கர்ணன் எப்பொழுதும் தன்னைத் தான் மேலாகநினைக்கும் பெருஞ் செருக்குடையவ னாதலால், இங்ஙனஞ் செய்தான். மதியாமல் என்ன என்று இயைத்துஉரைத்தலும் ஒன்று. நிலையானது என்றது, பிறகுறிப்பு வகையால், நிலைப்படாதுபோனதைக் குறிக்கும்; ஏ - இகழ்ச்சி. 'வணங்காதவர்க்கு என்றும் இடியேறனான்' என்பதை, அடுத்தபாட்டில் வரும் 'குரு' என்பதற்கு அடைமொழியாக்கி, குளகமாக்கொள்ளினும் அமையும். (129) 85.- இதுமுதல் ஏழு கவிகள் - துரோணன் கூறும் எதிர்மொழியைத் தெரிவிக்கும். தெருமந்தசிந்தைச்சிலைக்கைக்குருக்கண்சிவப்பேறவே யுருமுந்திகைக்கக்கொதித்தங்கர்பதியோடுறக்கூறுவான் கருமந்தவாவிற்றிறற்கன்னனேயல்லகழன்மன்னரிற் றருமன்றன்முன்னிற்கவல்லார்கள்யாரித்தளந்தன்னிலே. |
இதுவும். அடுத்த கவியும் - ஒருதொடர். (இ -ள்.) (அதுகேட்டு), தெருமந்த- கலங்கின, சிந்தை- மனத்தையுடைய, சிலைகை குரு- விற்பிடிக்குங் கையையுடைய துரோணன், கண் சிவப்பு ஏற - கண்கள்செந்நிறம் மிகவும், உரும்உம் திகைக்க - இடியும் அஞ்சித் திடுக்கிடவும், அங்கர்பதியோடு- அங்கநாட்டார்க்கு அரசனான கர்ணனுடன், கொதித்து - கோபித்து, உற கூறுவான்- பொருந்த உத்தரஞ் சொல்லுவான்:- கருமம் தவா - செய்யுந்தொழில் தவறாத, வில் திறல் - வில்வன்மையையுடைய, கன்னன்ஏ அல்ல- கன்னன்மாத்திரமே யல்லன்: இ தளந்தன்னில் - இந்தப்பக்கத்துச் சேனையிலுள்ள, கழல் மன்னரில் - வீரக்கழலையுடைய அரசர்களில், தருமன்தன் முன் நிற்க வல்லார்கள் யார் - யுதிட்டிரனது முன்னிலையில் (எதிர்த்து) நிற்கவாயினும் வல்லமையுடையார் எவர்?(எ - று.) 'கருமந்தவாவிற்றிறல்' என்ற அடைமொழிகளைக் கர்ணனுக்குத் துரோணன் கொடுத்தது, அவன் அங்ஙனம் தன்னைத் தானே கருதி நன்குமதித்துச் செருக்கிநிற்கிறானென்பதை வெளியிடுதற்கு; இகழ்ச்சியுமாம். உருமும், உம் - உயர்வுசிறப்பு. கன்னனே, ஏ- பிரிநிலையோடு உயர்வுசிறப்பு. பி-ம்: வன்றிறல்.(130) 86. | இன்றல்லநாளைக்குமாநின்னவைக்கண்ணிருந்தோர்களிற் சென்றல்லலுறமோதியறனமைந்தனைத்தங்கள்சிலையாண்மையால் வென்றல்லதணுகாதவீரர்க்குவிடைநல்குவிறன்மன்னநீ நன்றல்லவீரத்திலோரஞ்சொலுவதென்றுநனிசீறினான். |
(இ-ள்.) இன்று அல்ல- இன்றைக்கே அன்று; நாளைக்கு உம் ஆம் - நாளைக்காயினும் (தருமனைப்பிடிக்க முயலல்) ஆம்; விறல் மன்ன- வெற்றியையுடைய அரசனே! நின் அவைக்கண் இருந்தோர்களில்- உனது சபையிலுள்ளவர்களுள், சென்று- (எதிர்த்துப்) போய், அறன் மைந்தனை - தரும புத்திரனை, அல்லல் உற மோதி- துன்பமுண்டாம்படி தாக்கி, தங்கள் சிலை ஆண்மையால் - தங்கள் வில்லின் திறத்தால், வென்று அல்லது அணுகாத- சயித்தல்லது திரும்பிவராத, வீரர்க்கு-, நீ-, விடை நல்கு அனுமதி கொடுப் |