வதச்சருக்கம் "ஈரேழ்விஞ்சைத்திறனுமீன்றோன்றன்பாலெய்தி, நிரேழென்னயாவு நிறைந்தகேள்வி நெஞ்சன்" (33) என்றது நினைக்கத்தக்கது, நாற்புறத்துஞ் சூழ்ந்த நால்வகைச் சேனைக்கும் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு அம்பாக நான்கு அம்புகள் ஒவ்வொருமுறையிலுஞ் செலுத்தப்பட்டன வென்க. (623) 7.-குந்திபோசன் துரோணனுடன் எதிர்த்தல். புந்திகூர்துரோணனுக்கியாவரும்புறந்தரக் குந்திபோசனெண்ணிலாயிரங்குறித்ததேர்களோ டுந்திமீளமுடுகியந்தமுனிவனோடுடன்றபோ தந்தினவானமொத்தம்மவமர்புரிந்தவாகவம். |
(இ-ள்.) புந்தி கூர் துரோணனுக்கு-ஞானம் மிக்க துரோணாசாரியனுக்கு, யாவர்உம் புறம் தர-எல்லாரும் (இப்படி) முதுகு கொடுக்க,-குந்தி போசன்-, எண் இல்ஆயிரம் குறித்த தேர்களோடு-கணக்ககில்லாத (மிகப்பல) ஆயிரங்களாகக் குறிக்கப்பட்ட தேர்களுடனே, மீள உந்தி-மறுபடி சென்று, முடுகி-விரைந்து, அந்த முனிவனோடு-அந்தத் துரோணசாரியனுடனே, உடன்ற போது-பகைத்து எதிர்த்த பொழுது,-அமர் புரிந்த ஆகவம் - போர்செய்த அந்தயுத்தகளம், அந்தி வானம் ஒத்தது-(இரத்தப் பெருக்கினால்) மாலைச்செவ்வானம் போன்றது; (எ - று.)-ஒருதரம் புறங்கொடுத்தமைபற்றி, 'மீளவுந்திஎன்றார்.-பி-ம்: அவர்புரிந்த வாகவம். அம்ம என்பது - ஆகவம் செவ்வான்போன்றமையைப் பற்றிய வியப்புக்குறிக்கும், (624) 8.-சல்லியன் நகுலனோடும், மாளவன் சாத்தகியோடும் பொருதல். குருவொடுற்றடர்ந்துகுந்திபோசன்விற்குனிக்கவே வருசமத்துமத்திரன்றன்மருகனோடுமுடுகினான் முரண்மிகுத்தகோபவங்கிமூளவந்தமாளவன் கருநிறத்தனந்தசாயியிளவலோடுகடுகினான். |
(இ-ள்.) குருவொடு உற்று அடர்ந்து - (கௌரவபாண்டவர்க்கு) வில்லாசிரியனான துரோணனுடனே யெதிர்த்துப் பொருது நெருங்கி, குந்திபோசன்-,வில் குனிக்க - வில்வளைத்துப் போர் செய்ய,-வரு சமத்து-எதிர்த்துவருகிற போரில்,மத்திரன் - மத்திரநாட்டரசனான சல்லியன் தன் மருகனோடு - தன் உடன்பிறந்தவள்மகனான நகுலனுடனே, முடுகினான்-விரைந்து போர் செய்தான்; முரண்மிகுந்த கோபம் அங்கி மூளவந்த - பகைமையை மிகுவிக்கிற கோபாக்கினிபற்றியெழ (எதிர்த்து) வந்த, மாளவன் - மாளவ நாட்டரசனான இந்திரவர்மா, கருநிறத்து அனந்த சாயி இளவலோடு - கரிய திருநிறமுடையனாய் ஆதிசேஷனிற்பள்ளி கொள்பவனான திருமாலின் (கண்ணபிரானது) தம்பியாகிய சாத்தகியுடன்,கடுகினான்-விரைந்து போர்செய்தான்; (எ - று.)-மாளவன் பெயர், மேல்19-ஆங்கவியால் விளங்கும். (625) |