உயர்வுநவிற்சியணி.எதிர்க்குரல்பிரதித்தொனி,சிலோர்ச்சயம்=ஸிலா+உச்சயம்; கற்களின் கூட்டம் என்ற மலையைக் காட்டும்,குல பர்வதங்கள்-சிறந்த மலைகள்; இமயம், ஏமகூடம,் கைலை, நிடதம், நீலம் மந்தரம், விந்தியம் என்பர்; கந்தமாதனமுங்கூட்டி எட்டெனவும்படும். இமைத்தல், அச்சக்குறி, திசைகள் காப்பவர்-இந்திரன், அக்கனி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசாநன் எனஎண்மர்; இவர்களை, கிழக்கு முதலாக முறையே கொள்க. அமரராத்தியரென்றபாடத்திற்கு - அமரராகிய ஆதித்தியரென்க: ஆத்தியர்=ஆதித்யர் அல்லது ஆதிதேயர்என்பதன்திரிபு. (598) 202.-அலாயுதனும் கடோற்கசனும் பொருதல். சிரித்தனகுருத்தனரணுவின்மோட்டுடல்சிறுத்தனர்பெருத்தனர் மதனினோக்கின ரெரித்தனரிரித்தனர்ககனமேற்படவெடுத்தனர்படுத்தனர் புடவிகீழ்ப்பட முரித்தனகிரிக்கொடுமுடிகளாற்சினைமுரித்தனமரத்தன துணிகளாற்கடி துரித்தனர்துவக்குரநெரியமேற்பழுவொடித்தனரிளைத் தனருருவம்வேர்க்கவே |
(இ-ள்.) (அவ்வரக்கரிருவரும்),-சிரித்தனர்-(வீரத்தெழுந்தவெகுளியாற்) சிரித்தார்கள்; உருத்தனர் - பெருஞ்சினங்கொண்டார்கள்; மோடு உடல் அணுவின்சிறுத்தனர் - (தமது) பெரிய உடம்பு அணுப்போலச் சிறுக்கும்படி குழைந்துகாட்டினார்கள்; பெருத்தனர்-(உடனே) பெரிய வடிவங்கொண்டு தோன்றினார்கள்; மதனின் நோக்கினர் - செருக்கோடு விழித்துப்பார்த்தார்கள்; எரித்தனர்-தீயெழுப்பினார்கள்; இரித்தனர் - அச்சமுண்டாக்கினார்கள்; ககனம் மேல்பட எடுத்தனர் - ஆகாயத்திற் படும்படி (கைப்படைகளை) உயர எடுத்தார்கள்; புடவிகீழ் பட படுத்தனர் - தரை கீழாம்படி (அவற்றால்) மோதினார்கள்; முரித்தன கிரிகொடி முடிகளால் - ஒடித்தெடுத்தனவான மலைகளின் சிகரங்களைக் கொண்டும்,சினை முரித்தன மரத்தன துணிகளால் - கிளைகள் முறிக்கப்பட்டனவான மரங்களின்துண்டுகளைக்கொண்டும், (ஒரு வரையொருவர் அடித்து), கடிது-விரைவாக, துவக்குஉரித்தனர். (உடம்பின்) தோலையுரித்து, உரம் நெரிய - மார்புநொருங்க, மேல் பிறகு,பழு ஒடித்தனர்- விலாவெலும்புகளை யொடித்தார்கள்; (அப்பால்), உருவம் வேர்க்க - உடம்பு வேர்வையடைய, இளைத்தனர் - சோர்வடைந்தார்கள்; (எ - று.) 'ககனமேற்பட எடுத்தனர் புடவிகீழ்ப்படப் படுத்தனர்' என்பதற்கு- (ஒருவரையொருவர்) சூரியனுக்கும் மேலாம்படி மிகஉயர எடுத்துத் தரைகுழிபடும் படிகீழேபோகாட்டார்கள் என்றலும் ஒன்று, சிரித்தனர் உருத்தனர், அணுமோடு, சிறுத்தனர்பெருத்தனர், மேற்பட கீழ்பட, எடுத்தனர் படுத்தனர்-தொடைமுரண், 'ககனம்', 'மேற்பழு'என்ற இடங்களில் 'அருக்கன்', வேபழு' என்ற பாடங்கள் சந்தத்திற்கு மாறுபடும். பி-ம்: மரத்தின தடிகளாற். (599) |