தென்திசையி லென முதனூலால் தெரிகிறது. மத்தக மா - மஸ்தகத்தையுடைய மிருகம்; எனவே, யானையாம். நான்மை என்றது - எண்ணையே உணர்த்திற்று. (146) 9.- அருச்சுனன் அம்புமழைபொழிய, மாற்றார்சேனை யுடைதல் மால்விடுதேர்மிசையான்வரிசாபம்வளைத்ததுமல்லிகல்வெங் கோல்விடுபூசலும்வில்லுடனேபொழிகொண்டல்வியப்பெனலா மேல்விடுதேர்களும்யானையும்வாசியும்வீரருமெய்யுருவக் கால்விடுதாரையெழுஞ்சருகென்னவுடைந்தனர்கையறவே. |
(இ-ள்.) மால் - திருமால், விடு - செலுத்துகிற, தேர்மிசையான் - தேரின்மீது உள்ளவனான அருச்சுனன், வரி சாபம் வளைத்ததுஉம்- கட்டமைந்த வில்லை வணக்கினதையும், மல் இகல் - வலிமையோடு பராக்கிரமித்துச் செய்த, வெம் கோல் விடு பூசல்உம்- கொடிய அம்புகளைப் பிரயோகிக்கிற போரையும், வில்லுடனே பொழி கொண்டல் வியப்பு எனல் ஆம்- இந்திரவில்லோடு (கூடி) மழை பொழிகிற காளமேகத்தின் அதிசயிக்கத்தக்க தன்மை யென்று சொல்லலாம்; மேல் விடு- அவன்மேல் ( எதிர்த்துச்) செலுத்தப்படுகிற, தேர்களும்-, யானைஉம்- யானைகளும், வாசிஉம் - குதிரைகளும், வீரர்உம் - காலாள்வீரர்களும், மெய் உருவ - (அவ்வம்புகளால்) உடல் துளைபட, கால் விடு தாரை எழும் சருகு என்ன- காற்றுவீசுகிற வேகத்தால் மேலெழுகிற உலர்ந்த இலைகள்போல, கை அற - செய்ததொழி லொன்று மில்லாமல், உடைந்தனர் - தோற்று அழிந்தனர்; ( எ-று.) முதல்வாக்கியத்தில், காளமேகம் - அருச்சுனனுக்கும், இந்திரவில் - அவனது காண்டீவவில்லுக்கும், நீர்மழை - அம்புமழைக்கும், இரண்டாம் வாக்கியத்தில், காற்றின்வேகம்- அம்பின் வேகத்துக்கும், சருகு- சேனைக்கும் உவமையாம். தேர்களும் யானையும் வாசியும் வீரரும் உடைந்தனர் - அஃறிணையும் உயர்திணையும் எண்ணி, சிறப்பினால் உயர்திணைமுடி பேற்றன. இகல்பூசல் - வினைத்தொகை. இனி, மல்லிகல்- ஒருபொருட்பன்மொழி யென்றலும் ஒன்று: மிக்கவலிமை யென்க. 'மல்லிகைவெங்கோல்' என்ற பாடத்துக்கு - (மன்மதனது மலரம்பு ஐந்தனுள் மோகத்தையுண்டாக்குகிற.) நவமல்லிகையம்புபோலக் கொடிய அம்பு என்க. தாரை - ஒழுங்குமாம். பி -ம்: மெய்யுருவி. (147) 10.- இதுவும் அது. பட்டவரெத்தனையாயிரர்நின்றுபடாமலுயிர்ப்புடன்வென் னிட்டவரெத்தனையாயிரரஞ்சலினேகுகவென்றமர்வாய் விட்டவரெத்தனையாயிரர்தங்குலமேன்மையும்வெந்திறலுங் கெட்டவரெத்தனையாயிரரன்றுகிரீடிதொடுங்கணையால். |
(இ-ள்.) அன்று - அப்பொழுது, கிரீடி தொடும் கணையால் - அருச்சுனன் எய்த அம்புகளால், பட்டவர் - இறந்த பகைவீரர் எதனை ஆயிரர் - மிகப்பலவாயிரந்தொகை யுடையார்; நின்று- ( எதிரில் நிலைத்து) நின்று, படாமல் - இறவாமல், உயர்ப்புடன்- உயிருடனே, வென் இட்டவர்- முதுகு கொடுத்தவர்கள், எத்தனை |