பக்கம் எண் :

388பாரதம்துரோண பருவம்

களையும் கீழேபோகட்டு,-'புதல்வன்-(தனது) மகனான அசுவத்தாமன், போது
இலான்இறந்தான் போலும் - ஆயுட்பொழுதில்லாதவனாய் இறந்துவிட்டான்
போலும்,' என்று- என்றுஎண்ணி, இனைதல் இன்றி-வருந்துதலில்லாமல்,
யார்கண்உம் பந்தம்இல்லான்-எவரிடத்தும் ஆசைப்பாசபந்தம் இல்லாமல் நின்ற
அந்தத் துரோணன்,ஏதிலான் போல நின்றான்-அயலான் போல நின்றான்;

     பிறப்புக்குஏதுவான அவா முனிவருபதேசத்தால்  அற்றமை பற்றி,
'இனைதலின்றியேதிலான்போலநின்றான் யார்கணும் பந்தமில்லான்' என்றார், (645)

29.-அச்சமயத்தில் திட்டத்துய்மன் துரோணன்தலையைத் துணித்தல்.

முள்ளிய னாளக் கோயின் முனிநடுத் தலையை முன்னங்
கிள்ளிய பினாக பாணி கிரீசனொ டொத்த வீரன்
றுள்ளிய பரித்தேர்த் திட்டத் துய்மன தம்பு சென்று
தள்ளிய தப்போ தந்தத் தவமுனி தலையை யந்தோ.

     (இ-ள்.)  முள் இயல் நாளம் கோயில்-முட்கள் பொருந்திய தண்டையுடைய
தாமரையைத்தங்குமிடமாகவுடைய, முனி - அந்தணனான பிரமனது, நடு தலையை-
(ஐந்துதலைகளுள்) நடுவிலுள்ள தலையை, முன்னம் கிள்ளிய-முன்பு கிள்ளியெடுத்த,
பினாகபாணி கிரீசனொடு-பிநாகமென்னும் வில்லைக் கையிலுடையவனான
சிவபிரானுடனே, ஒத்த-,வீரன்-வீரனாகிய, துள்ளிய பரி தேர் திட்டத்துய்மனது
துள்ளியோடுகிற குதிரைகள் பூண்டதேரையுடைய திட்டத்துய்மனுடைய, அம்பு-
,சென்று-போய், அப்போது-,அந்ததவம் முனி தலையை-தவத்தையுடைய
முனிவனானஅந்தத் துரோணனது தலையை, தள்ளியது - துணித்துக் கீழே
தள்ளிற்று; அந்தோ-ஐயோ!(எ - று.)-'அந்தோ'-கவி கூறிய இரக்கச்சொல்.

     துரோணன் சோர்ந்துநின்ற நிலையில் திட்டத்துய்மன் அவன்  தலையைத்
துணித்தது அக்கிரம மென்னுங் கருத்துப்பட, பிரமனைச் சிவன் நிஷ்காரணமாகத்
தலைகிள்ளியதனை உவமைகூறினரென்பர். முன்னியனாளம் - தாமரைக்கு,
அன்மொழித்தொகை.                                           (646)

வேறு.

30.-துரோணன் இறந்ததனை அசுவத்தாமன் காணுதல்.

பட்டனன் வாச பதிநிகர் சேனா பதியென்னக்
கெட்டது நாக கேதனன் வீரங் கிளர்சேனை
தொட்டவில் லாண்மைத் துரகத தாமா வெதிரோடிக்
கட்டழல் வேள்வித் தாதையி றந்த களங்கண்டான்.

     (இ-ள்.) வாசபதி நிகர்-பிருகஸ்பதியை யொத்த, சேனாபதி-(கௌரவ)
சேனைத்தலைவனான துரோணன், பட்டனன்-இறந்தான், என்ன-என்று
அறிந்தவளவிலே,-நாககேதனன் வீரம் கிளர்