பக்கம் எண் :

358பாரதம்துரோண பருவம்

திலே, திறல் மடிய மாய்த்த - (அவனது) வலிமை யொழியும்படி அழித்தன;
(எ - று.)-பி-ம்: வலவனாற்றலை. மாய்க்கவே.                    (596)

199.-அலாயுதனெறிந்த மலைகளை வீமன் பொடிபடுத்தல்.

நிலத்திடைகுதித்தனன்வடவைபோற்பெருநெருப்பெழவிழித்
                              தனனெடியமூச்சுடன்
வலத்துயரலப்படைநிசிசரோத்தமன்வரைத்திரளெடுத்தெதிர்
                                 முடுகியோச்சலு
முலப்புயநிமிர்த்தொருகதையினாற்றனதுரத்துடனடித்தவை
                                பொடிகளாக்கின
னிலக்கமில்சுரர்க்கிடமுதவுகோத்திரவெழிற்குவடொடித்
                               தவனுதவுகூற்றமே.

     (இ-ள்.) (அதன்பின்), வலத்து உயர் அலம் படை நிசிசா உத்தமன்-
வலிமையில்மிக்க கலப்பைப் படைக்கலமுடைய அரக்கர் தலைவன் (அலாயுதன்),
நெடியமூச்சுடன்-பெரு மூச்சுடனே, நிலத்திடைகுதித்தனன் - (தேரினின்று)
தரையிற் குதித்து,வடவை போல் பெருநெருப்பு எழ விழித்தனன்-
படபாமுகாக்கினிபோலப்பெருநெருப்புவெளிக்கிளம்பும்படி கோபத்தோடு உறுக்கிப்
பார்த்து, வரை திரள்எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் - மலைக்கூட்டங்களையெடுத்து
(வீமனுக்கு) எதிரில் விரைவாக வீசய  வளவிலே,-இலக்கம் இல் சுரர்க்கு இடம்
உதவு-கணக்கில்லாத தேவர்கட்கு இருப்பிடமாகஉதவுகிற, கோத்திரம்-(மேரு)
மலையினது, எழில் குவடு-வளர்ச்சியையுடைய (மூன்று) சிகரங்களை, ஒடித்தவன்-
முறித்தவனான வாயுதேவன், உதவு-பெற்ற, கூற்றம்-யமன்போன்றவீமன்,-உலம்புயம்
நிமிர்த்த ஒருகதையினால் - திரண்டகற்றூண்போன்ற(தனது) கையினால்
உயரவெடுத்தஒப்பற்றதொரு கதாயுதத்தைக்கொண்டு, தனது உரத்துடன்
அடித்து-தனதுமுழுவலிமையோடுதாக்கி, அவை பொடிகள் ஆக்கினன் -
அம்மலைகளைத்துகளாகச்செய்தான்; (எ - று.)

     நிசிசரோத்தமன்-குணசந்தி, இடமுதவுதல் - இடங்கொடுத்தல், தேவர்கட்குச்
சுவர்க்கம்போலவே மேருமலையும் ஓரிடமாம்; அன்றியும் அம்மலையின்
சிகரங்களில்மூன்று திரிமுர்த்திகட்கு இடமா மென்றும் புராணங் கூறும்.
கோத்ரம்-பூமியைக்காப்பது; மலை.                                 (596)

200.- கடோற்கசன் வீமனை விலக்கித் தான் அலாயுதனை யெதிர்த்தல்

பரத்துவசனுக்குறவுரியகோத்திரிபரிச்சுடருடைப்பெயர்முனி
                                   குலோத்தமன்
மரித்தனனெனத்தனியயில்கொடோச்சியமணிச்சிறுபொருப்பினை
                                 நிகர்கடோற்கச
னெரித்தலையரக்கனொடேதிரியாய்ச்சமரெனைத்தருமமருச்சுதன்
                              முனைதல்கீழ்த்தொ
ழிலுரத்துடன்மலைத்திவனுயிரைமாட்டுவனுருத்தெனவுடற்றினனுறு
                                   திதோற்றவே.

     (இ-ள்.) பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி-பரத்துவாசமுனிவனுக்கு
மிகவும்உரிய குலத்திற் பிறந்தவனாகிய, பரி சுடர் உடை பெயர் முனிகுல
உத்தமன் -அசுவத்தாமாவென்னும் பெயரையுடைய முனிவர் கூட்டத்தலைவன்,
மரித்தனன் -இறந்தான், என-என்றுசொல்லும்படி, தனி அயில் கொடு ஓச்சிய-
ஒப்பற்றவேலாயுதத்தைக்கொண்டு (அவனை) வீசி யெறிந்த, மணி சிறு
பொருப்பினைநிகர் கடோற்கசன்- நீலமணிக்குன்றையொத்த