றும் என்னோடு போர்செய்ததை ( க் கூறினால்), என் வாளி- யான் எய்தஅம்பு, வித்து ஒத்தது- விதையைப்போன்றது; அவன் விட்ட-, வடி வாளி - கூரிய அம்பு, விளைவு ஒத்தது- விளைச்சலைப் போன்றது; (எ - று.) யான் ஒரம்பு எய்தால் அதற்கு எதிராக அவன் பல அம்புகளை எய்திட்டனனென்பதாம். ஒருவிதை பலவிதைகளுண்டாம்படி விளைதலின், வித்தையும்விளைவையும் உவமைகூறினார். தொடை என்பதற்கு - அம்பென்று பொருள்கூறினால், ஒத்த அளவு என எடுத்து- சாஸ்திரவிதியோடு ஒத்துள்ள[மாறுபடாத]அள வென்க. ஒத்த புரவி- நூல்முறைமைக்குத் தக்க குதிரை யெனினுமாம்.சாதித்தல்- தொடங்கியதைச் சோர்வின்றி நிறைவேற்றலுமாம். ஒத்தல் - உவமித்தலும்,பொருந்தலும். பி - ம்: குதையொத்தவந்து. (134) 90. | வன்மைக்கு வயவீமன் வின்மைக்கு முகிலூர்தி மகனன்றிவே, றின்மைக்கு மாவிந்தை கிரிகன்னிகரியென்ப ரெம்மன்னரும், வின்மைக்கும்வன்மைக்கு மிளையோரையனையாரை மிக வெண்ணலாந், தன்மைக்குநிலையான தருமற்குநிகர்யார் தனித்தெண்ணவே. |
(இ-ள்.) 'வன்மைக்கு - வலிமையில், வய வீமன் - வெற்றியையுடைய வீமசேனனும், வின்மைக்கு - வில்லின்திறத்தில், முகில் ஊர்தி மகன்- மேகங்களை வாகனமாகவுடைய இந்திரனுக்குக் குமாரனான அருச்சுனனும், அன்றி - அல்லாமல், வேறு இன்மைக்கு- வேறு (எவரும் சிறந்தவர்) இல்லாமைக்கு, கிரி கன்னி- இமயமலையின்மகளான பார்வதியினமிசமான, மா விந்தை- சிறந்த துர்க்கை, கரி - சாக்ஷி,' என்பர் எ மன்னர் உம்- என்று எல்லா அரசரும் கூறுவர்; வின்மைக்குஉம்- வில்லின் திறத்திலும், வன்மைக்கு உம்- வலிமையிலும், இளையோரை அனையாரை - தம்பிமார்களான வீமஅருச்சுனர்களைத் தனித்தனியொக்கும் வீரரை, மிக எண்ணல் ஆம்- (உலகத்தில்) மிகுதியாகக் (குறித்துக்) கணக்கிடலாம்; தன்மைக்கு - (வின்மை வன்மை என்ற அவ்விரண்டு) தன்மைகளிலும், நிலை ஆன - உறுதிபெற்ற, தருமற்கு - யுதிட்டிரனுக்கு, தனித்து எண்ண- தனியேகுறித்துக் கணக்கிட, நிகர் யார் - ஒப்பாகுபவர் யார்? [எவருமில்லை என்றபடி]; (எ - று)- இது, துரோணன் தான் சொந்த அபிப்பிராயத்தை வெளியிட்டது. வீம அருச்சுனர்க்கு ஒப்புமை கிடைத்தல் கூடும்; தருமனுக்குக் கிடைக்காது என்க. முகில்ஊர்தி - அன்மொழித்தொகை; மேகங்களை இந்திரனுக்கு வாகன மென்றல், மரபு. போருக்குஉரியதேவதை துர்க்கை யாதலால், அவள் சாட்சியெனப்பட்டாள். விந்தியமலையில் வீற்றிருத்தல் பற்றி, துர்க்கைக்கு 'விந்தை' என்ற பெயர்; விந்த்ய வாஸிநீ' என்பர் வடமொழியாரும்: உமாதேவி தக்ஷகன்னிகையாயிருந்த உடம்பைத் துறந்து, தன்னை மகளாகப்பெரும் பொருட்டுப் பலநாளாகத் தவம்புரிந்துவந்த பர்வதராசனுக்குப் பெண்ணாகத் |