பக்கம் எண் :

38பாரதம்துரோண பருவம்

னன் சென்றானென்று பெருந்தேவனார் பாரதத்தால் தெரிகிறது. துருபதராசபுத்திரனும்
அதிரதனுமாகிய ஸத்தியஜித்து என்பவனைத் தருமனைக் காக்குமாறு அருச்சுனன்
சொல்லிச் சென்றதாக வியாசபாரதம் கூறும். கோதண்டமென்னும் இராமன் வில்லின்
பெயர், சிறப்பினால் அருச்சுனன்வில்லைக் குறித்தது; இனி, இச்சிறப்புப்பெயர்,
பொதுப்பெயராக, வில்லென்றமாத்திரமாகவும் வழங்கிய தென்னலாம்.        (52)

8.- அருச்சுனன் சஞ்சத்தகரோடு கடும்போர் செய்தல்.

தூளியேயண்டமுறத்தூர்த்துமுதலகல்விசும்பை
வாளியேதூர்க்கும்வகைமலைவாங்குசிலைவாங்கி
யாளியேறனையானுமவனிபருங்கவந்தமுடன்
கூளியேநடமாடக்கொடுஞ்சமரம்விளைக்குங்கால்.

இதுவும் மேற்கவியும் - குளகம்.

     (இ -ள்.)ஆளிஏறு அனையான்உம் - ஆண்சிங்கத்தை யொத்த அருச்சுனனும்,
அவனிபர்உம் -(திரிகர்த்தன் முதலிய) அரசர்களும், - முதல் - முதலில், தூளிஏ -
(தமது வாகனங்களால் மேலெழுப்பப் பட்ட) புழுதியே, அண்டம் உற -
உலகவுருண்டை முழுவதும் செல்லும்படி, தூர்த்து - நிறைத்து, (அதன் பின்பு), அகல்
விசும்பை - பரந்த ஆகாயத்தை, வாளிஏ - (தமது) அம்புகளே, தூர்க்கும் வகை -
நிறைக்கும்படி, மலை வாங்கு சிலை வாங்கி - மலையொத்த (தம்தம்) வில்லை
வளைத்து, கவந்தமுடன் கூளிஏ நடம் ஆட - தலையற்ற உடற்குறைகளும்
பேய்களுமே கூத்தாடும் படி, கொடு சமரம் விளைக்கும் கால் - (ஒருவரோடொருவர்)
கொடிய போரைச் செய்யும்பொழுது,- (எ-று.) -" சிலையின் குருவந்தான்" என
அடுத்த கவியோடு முடியும்.

     மலை யென்பதற்கு - (யாவருங்கண்டு) மலையத்தக்கதென்று காரணமுரைப்பர்;
மலைதல் - அஞ்சுதல். இங்கே, மலையென்றது, பரமசிவனுக்கு வில்லான
மகாமேருவை, பேய்கள் - அங்கு பிணந்தின்ன வந்தவை. கூளி- பெருங்கழுகுமாம்.
இவை கூத்தாடுதற்குக் காரணம், அங்கே தமக்கு மிகுதியாக இரை கிடைத்தலால்.
அதிசயோக்தியலங்காரம்.                                    (53)

9.- துரோணன் சயத்திரதன்முதலானார்பலர்சூழத் தேர்மேல் வருதல்.

கொடித்தலைவேற்சயத்திரதன்சவுபலன்குண்டலன்முதலா
முடித்தலைவாளடனிருபர்முப்பதினாயிரர்சூழ
விடித்தலைமாமுரசியம்பவிபதுரகப்படைசூழக்
கொடித்தலைமான்றடந்தேரான்குனிசிலையின்குருவந்தான்.

     (இ-ள்.) கொடிது அலை வேல் - கொடியதாய்ச் சுழல்கிற
வேலாயுதத்தையுடைய, சயத்திரதன் - சயத்திரதனும், சவுபலன் - சகுனியும்,
குண்டலன் - குண்டலனும், முதல் ஆ- முதலாக, முடிதலை - கிரீடமணிந்த
தலையையும், வாள் - ஆயுதங்களையும், அடல்- வலிமையையுமுடைய, நிருபர்
முப்பத்தினாயிரர் - முப்பதினாயிரம் அரசர்கள், சூழ - சூழ்ந்து வரவும், இடி
தலை -இடிபோன்ற முழக்கத்தைத் தம்மிடத்திலுடைய, மா முரசு - பெரிய
பேரிகைகள்,இயம்ப