பக்கம் எண் :

401

ஆன திறல் அங்கர் பூபன் - (தனது) மகனான வலிய அங்கநாட்டார்க்கு
அரசனாகிய கர்ணன், பொரு படைக்கு மா முதல்வன் ஆம்-போர்செய்கின்ற
(கௌரவ) சேனைக்குச் சிறந்த தலைவனாவன்', என-என்றுஎண்ணி, மகிழ்ந்து-
மகிழ்ச்சிகொண்டு,-வாள் இரவி-ஒளியையுடைய சூரியன்,-'அதலம் ஆதி உலகு
ஏழ்உம் ஆள் உடைய - அதலம் முதலிய கீழேழுலகங்களையும்-ஆளுதலுடைய,
அரவின்-சர்ப்பராசனான ஆதிசேஷனது, மாமணி அனைத்துஉம்- சிறந்த
மாணிக்கமெல்லாம், மால் உதயம் வரையின் உச்சி-பெரிய உதயகிரியின்
சிகரத்திலே,வந்து உற்றது கொல் - வந்துசேர்ந்ததோ? என்ன - என்று,
மேதினி -நிலவுலகத்தவர், உரைக்க- சொல்லும்படி,-முந்து தேர் கடவி
உந்தினான்-சிறந்ததேரை(த் தனதுபாகனான அருணன்மூலமாக) நடத்திக்கொண்டு
தோன்றினான்; (எ -று.)

     பயன்தற்குறிப்பேற்றவணி பின்னிரண்டடி, சூரியனது ஒளிக்கு
ஆதிசேஷனதுமாணிக்கங்களின் ஒளியை உவமை கூறியவாறு.           (667)

பதினைந்தாம் போர்ச்சருக்கம் முற்றிற்று.

----------

துரோணபருவம்

முற்றுப்பெற்றது.

----------