பக்கம் எண் :

46பாரதம்துரோண பருவம்

     (இ-ள்.) செரு களம் எங்குஉம் -அப்போர்களத்தில் எவ்விடத்தும், ஆடவர்-
காலாள்வீரர்கள்,- தொந்தம் ஆக - இவ்விரண்டுபேராக, அமர் விளைத்தனர் -
(ஒருவரோடொருவர்) போரைச் செய்தார்கள் ;  தம் தம் வீரமுடன் - தங்கள்
தங்கள்பராக்கிரமத்தோடு, மிகைத்தனர் - செருக்கினார்கள்;  சிங்க சாபம் என -
சிங்கக்குட்டிகள்போல, உளைத்தனர்- கர்ச்சித்தார்கள்; சென்று மேல் முடுகி -
எதிர்சென்று மேல்நெருங்கி உறுக்கினர்- அதட்டினார்கள்; கொண்டவார் சிலைகள் -
(தாம்) ஏந்திய நீண்ட விற்களை, வளைத்தனர் - வளைத்தார்கள்; வடித்த
சரங்களால்-வடிக்கப்பட்ட அம்புகளால், வென்றி கூரும் வகை - வெற்றிமிகும்படி,
உழுது -(பகைவருடம்பைக்) கிளறி, திளைத்தனர் - மகிழந்தார்கள்;

     தொந்தம், சிங்கசாபம் - த்வந்த்வம், ஸிம்ஹஸாபம் என்னும் வடசொற்களின்
திரிபுகள். சாபம் [சாபம்] என்று குட்டிக்குப் பெயர்; இதனை, மேல்
பதினெட்டாம்போர்ச்சருக்கத்தில் "காண்டரிய கேசரிவெஞ்சாப மன்னார்"
என்னுமிடத்துங் காண்க. சாபம் என்பது - இளமைப்பெயராவதொரு வடசொல்
என்று அறியாதார், சாபச்சிங்கமென மொழிமாற்றி, வில்லையுடைய சிங்கம்போல
வென்று நலிந்துபொருள்கொண்டு இடர்ப்படுவர். உழுதலென்ற வினைக்கு ஏற்ப,
சரத்தைக் கலப்பையாகவும், பகைவருடலைக் கழனியாகவும், போரைப் பயிராகவும்,
வெற்றியை விளைவாகவும் கொள்க. திளைத்தல் - இடைவிடாது பயிலுதலுமாம்.
பி-ம்
: திளைத்தனர் வென்றி கூருவகை.                             (66)

22.- யுதிட்டிரனுக்கும் துரோணனுக்கும் கைகலந்த போர்.

மிகைத்தனர்தும்பைமாலைமுடிமிலைச்சினரின்றுசாலுமென
நகைத்தனர்தங்கடேருமெதிர்நடத்தினர்சண்டவேகமொடு
பகைத்தனரங்கம்யாவுமிசைபடப்படநஞ்சுகால்பகழி
யுகைத்தனரன்றையாடமரிலுதிட்டிரனுந்துரோணனுமே.

     (இ-ள்.) அன்றை ஆடு அமரில்- அன்றைத்தினத்தில் நடந்த போரில்,
உதிட்டிரனும் துரோணனும்-, மிகைத்தனர்-செருக்கினார்கள்; தும்பைமாலை-
(போருக்குஉரிய) தும்பைப்பூமாலையை, முடி மிலைச்சினர் - (தமது) சிரசில்
சூடினார்கள்; இன்று சாலும் என -இன்றைக்கு (இப்போர்) தகுமென்று,
நகைத்தனர் -சிரித்தார்கள்: தங்கள் தேர்உம்- தம் தம் தேரையும், எதிர்
நடத்தினர் -(ஒருவருக்கொருவர்) எதிரிற்செலுத்தினார்கள்; சண்ட வேகமொடு -
கொடியஉக்கிரத்துடனே, பகைத்தனர் - பகைமை பாராட்டினார்கள்; அங்கம்
யாஉம்-உடம்பினுறுப்புக்கள் எல்லாவற்றிலும், மிசை பட பட - மேலே மிகுதியாய்
ஊன்றும்படி, நஞ்சு கால் பகழி - விஷத்தைச் சொரிகிற அம்புகளை, உகைத்தனர் -
செலுத்தினார்கள்; (எ -று.)

     சண்டைவேகமொடு தேரை எதிர் நடத்தினர் என இயைப்பினும் அமையும்.
படப்பட- அடுக்கு, மிகுதி. பகையை யழித்தற்காக அம்பு நுனியில் விஷந்தடவுதலும்
உண்டு; தவறாமற்கொல்லுங் கொடுமையால் விஷத்தன்மையை வெளியிடும் அம்பு
என்றலும்