(இ-ள்.) மத கரிகள் - மதயானைகள், அணி கெட்டு- ஒழுங்கு கெட்டு, கரம் அற்று விழ- துதிக்கையறுந்துவிழவும், முதிய சிரம் அற்று விழ- பழமையான[முற்றின வலிய] தலை யறுந்துவிழவும், அருகு தாழ் மணி அற்று விழ - பக்கங்களில்தொங்குகிற மணிகள் அறுந்துவிழவும், நெடிய குடர் அற்று விழ - மலைக் குகையை யொத்த [உள்விசாலமான] வயிறு அறுந்துவிழவும், உடல் எலாம் துணி பட்டு விழ - உடம்புமுழுவதும் துண்டாகி விழவும், விசிறு செவி அற்று விழ- (எப்பொழுதும்) வேகமாக வீசுகிற காதுகள் அறந்த விழவும், வலிய தொடை அற்று விழ - வலிமையுடைய தொடை யென்னும் உறுப்புக்கள் அறுந்து விழவும், மகரிகை பணிபெற்ற பணைகளொடு- பூணாகிய ஆபரணத்தைத் தரித்த தந்தங்களுடன், பதம் - கால்களும், அற்ற- அறுபட்டு, விழவும், பல பகழி - (அருச்சுனனது) அநேக அம்புகள், உழுது- நன்றாகப்பாய்ந்து, படுவித்த - அழித்தன; (எ -று.) பி -ம்: உடல்களும். (107) 63. அப்போது பகதத்தன் திருமால் தந்திருந்த வேலை எறிய, ஸ்ரீக்ருஷ்ணன் அதனை மார்பிலேற்றல். பெயர்பெற்றகரிவயவர் பிணமிக்கவமரினிடைபிறகிட்டு முறியுமளவே, சயசக்ரதரனையிவன் வழிபட்டபொழுதுதருதழலுக்ரமுடைய தொருவேல், வயமுற்ற சிலை விசயனுடலத்தினெறிவது தன் வடிவத்திலுறவுதவினா, னயர்வுற்றவுணர் வினலமென முத்தி முதல் வனெனவருகுற்றரதவலவனே. |
(இ-ள்.) (இங்ஙனம் எய்யப்பட்ட அருச்சுனனம்புகளால்), பெயர் பெற்ற கரி வயவர் - பிரசித்திபெற்ற யானை வீரர்கள், பிணம் மிக்க அமரினிடை- பிணங்கள்மிகுந்த அப்போர்க்களத்திலே, பிறகு இட்டு முறியம் அளவே - பின்னிட்டுஅழியும் அத்தருணத்தில்,- இவன்- பகதத்தன், சய சக்ரதரனை- வெற்றியையுடைய சக்ராயுதத்தை யேந்திய திருமாலை, வழிபட்ட பொழுது - (தான் முன்பு)பூசித்தகாலத்தில், தரு - (அப்பெருமானால் தனக்குக்) கொடுக்கப்பட்ட, தழல் உக்ரம்உடையது ஒரு வேல்- நெருப்புப்போலுங் கொடுமையுடையதொரு வேலாயுதத்தை,வயம் உற்ற சிலை விசயன் உடலத்தில் எறிவது- வெற்றிபொருந்தின வில்லையுடையஅருச்சுனனது உடம்பின்மேல் வீசியெறிய அவ்வேல், தன் வடிவத்திற் உற-(அவ்வருச்சுனனனுடம்பிற்படாமல்) தன் உடம்பிற்படும்படி[தன்மார்பிற்பொருந்துமாறுஏற்று],- முத்தி முதல்வன் என அருகு உற்ற - மோக்ஷத்துக்குத்தலைவனென்றுசொல்ல (அவ்வருச்சுனனது) சமீபத்திற் பொருந்திய, ரதம் வலவன்- தேர்ப்பாகனானஸ்ரீ கிருஷ்ணபகவான், அயர்வு உற்ற உணர்வின் நலம் என - மனக்கவற்சியிலுதவிய அறிவின் நற்பய னென்று சொல்லும்படி, உதவினான்- துணைசெய்தருளினான்; (எ-று.) பகதத்தன் தனக்கு முன்பு திருமால் கொடுத்திருந்ததொரு வேற்படையை அப்பொழுது அருச்சுனனைக் கொல்லும்படி அவன் மார்பின்மேலெறிய, அதனைத் திருமாலின் அவதாரமாகிய கண்ண |