திலே, திறல் மடிய மாய்த்த - (அவனது) வலிமை யொழியும்படி அழித்தன; (எ - று.)-பி-ம்: வலவனாற்றலை. மாய்க்கவே. (596) 199.-அலாயுதனெறிந்த மலைகளை வீமன் பொடிபடுத்தல். நிலத்திடைகுதித்தனன்வடவைபோற்பெருநெருப்பெழவிழித் தனனெடியமூச்சுடன் வலத்துயரலப்படைநிசிசரோத்தமன்வரைத்திரளெடுத்தெதிர் முடுகியோச்சலு முலப்புயநிமிர்த்தொருகதையினாற்றனதுரத்துடனடித்தவை பொடிகளாக்கின னிலக்கமில்சுரர்க்கிடமுதவுகோத்திரவெழிற்குவடொடித் தவனுதவுகூற்றமே. |
(இ-ள்.) (அதன்பின்), வலத்து உயர் அலம் படை நிசிசா உத்தமன்- வலிமையில்மிக்க கலப்பைப் படைக்கலமுடைய அரக்கர் தலைவன் (அலாயுதன்), நெடியமூச்சுடன்-பெரு மூச்சுடனே, நிலத்திடைகுதித்தனன் - (தேரினின்று) தரையிற் குதித்து,வடவை போல் பெருநெருப்பு எழ விழித்தனன்- படபாமுகாக்கினிபோலப்பெருநெருப்புவெளிக்கிளம்பும்படி கோபத்தோடு உறுக்கிப் பார்த்து, வரை திரள்எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் - மலைக்கூட்டங்களையெடுத்து (வீமனுக்கு) எதிரில் விரைவாக வீசய வளவிலே,-இலக்கம் இல் சுரர்க்கு இடம் உதவு-கணக்கில்லாத தேவர்கட்கு இருப்பிடமாகஉதவுகிற, கோத்திரம்-(மேரு) மலையினது, எழில் குவடு-வளர்ச்சியையுடைய (மூன்று) சிகரங்களை, ஒடித்தவன்- முறித்தவனான வாயுதேவன், உதவு-பெற்ற, கூற்றம்-யமன்போன்றவீமன்,-உலம்புயம் நிமிர்த்த ஒருகதையினால் - திரண்டகற்றூண்போன்ற(தனது) கையினால் உயரவெடுத்தஒப்பற்றதொரு கதாயுதத்தைக்கொண்டு, தனது உரத்துடன் அடித்து-தனதுமுழுவலிமையோடுதாக்கி, அவை பொடிகள் ஆக்கினன் - அம்மலைகளைத்துகளாகச்செய்தான்; (எ - று.) நிசிசரோத்தமன்-குணசந்தி, இடமுதவுதல் - இடங்கொடுத்தல், தேவர்கட்குச் சுவர்க்கம்போலவே மேருமலையும் ஓரிடமாம்; அன்றியும் அம்மலையின் சிகரங்களில்மூன்று திரிமுர்த்திகட்கு இடமா மென்றும் புராணங் கூறும். கோத்ரம்-பூமியைக்காப்பது; மலை. (596) 200.- கடோற்கசன் வீமனை விலக்கித் தான் அலாயுதனை யெதிர்த்தல் பரத்துவசனுக்குறவுரியகோத்திரிபரிச்சுடருடைப்பெயர்முனி குலோத்தமன் மரித்தனனெனத்தனியயில்கொடோச்சியமணிச்சிறுபொருப்பினை நிகர்கடோற்கச னெரித்தலையரக்கனொடேதிரியாய்ச்சமரெனைத்தருமமருச்சுதன் முனைதல்கீழ்த்தொ ழிலுரத்துடன்மலைத்திவனுயிரைமாட்டுவனுருத்தெனவுடற்றினனுறு திதோற்றவே. |
(இ-ள்.) பரத்துவசனுக்கு உற உரிய கோத்திரி-பரத்துவாசமுனிவனுக்கு மிகவும்உரிய குலத்திற் பிறந்தவனாகிய, பரி சுடர் உடை பெயர் முனிகுல உத்தமன் -அசுவத்தாமாவென்னும் பெயரையுடைய முனிவர் கூட்டத்தலைவன், மரித்தனன் -இறந்தான், என-என்றுசொல்லும்படி, தனி அயில் கொடு ஓச்சிய- ஒப்பற்றவேலாயுதத்தைக்கொண்டு (அவனை) வீசி யெறிந்த, மணி சிறு பொருப்பினைநிகர் கடோற்கசன்- நீலமணிக்குன்றையொத்த |