65.- இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்: இதுதான் பகதத்தனுயிரைக்கவர்தற்குச் சமயமென்று ஸ்ரீகிருஷ்ணன் படைகொடுக்க, விசயன் அது கொண்டு பகதத்தனைக் களிற்றுச்சேனையொடு வீழ்த்தியமை கூறும். இதுநிற்க யமனைநிகர்பகதத்தனுயிர்கவரவிதுபக்வமென விசயனோடு, தரத்தின் முழுதுலகுடிவைத்தபுயலுரைசெய்துறுதிக்கண் விடுபகழிதா, னிதயத்தினுடனருளவுயர்வச்ரன்மதலைதொழுதிருபொற் கைம்மலர்கொடுகொளா, வதிரத்தனெதிர்களிறு பொரவிட்டநொடியில வனகலதினுருவவிடவே. |
(இ-ள்.) இது நிற்க-; உத்ரத்தில் முழுது உலகு குட வைத்த புயல் - (தனது) திருவயிற்றிலே உலகமுழுவதையுந் தங்கவைத்த மேகம்போன்ற கண்ணபிரான், விசயனோடு - அருச்சுனனுடன், யமனை நிகர் பகதத்தன் உயிர் கவர இது பக்வம் என உரைசெய்து - யமனை யொத்த பகதத்தனது உயிரை வாங்குதற்கு இது தக்க பொழுது என்றுசொல்லி, உறுதிக்கண் விடு பகழிதான் - தவறாதவிதத்திலே பிரயோகிக்கபடுவதான அம்பை, இதயத்தினுடன் அருள- திருவுள்ளத்தோடு (அவனுக்குக்) கொடுத்தருள,- உயர் வச்ரன் மதலை - சிறந்த இந்திரனது புத்திரனானஅருச்சுனன், தொழுது- (கண்ணனை) வணங்கி, இரு பொன் கை மலர் கொடு-அழகிய தாமரைமலர் போன்ற (தனது) இரண்டு கைகளாலும், கொளா-(அந்தஅம்பைப்) பெற்றுக் கொண்டு,- அதிர தன் எதிர் களிறு பொர விட்டநொடியில் - அதிர்ச்சியுண்டாம்படி தன்எதிரிலே யானையைப் போர்செய்தற்குச்செலுத்தின சமயத்தில், அவன் அகலத்தின் உருவ விட- அப்பகதத்தனது மார்பில்ஊடுருவிச் செல்லும் படி (அதனைக்) பிரயோகிக்க,- (எ -று.)-"பகதத்தனும் பட்டுஅவனூர்ந்த பகடும்பட்டு" என் மேல் 67-ஆங் கவியோடு இயையும். இங்கே கண்ணன் கொடுத்தது, தனது நாராயணாஸ்திரம்; "விரிகடல் வண்ணன்றன் வெவ்வாளி யேவப், புரிகடல்சூழ் பூதலத்துப்பொங்கிக்- கரியுண், மலைதுமிக்கு மால்யானை மன்னு பகதத்தன், தலைதுமியப் போயிற்றே தான்" என்றபாரதவெண்பாவை அறிக. யமன் என்ற வடசொல்- (பிராணிகளை) அடக்குபவனென்று பொருள்படும். யமனுவமை, தவறாமற் கொல்லுதற்கு. "ஒருகையாற் கொள்ளார் கொடாஅர் குரவர்க்கு" என்ப வாதலால், இருகைகொடு கொண்டான்; இங்ஙனகொள்ளுதல், உபசாரம். 'இருபொற்கைம்மலர்கொடு' என்பதை,மத்திமதீபமாக தொழுது என்பதனோடுங் கூட்டலாம். இதயம் - மனதில் தோன்'றும்அன்புக்கு ஆகுபெயர். பொற்கை- பொன்னாபரணமணிந்த கையுமாம். பி - ம் :பகழியொன்று. (110) 66. | பரிதத்த வருமிரத மிசைதத்த வெதிர்முடுகு பகதத்தனுடன் முழுதுநீ, டெரிதத்தி யுகுவதென வுகுவித்த குருதிநதியிடைதத்த வலிகெ ழுவுதோட், கிரிதத்த மகுடமொடு தலைதத்த வொருரசத |
|