பக்கம் எண் :

பன்னிரண்டாம் போர்ச்சருக்கம்75

                   திரிதத்த விழுவ தெனவே,
கரிதத்த மறியலகை கடைதத்தி யுவகையொடு
                     களமுற்று நடந விலவே.

     (இ -ள்.) பரி - குதிரைகள், தத்த - தாவிச்செல்ல, வரும் - வருகிற,
இரதம்மிசை - (அருச்சனனது) தேரின்மேல், தத்த - பாயும்படி, எதிர் முடுகு -
எதிரிலே (யானையோடு) விரைந்துவருகிற, பகதத்தன்- பகதத்தனது, உடல்
முழுவதும்எம்- உடம்புமுழுவதிலும், நீடு எரி தத்தி உகுவது என - மிக்க
நெருப்புப்பற்றிச் சிந்துவதுபோல, உகுவித்த - சொரிவித்த, குருதி நதி -
இரத்தவாறு,இடைதத்த - அவ்விடத்திலே பெருகவும், வலி கெழுவு தோள்
கிரி - பலம் மிக்கமலைகள் போன்ற தோள்கள், தத்த - ஒடியவும், மகுடமொடு
தலை தத்த -கீரீடத்தோடு தலை சிதறவும், ஒரு ரசத கிரி தத்தி விழுவது என -
வெள்ளிமலையொன்று முறிந்துவிழுவதுபோல, கரிதத்த - (வெள்ளை) யானை
இறந்துவிழுவும், மறிஅலகை- (எதிர்ப்பட்டாரை) அகப்படுத்துந்தன்மையுள்ள
பேய்கள், கடை தத்தி-அவ்விடத்தில் நெருங்கி, உவகையொடு - மகிழ்ச்சியுடனே,
களம் முற்றுஉம்-போர்க்களம் முழுவதிலும், நடம் நவில - கூத்தாடவும், -
(எ - று.)-" பகதத்தனும்பட்டு அவனூர்ந்த பகடும் பட்டு" என அடுத்த
கவியோடு தொடரும்.

     'தத்த' என ஒருசொல்லே பலவிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலையணி.
'வினைப்பகுதிகள் வேண்டியபொருளை விளைக்கும்' என வடநூலார் கூறிய
நியாயத்தால், இக்கவியில் 'தத்த' என்னுஞ்சொல்லுக்கு - சந்தர்ப்பத்திற்குஏற்பப் பல
பொருள் உரைக்கப்பட்டது. ரஜதம், நடம் - வடசொற்கள். பி -ம்: கெழுபுயக்.  (111)

வேறு.

67. பகதத் தனும்பட் டவனூர்ந்த பகடும் பட்டுப்புடைசூழச்
சிகரக் கிரிபோ லணிநின்ற சேனைக் களிறும்
                                 பட்டமைகண்
டிகலிற்பொழிகார்வெஞ்சிலைக்கையிமையோர்தலைவன்
                                 குமரனையும்
புகழ்தற் கரிய பாகனையும் புகழா ரில்லைப் பூபாலர்.

     (இ-ள்.) (அருச்சுனன்னெய்த கண்ணனம்பினால்), பகதத்தனும்--, பட்டு -
இறந்து, அவன் ஊர்ந்த பகடுஉம் - அவன் ஏறிச்செலுத்திய சுப்பிரதீக யானையும்,
பட்டு - இறந்து, புடை சூழ - (அவனது) பக்கங்களிற் சுற்றிலும், சிகரம் கிரி
போல் -உச்சியையுடைய மலைகள்போல, அணி நின்ற - ஒழுங்கு படநின்ற,
சேனைகளிறுஉம் - சேனையாகவுள்ள யானைகளும், பட்டமை - இறந்ததை,
கண்டு -பார்த்து, - பூபாலர் - அரசர்கள்,- இகலின் பொழி - வலிமையோடு
மழைபொழிகிற,கார் - காளமேகம்போன்ற, வெம் சிலை கை இமையோர் தலைவன்
குமரனைஉம் -கொடிய வில்லை ஏந்திய கையையுடைய தேவராசகுமாரனான
அருச்சுனனையும்,புகழ்தற்கு அரிய பாகனை உம் - துதிக்க முடியாத [அளவிறந்த
மகிமையுடைய]பார்த்தசாரதியான கண்ணனையும், புகழார் இல்லை - கொண்டாடிப்
பேசாதாரில்லை;(எ - று.)