்டு, மற்றவரோடு - எதிர்ப்பக்கத்தாருடனே, தனி
தனி  போய் மலைதல் உற்றார்-தனித்தனியே சென்று போர்செய்யத் தொடங்கினார்;
(எ - று.) திகிரி இனன் என்று பிரித்து, இனன் - சூரியன் எனினும் அமையும்;
இநன்-வடசொல். பி-ம்::உடன்று.                                 (570)

174.-இருதிறத்தவரும் போர்செய்தல்.

துருபதனுஞ்சாத்தகியுந்துரௌபதிமைந் தருமுடுகித்தொட்டசாபக்
குருவுடனேபோர்செய்தார்தம்பியருஞ் சுயோதனனுங்கொற்ற
                                            வேந்த
ரொருபதினாயிரவரும்போய்வீமனுனுடற்றியவனூர்ந்ததேரும்
வரிசிலையுமழித்தனர்பினவனும்வறுங்கரதலத்தால்வன்போர்
                                         செய்தான்.

     (இ-ள்.)  துருபதன்உம் - துருபதாராசனும், சாத்தகியும்-, துரௌபதி
மைந்தர்உம் - திரௌபதியின்குமாரர் ஐந்துபேரும், முடுகி - விரைந்து (அல்லது
கோபம்மூண்டு), தொட்ட சாபம் குருவுடன் - பிடித்த வில்லையுடைய
துரோணாசாரியனுடன், போர் செய்தார்-; சுயோதனன்உம் - துரியோதனனும்
தம்பியர்உம் அவன் தம்பிமார் பலரும், கொற்றம் வேந்தர் ஒரு பதினாயிரவர்உம்-
வெற்றியையுடைய துணையரசர் பதினாயிரம்பேரும், போய்-, வீமனுடன்-, உடற்றி-
போர்செய்து, அவன் ஊர்ந்த தேர்உம் வரிசிலைஉம் அழித்தனர்- அவன் ஏறிய
தேரையும் (அவனது) கட்டமைந்தவில்லையும் அழித்தார்கள்; பின் - பின்பு,
அவன்உம் - அவ்வீமனும், வறுங் கரதலத்தால் வல் போர் செய்தான் -
ஆயுதமில்லாத வெறுங்கைகளினாற் கொடும்போரைச் செய்யலானான்;

     துரௌபதிமைந்தர்-திரௌபதியினிடம் பஞ்சபாண்டவர்க்கு முறையே பிறந்த
விந்தன், சோமன், வீரகீர்த்தி, புண்டலன், சயசேனன் என்பவர்; இவர்பெயர்
வேறுவகையாகவும் வழங்கும்: இவர்கள் உபபாண்டவரென்றும்,
பஞ்சத்ரௌபதேயரென்றுங் கூறப்படுவர்,                           (571)

175.- வீமன் வெறுங்கையாற் போர்செய்தல்.

பரியெடுத்துப்பரியெற்றிப்பரித்தேராற்றேரெற்றிப்பனைக்கைவேகக்
கரியெடுத்துக்கரியெற்றிக்காலனிகர்காலளாற்காலாளெற்றிக்
கிரியெடுத்துவிரியாழிகடைந்ததடந்தோளிருடிகேசனென்ன
வரியெடுத்தகொடிவிடலைதோள்வலியாலுழக்கியரிநாதஞ்செய்தான்.