பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்71

தோடு, எறிய- வீச,-(எ -று.)-"அயிலதனை*** தறிவித்து" என வருங் கவியோடு
தொடரும்.

     உவமித்தல் - ஒத்தல் அவநீபதி- வடமொழித்தொடர்; பூமிக்குத் தலைவன்.
விலக=விலக்க. சந்தவின்பம் நோக்கிவந்தது, பி-ம்: அவனிபதிதன். அவன்மா.(105)

61.எறிகுற்ற வயிலசுரருயிர் செற்றவயிலதனையெதிர்முட்ட
                               விடுபகழியாற்,
றறிவித்துமகபதிதன்மகன் முக்கணிறைவனொடுசரி
                        யொத்துமுறுவல்புரியா,
வெறிமத்தகரடமுகபடமொத்தபுகர்கொண்முகவிகடக்கைம்
                            மலையணியெலா,
முறியத்தன்வரிவிலுமிழ்முனைபட்டபகழிமழைமுகில்
                          வற்கமெனமுடுகினான்.

     (இ-ள்.) மகபதிதன் மகன் -இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனன்,-
எறிகுற்றஅயில்- (பகதத்தன் கண்ணன்மேல்) எறிந்த ஆயுதமும், அசுரர் உயிர்
செற்ற அயில்-(முன்பு) அசுரர்களது உயிரை அழித்த வேலும் ஆகிய, அதனை- ,
எதிர் முட்டவிடு பகழியால்- எதிரிலே தாக்கும்படி பிரயோகித்த அம்புகளால்,
தறிவித்து -துண்டுபடச்செய்து,- முக்கண் இறைவனோடு சரி ஒத்து- மூன்று
திருக்கண்களையுடைய தலைவனான சிவபிரானுடன் மிகவும் ஒத்து, முறுவல்
புரியா -கோபநகை செய்து, வெறி- கோபாவேசத்தையும், மத்த கரடம்-
மதநீர்கொண்டகபோலங்களையும், முகபடம் ஒத்த புகர்கொள் முகம்-
முகபடாத்தைபோன்றசெம்புள்ளிகளைக் கொண்ட முகத்தையும், விகடம் -
மதமயக்கத்தையும், கை-துதிக்கையையுமுடைய, மலை- மலைபோன்ற (பகதத்தன்)
யானைகளின், அணிஎலாம்- வரிசைகள் யாவும், முறிய - அழியும்படி, தன் வரி
வில் உமிழ்- தனது கட்டமைந்தவில்லினால் வெளிவிடப்பட்ட, முனைபட்ட பகழி
மழை- கூர்மை மிக்கஅம்புமழையை, முகில் வற்கம் என- மேகக்கூட்டம்போல,
முடுகினான்- விரைவிற்செலுத்தினான்; (எ- று.)

     சிவபிரான் சிரித்துப் புரந் துடைத்ததனால்,' இறைவனோடு சரி யொத்து
முறுவல் புரியா' என்றார். சரியொத்து- முழுவதும் ஒத்து எனக் கருத்துக்
கொள்ளலாம். முகபடம் - யானைக்கு அலங்காரமாக முகத்தின்மேல் இடும்
போர்வை.முகத்தின் மேல் உத்தம விலக்கணமாகிய செம்புள்ளிகள் நிறைந்திருத்தல்,
செந்நிறப்பட்டாடைபோர்த்தது போன்ற உள்ளதனால், 'முகபடமொத்த புகர் கொள்
முகம்' எனப்பட்டது. அசுரர் - தேவர்க்கு எதிரானவர்; இச்சொல் பகைவருயிரைக்
கவர்பவ ரென்றுங்காரணப் பொருள்படும்: அஸு - உயிர். முனைபட்ட - பகழி -
போரில் மிகப்பயின்ற அம்பு எனினுமாம். எறி குற்றம் அயில் என்று பிரித்து -
நீங்கிய குற்றத்தையுடைய [குற்றம் நீங்கிய] வேல் என்றும் பொருள் கூறலாம்.
பி -ம்
:  பகழியிற். முகபட சித்ரபுகர்கொள்.                   (106)

62.அணிகெட்டுமதகரிகள்கரமற்றுவிழமுதியசிரமற்றுவிழ
                                  வருகுதாழ்,
மணியற்றவிழநெடியகுடரற்றுவிழமுறைகொள்வயிறற்று
                                விழவுடலெலாந்,
துணிபட்டு விழவிசிறு செவியற்று விழவலியதொடையற்று
                                விழமகரிகைப்,
பணிபெற்றபணைகளொடுபதமற்றுவிழவுழுதுபடுவித்தபல
                                     பகழியே.