பாய்; வீரத்தில் - பராக்கிரமவிஷயத்தில், ஓரம் சொலுவது - (ஒருவரை ஒருவர்) பக்ஷபாதமாக (நிந்தித்துப்) பேசுவது, நன்று அல்ல- நல்லதன்று, என்று- என்றுசொல்லி, நனி சீறினான்.- மிகக்கோபித்தான்; (எ -று.) மன்ன- துரியோதனனை நோக்கிய விளி. இன்றல்ல நாளைக்குமாம்- நேற்றுச்சொன்னபடி இன்றைக்கு நான் தருமனைப்பிடிக்க முடியாமற் போய்விட்டாலும்,கர்ணன்போன்றவர் எவரேனும் இன்ற சபதஞ்செய்து அங்ஙனமே நாளைக்குநிறைவேற்றப்பார்க்கலாமென்றவாறு. நாளைக்கு மா எனப்பிரித்து, நாளைக்குஎன்பதை 'சென்று' என்பதனோடும், 'மா'என்பதை 'அவை' என்பதோடும்இயைத்தலுமாம். சிலைக்கைக்குரு (85) சீறினான் (86) என இயையும். 'அல்ல' -ஒன்றன்பாலுக்கு வந்தது. பி-ம்: அறன்மன்னனை. (131) 87. | வில்லாண்மை யாவர்க்கு மின்றென்றெனைப்போல மிகுவஞ்சினஞ், சொல்லாம லறன் மைந்தனைப் போர்மலைந்துங் கடோ வாணமையால், வல்லாரினிக்கொண்டு வம்மின்கள் வந்தாலிம்மண் ணொன்றுமோ, அல்லாதவுலகிற்குமிருநாலுதிக்கிற்குமவர்வீரரே. |
இதுமுதல் ஐந்து கவிகள் - ஒருதொடர். (இ-ள்.) 'யாவர்க்குஉம்- (என்னையொழிய வேறு) எவருக்கும், வில் ஆண்மைஇன்று - வில்லின் திறமை இல்லை,' என்று-, எனை போல - யான் சபதஞ்செய்ததைப்போல மிகு வஞ்சினம் சொல்லாமல் - மிக்க சபதவார்த்தைகளைக் கூறாமலே,- வல்லார்- வல்லவர்கள் உங்கள் தோள் ஆண்மையால் - உங்களது புசபராக்கிரமத்தால், போர் மலைந்து - போர்செய்து, அறன் மைந்தனை- தருமபுத்திரனை, இனி-, கொண்டு வம்மின்கள் - பிடித்துக்கொண்டு வாருங்கள்; வந்தால் (அவ்வாறு) வந்தால்,- அவர்- அப்படிக் கொண்டு வருபவரே,- இ மண் ஒன்றும்ஓ - இந்தப்பூலோகமொன்றுக்கு மாத்திரமோ, அல்லாத உலகிற்குஉம்- மற்றையுலகங்களுக்கும், இரு நாலு திக்கிற்குஉம்- எட்டுத்திக்குக்களுக்கும், வீரர்- (சிறந்த) வீரராவர்; (எ-று.) நான் நேற்றுச்சபதஞ்செய்து இன்று தவறிப்போனே னென்று இகழ வேண்டா; உங்களில் வல்லவர் எவரேனும் முந்திச் சபதஞ் செய்யாவிடினும், நாளைமுதல் என்றைக்காவது தருமனைப் பிடித்து வருக; வந்தால், அவனின் மிக்கவீரன் எவ்வுலகத்தினு மில்லை யென்பதாம். தான் தருமனை நாளையகப் படுத்துத் தரலா மென்று முந்தினநாட்சொல்லியதை, 'வில்லாண்மை வேறு யாவர்க்கும் இல்லை யென்று எண்ணிச் சபதஞ்செய்ததாகக் கண்ணன் கருதினானென்று உட்கொண்டு' வில்லாண்மையாவர்க்குமின்றென்று எனைப்போல மிகுவஞ்சினஞ் சொல்லாமல் என்றுநீட்டூரமாகத் துரோணன் கூறுகிறான்; இனி, 'என்னைப்போலயாவர்க்கும் வில்லாண்மையின்று' என்று பெருஞ்சபதம்பேசாமல் என இயைத்துக் கூறினுமாம், வல்லார் - வல்லவர்களே! என அண்மைவிளியுமாம், பி-ம்: என்றனைப்போல. அவன் வீரனே. (132) |