பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்55

(உடம்பு) இரண்டுதுண்டுபட்டு, இறந்துபோன-, மன்னர் அன்றி அரசர்க ளல்லாமல்,
நின்ற - (இறவாமல் மிச்சமாய்) நின்ற, மன்னர் எவர்உம்- ( துரியோதனசேனை)
அரசர்களெல்லோரும்,- பிறந்து- (ஒருத்திமகனாய் ஓரிடத்துப்) பிறந்து, போய்-
(உடனே அவ்விடத்தைவிட்டு) நீங்கி, வளந்த பின் - (பின்பு ஒருத்திமகனாய்
ஓரிடத்தில்) வளர்ந்த பிறகு, பிறப்பு உணர்ந்த- (தன்) பிறப்பு வரலாற்றை
யறிந்துகொண்ட, பெருமன்உம் - சிறந்த அரசனான கர்ணனும்,- பறந்து போய்-
வேகமாகச்சென்று, நெடு பணி பதாகையானொடு - நீண்டபாம்மை யெழுதிய
கொடியையுடைய துரியோதனனுடன், எய்தினார்- சேர்ந்தார்கள்; ( எ -று.)

     நெடுமை - பணிக்கும், பதாகைக்கும் அடைமொழியாம், பிறப்பு உணர்ந்தது,
பாண்டவர்க்காகத் தூதுவந்தபொழுது கண்ணன் இரகசியமாகச்சொன்னதனாலும் ,
அதன்பின் அவன்கட்டளைப்படி குந்திவந்த கூறியதனாலும் என்க. பெருமன்-
பெருமானென்பதன் விகாரமுமாம். கண்ணன் பாண்டவர்க்குத் தூதாய்வந்தமைபற்றி
அவனையும், அவனுக்குத் தன்வீட்டில் இடங்கொடுத்து விருந்து செய்து
உபசரித்தமைபற்றி விதுரனையும், துரியோதனன் பலவாறு இராசசபையில் தூஷிக்க,
விதுரன் கடுங்கோபங்கொண்டு 'பாதகனாகிய உன்பொருட்டுப் போர்செய்யேன்:
இத்தனைநாளாய் உன் சோற்றயுண்டமைபற்றி உனக்கு எதிராகப் பாண்டவரோடு
சேர்ந்தும் பொரேன்' என்றுசொல்லித் தனது வில்லை இரண்டு துண்டாக
முறித்துப்போகட்டுவிட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் பல ராமனுடன்
சென்றிட்டானென்பது, கீழ்உத்தியோகபருவத்துவந்த வரலாறு. விதுரன் -
வில்முதலியபடைத்தொழில்களில் மற்றை யாவரினும் மிகவல்லவன்; இவனை,
யமதருமராசனதுஅமிசமென்றும், பரமபாகவதர்களில் ஒருவ னென்றும் நூல்கள்
கூறும்.                                                     (83)

39.-இரண்டுகவிகள்- புறங்கொடுத்துவந்ததுணர்ந்த துரியோதனன்,
சேனைகளை நெருங்கச்செல்ல ஏவித் தானும் பொரச்செல்லுதல் கூறும்.

வதிட்டனுந்துதிக்கும்வாய்மைவரிசிலைக்கைம்முனிவனோ
டுதிட்டிரன்புரிந்தபோருரைக்கவேயுணர்ந்துளான்
பதிட்டிதம்பிறந்ததின்றுபாண்டவர்க்குஞாலமென்
றதிட்டமொன்றுமுணர்கலானுமனிலவேகமாயினான்.

     (இ -ள்.) (துரியோதனனைச்சேர்ந்தஅரசர்கள்யாவரும்), வதிட்டன்உம்
துதிக்கும்- வசிஷ்டமகாமுனிவனுந் தோத்திரஞ் செய்யும் படியான, வாய்மை-
சத்தியவார்த்தையையும், வரி சிலை கை - கட்டமைந்தவில்லையேந்திய
கையையுமுடைய, முனிவனோடு- துரோணனுடனே, உதிட்டிரன் புரிந்த -
தருமபுத்திரன்செய்த, போர்- யுத்தத்தின்தன்மையை [துரோணனைத் தருமன்
வென்றதை], உரைக்கவே- சொல்லவே, உணர்ந்துளான்- (அதனை) அறிந்தவனாய்,
அதிட்டம் ஒன்றுஒம் உணர்கலான்உம் - வினைப்பயனைச் சிறிதும்
ஆலோசித்தறியாதவனான துரியோதனனும், 'இன்று-இப்பொழுது, பாண்டவர்க்கு -
பாண்டு புத்திரர்க்கு, ஞாலம் - பூலோகம், பதிட்டிதம் பிறந்தது -
நிலைநின்றதாய்விட்டது,' என்று- என்றுஎண்ணி, அனிலம் வேகம் ஆயினான் -
வாயுவேகமுடையவனாய் வந்தான்;