பக்கம் எண் :

104பாரதம்கன்ன பருவம்

கர்ணனை மத்திரம் தலைவன் - மத்திர நாட்டாரசனான சல்லியன், தேற்ற -
மூர்ச்சைதெளியச்செய்ய,-ஏழ் பரி தேரோன் மைந்தன் - ஏழுகுதிரையையுடைய
தேரையுடைய சூரியனது மகனான கர்ணன், பின்-பின்பு எழுந்து - எழுந்திருந்து,
சாபம் வாங்கி - வில்லை வளைத்து, சூழ் படை வீரர் யார்உம் - சூழ்ந்த
சேனையிலுள்ள வீரர்களெல்லாம், துஞ்சிட - இறக்கும்படி, துணித்திட்டான் -
பிளந்துவிட்டான்; ( எ - று.)                                  (190)

100.- கர்ணனம்பால் மிகப்பலவீரரும்
சிங்கசேனன்முதலிய பாஞ்சாலரெழுவரும் மாய்தல்.

கைத்தலவண்மைவேந்தன்கார்முகம்பொழிந்தவம்பா
லெத்தனைநிருபர்மாய்ந்தாரெண்ணுதற்கியாவர்வல்லார்
பத்திகொள்சாதுரங்கப்படைஞர்பாஞ்சாலர்தம்மிற்
செத்தனரெழுவர்சிங்கசேனனையுள்ளிட்டாரே.

     (இ-ள்.) கைத்தலம் - கைகளினாற் செய்கிற, வண்மை - தானத்தையுடைய,
வேந்தன் - கர்ணனது, கார்முகம் - வில், பொழிந்த - சொரிந்த, அம்பால் -
அம்புகளினால், எத்தனை நிருபர் மாய்ந்தார் - எத்தனை அரசர்கள் இறந்தார்கள்?
எண்ணுதற்கு  யாவர் வல்லார் - (இறந்தவர்களைக்) கணக்கிடவல்லவர்கள் யாவர்?
பத்தி கொள் - வரிசையைக்கொண்ட, சாதுரங்கம் படைஞர் - சதுரங்கசேனையை
யுடையவர்களாகிய, பாஞ்சாலர் தம்மில் - பாஞ்சால நாட்டரசர்களுள்,
சிங்கசேனனைஉள்ளிட்டார் - ஸிம்ஹசேனனுட்பட்டவர்களாகிய, எழுவர் -
ஏழுபேர், செத்தனர்-;(எ-று.)- எழுவர்-சிங்கசேனனும், 83-அம் கவியிற் கூறிய
அறுவரும்எனத்தோன்றுகின்றது.                                (191)

101.-வீமனும் சேனையோடுபுறக்கிட அருச்சுனன் அங்கு
வந்துசேர்தல்.

சேனையுமுரிந்துவீமசேனனுமுதுகிட்டோட
கானமர்துளவோன்கண்டுகடும்பரிநெடுந்தேர்தூண்ட
யானைமேற்சிங்கஞ்செல்வதென்னவந்தெய்தியிட்டான்
வானவர்க்கரசன்மைந்தன்மைந்துடைவரிவில்லோனே.

     (இ-ள்.) சேனையும்-, முரிந்து - அழிந்து, வீமசேனனும் முதுகிட்டுஓட-, கான்
அமர் துளவோன் - காட்டிற்பொருந்திய திருத்துழாய்மாலையையுடைய கண்ணன்,
கண்டு-, கடு பரி நெடு தேர் தூண்ட -  விரைந்தோடுகிற குதிரைகளைப் பூட்டிய
பெரிய தேரை ஓட்ட, வானவர்க்கு அரசன் மைந்தன் - தேவேந்திரனது குமாரனும்,
மைந்து உடை வரி வில்லோன் - வலிமையையுடைய கட்டமைந்த
வில்லையுடையவனுமாகிய அருச்சுனன், யானைமேல்-, சிங்கம்-, செல்வது என்ன-
(போருக்குப்) போவதுபோல, வந்து எய்திட்டான் - (கர்ணன்மேல்) வந்துசேர்ந்தான்;
(எ - று.)                                                      (192)

102.- அருச்சுனகர்ணரின் அம்புகள் வானத்தைமூடுதல்.

சென்றவன் சேனைதன்னினிருபருஞ்செருச்செய்கிற்பா
னின்றவன்சேனைதனனினிருபருதேர்ந்தகாலை